Tuesday, April 21 2026 | 11:06:42 PM
Breaking News

National

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அபிவிருத்தி முகமை யின் 2025-ம் ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வை: சந்தைப்படுத்துதலில் புத்தாக்கங்கள், சில்லறை விற்பனைக்கான ஊக்கம், உலகளாவிய விரிவாக்கம்

2025-ம் ஆண்டு புத்தாண்டு தினத்தையொட்டி, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு பிரதீப் குமார் தாஸ், அனைத்து தொழிலாளர்களிடமும் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். அந்நிறுவனத்தின் நிதித்துறை இயக்குநர்  டாக்டர் பிஜய் குமார் மொஹந்தி, தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான நிதியுதவி குறித்த நடவடிக்கைகளில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை  நம்பிக்கை கொண்டுள்ளதாக திரு தாஸ்  தெரிவித்துள்ளார். பசுமை அமோனியா, நீர்மின் திட்டங்கள், சூரிய சக்தி உற்பத்திக்கான  தகடுகள்   பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு, மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தி திட்டங்களுக்கு சந்தை ஆதரவை வழங்குவதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை  ஊக்குவிப்பதில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் செயல்பாட்டை அவர் எடுத்துரைத்தார். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்க நடவடிக்ககள் குறித்து எடுத்துரைத்த திரு தாஸ், அந்நிய செலாவணி நிதியுதவி மூலம் பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கான உபகரணங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறினார்.   வீடுகளின் மேற்கூரைகளில் சூரிசக்தி தகடுகள் அமைக்கும் பிரதமரின் திட்டம், பிரதமரின் வேளாண் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுத்  திட்டங்களின் கீழ் சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும்  மின்சார வாகனங்கள்,  எரிசக்தி சேமிப்பு, பசுமை தொழில்நுட்பங்கள், திறன் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க  எரிசக்தி துறையில் வளர்ந்து வரும் பிரிவுகளிலும் கவனம் செலுத்தும்.

Read More »

ஜல் சக்தி அமைச்சகம் ஜல்சக்தி மற்றும் துப்புரவு துறை 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

தூய்மை இந்தியா இயக்கம் – ஊரக வளர்ச்சி தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான  2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதன் மூலம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம் மத்திய அரசின் நிதியுதவியுடன் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இதன் விளைவாக, 2019-ம் ஆண்டு …

Read More »

ஒரே நாடு ஒரே சந்தா

பண்டைய அறிவு மற்றும் வளமான பாரம்பரியம் கொண்ட நாடான இந்தியா, எப்போதும் புதுமை மற்றும் கண்டுபிடிப்பின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. கணிதம் மற்றும் வானியலில் முன்னோடியாக இருப்பது முதல் அறிவியலின் பல்வேறு துறைகளில் அற்புதமான பங்களிப்புகள் வரை, நாட்டின் அறிவுசார் சாதனைகளின் மரபு வரலாறு என்பது ஒப்பிடமுடியாதது. ஆகஸ்ட் 15, 2022 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, செங்கோட்டையின் கொத்தளங்களில் இருந்து, இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தையும், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் …

Read More »

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்

புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் அனைத்து செயலாளர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பல்வேறு திட்டங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்னோக்கி செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் நடைபெற்றது. தற்போது நடைமுறையில் உள்ள மற்றும் எதிர்கால சீர்திருத்தங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், 2025-ம் ஆண்டை பாதுகாப்பு அமைச்சகத்தில் ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைபிடிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக …

Read More »

குடியரசு தின அணிவகுப்பு, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை நாளை (ஜனவரி 02, 2025 ) தொடங்குகிறது

குடியரசு தின அணிவகுப்பு – 2025, பாசறைத் திரும்பும் நிகழ்வு ஆகியவற்றை  காண்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஜனவரி 02-ம் தேதி தொடங்குகிறது. கட்டணச்சீட்டு  விவரம் பின்வருமாறு: வ. எண் நிகழ்ச்சி கட்டணச்சீட்டு மதிப்பு அட்டவணை 1. குடியரசு தின அணிவகுப்பு (26.01.2025) ரூ.100/- & ரூ.20/- 2025-ம் ஆண்டு ஜனவரி 02 முதல் 11 வரை –காலை 9.00 மணி முதல் அன்றைய இருக்கைகள் தீரும் வரை. 2. பாசறை திரும்பும் நிகழ்வு (முழு ஒத்திகை 28.01.2025) ரூ.20/- 3. பாசறை திரும்பும் நிகழ்வு (29.01.2025) ரூ.100/- கட்டணச் …

Read More »

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22 முதல் 2025-26 வரை 69,515.71 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும். இது தவிர, இத்திட்டத்தை …

Read More »

டை-அம்மோனியம் பாஸ்பேட்டுக்கான ஒரு முறை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

விவசாயிகளுக்கு மலிவு விலையில் டை-அம்மோனியம் பாஸ்பேட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 01.01.2025 முதல் மறு உத்தரவு வரை என்.பி.எஸ் மானியத்தில்  ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3,500 என்ற தொகைக்கும் அப்பால் டிஏபி மீதான ஒரு முறை சிறப்பு தொகுப்பை நீட்டிப்பதற்கான உரங்கள் துறையின் முன்மொழிவுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. பி&கே உரங்களுக்கான மானியம் 01.04.2010 முதல் என்பிஎஸ் திட்டத்தின் கீழ் …

Read More »

விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்

2025-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்  தளப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது: “விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில்  மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது …

Read More »

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆண்டு இறுதி அறிக்கை 2024 பகுதி-2

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்  2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க கொள்கை முன்முயற்சிகள்/திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது புத்தாக்கங்களை வளர்த்தெடுப்பது, நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அக்டோபர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் விரிவான ஒழுங்குமுறை உத்தரவின் கீழ் சிசிடிவி  கேமராக்களுக்கான விதிமுறைகளை புதுப்பித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அல்லது விற்கப்படும் அனைத்து சிசிடிவி கேமராக்களும்  பாதுகாப்பு, அணுகல் …

Read More »

இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் “பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

  இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள்/கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம், ஆய்வகச் சேவைகளின் நலன், நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இது சம்பந்தமாக, இந்திய தர நிர்ணய அமைவனம், சென்னை கிளை அலுவலகம்,” ” பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியத் தரநிலைகளின் பங்கு – குறிப்பாக இஞ்சி, வசம்பு ” குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு சென்னையில் இன்று ஏற்பாடு செய்துள்ளது.   இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய விஞ்ஞானி-F/மூத்த இயக்குனர், தலைவர் (சென்னை கிளை அலுவலகம்); ஸ்ரீமதி.ஜி.பவானி, தலைமை விருந்தினர், பிரமுகர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை வரவேற்றார். இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், தொழில்துறையின் நலனுக்காக “மானக் மந்தன்” என்ற தலைப்பில் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு பிஐஎஸ் ஏற்பாடு செய்து வருகிறது என்று கூறினார். மேலும் புதிய தரநிலைகளை அறிமுகப்படுத்தவும், முக்கியத்துவம் வாய்ந்த திருத்தங்கள் , வரைவுகளை உள்ளூர் உற்பத்தியாளர்கள், தொழில்துறையினர், …

Read More »