காசநோய் இல்லா இந்தியா இயக்கத்தின் கீழ் 100 நாள் தீவிர பிரச்சாரம், மக்கள் பங்களிப்பு உணர்வுடன் காசநோய் ஒழிப்புக்கான ஒன்றுபட்ட அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டாகும். புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற காசநோய் இல்லா இந்தியா (100 நாட்கள் தீவிர பிரச்சாரம்) இயக்கத்திற்காக 21 அமைச்சகங்களுடன் கூட்டு உத்தி சார்ந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே. பி. நட்டா இதனைத் தெரிவித்தார். மத்திய …
Read More »மருந்தியல், ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டின் செயல்பாடுகள்
இந்த ஆண்டில் ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்து உற்பத்தித் துறையின் முக்கிய சாதனைகள் பின்வருமாறு பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் என்பது அத்துறையின் முன்னோடித் திட்டமாகும். இதன் மூலம் தரமான மருந்துகள், மலிவு விலையில் மக்கள்மருந்தக மையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த திட்டம் நாட்டின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. 30.11.2024 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 14,320 மக்கள் மருந்தகங்கள் …
Read More »கிராமப்புற, பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக-பொருளாதார மாற்றத்திற்கு முக்கியமானதாகும்: மக்களவைத் தலைவர்
பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமையும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். தூய்மையான குடிநீர், துப்புரவு, கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய கைவினைப் பொருட்கள், ஆன்லைன் வர்த்தகங்கள், உள்ளூர் உற்பத்தி …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து …
Read More »டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்
அறிமுகம் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விதிகள் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP சட்டம்), டிஜிட்டல் தனிநபர் தரவைப் பாதுகாப்பதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப செயல்பட முயல்கின்றன. எளிமை மற்றும் தெளிவுடன் வடிவமைக்கப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களை மேம்படுத்தும் வகையில் விதிகள் …
Read More »தில்லியில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025ஐ குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்
2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி தில்லி கண்டோன்மென்ட் நகரில் தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம்-2025 ஐ குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 17 என்சிசி இயக்குநரகங்களில் இருந்து 917 பேர் உட்பட 2361 கேடட்கள் 27 ஜனவரி 2025 அன்று பிரதமரின் பேரணியுடன் …
Read More »ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிராந்தியத்தில் இணைப்பை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். தெலுங்கானாவில் சர்லபள்ளி புதிய டெர்மினல் ஸ்டேஷனை திறந்து வைப்பதோடு, கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பதான்கோட் – ஜம்மு …
Read More »தேசிய மாற்றத்தின் அடித்தளமாக ஐந்து உறுதிமொழிகளை குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நமது தேசிய மாற்றத்தின் அடித்தளம் சமூக நல்லிணக்கம், குடும்ப அறிவொளி, சுற்றுச்சூழல் உணர்வு, சுதேசி மற்றும் குடிமைக் கடமைகள் ஆகிய ஐந்து சக்திவாய்ந்த தூண்களில் தங்கியுள்ளது. இந்த ஐந்து தீர்மானங்கள்-நமது பஞ்சபிரான்-நமது சமூகத்தின் நரம்புகளில் பாய்ந்து, தேசியவாதத்தின் வெல்லமுடியாத உணர்வை வளர்க்கிறது. தனிப்பட்ட பொறுப்பு, பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு ஆகியவற்றை கலாச்சார பெருமை, ஒற்றுமை மற்றும் தன்னம்பிக்கையுடன் இணைக்கும் …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப் பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் …
Read More »மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) 67-வது நிறுவன தினத்தை போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொண்டாடுகிறது
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் 67-வது நிறுவன தினத்தை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ ) இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி) ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டிஆர்டிஓ ஆர் & டி செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், புது தில்லியில் உள்ள எஸ் கோத்தாரி அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் …
Read More »
Matribhumi Samachar Tamil