Friday, January 09 2026 | 07:50:49 AM
Breaking News

National

இயற்கை வேளாண்முறை கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை அதிகரிப்பு

இந்திய சந்தையில் இயற்கை வேளாண்முறை கோதுமை மற்றும் பருப்பு வகைகளுக்கான தேவை குறிப்பிடத்தக்க வகையிலும் சீராகவும்  அதிகரித்து வருகிறது. ரசாயனம் இல்லாத முறையில் பயிரிடப்படும் உணவுக்கு நுகர்வோர் விருப்பம் குறிப்பாக நகர்ப்புற மற்றும் பகுதி நகர்ப்புற மையங்களில் மாறி வருகிறது . அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வு, வீட்டு வருவாய் அதிகரிப்பு, சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண் விநியோகத் தொடர்கள் மீதான நம்பிக்கை ஆகியவை தேவையை மேலும் அதிகரித்துள்ளன. தேசிய கூட்டுறவு …

Read More »

சைபர் பாதுகாப்பை வலுப்படுத்தும் மத்திய அரசின் முன்முயற்சிகள்

பாதுகாப்பான, நம்பகத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய இணையப்  பயன்பாட்டை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு கொள்கைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்படும் இணையவழி அச்சுறுத்தல்கள் குறித்து போதிய விழிப்புணர்வுடனும் முழு கவனத்துடனும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இந்திய கணினி அவசரகால பணிக் குழு மற்றும் தேசிய முக்கியத் தகவல் உள்கட்டமைப்புப் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து முக்கியத் துறைகள் உட்பட டிஜிட்டல் …

Read More »

உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமிலான உயர்மட்ட குழு பஞ்சாயத்து அளவில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு ₹507.37 கோடி ஒப்புதல் வழங்கியுள்ளது

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையில் இயங்கும் உயர்மட்டக் குழு, 20 மாநிலங்களில் உள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பேரிடர் அபாயக் குறைப்பு  முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்திற்கு ரூ.507.37 கோடி நிதிக்கு இன்று (டிசம்பர் 16) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (NDMA) இணைந்து செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு பேரிடரையும் தாங்கும் வகையில் …

Read More »

ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று (14.12.2025) யூத பண்டிகையான ஹனுக்காவின் முதல் நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ள திரு நரேந்திர மோடி, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த துயரமான இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் அசைக்க முடியாத நிலைப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்துள்ள பிரதமர், பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும், வெளிப்பாடுகளுக்கும் எதிரான உலகளாவிய போராட்டத்தை இந்தியா உறுதியாக ஆதரிக்கிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடிய மக்களை குறிவைத்து ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் இந்தியா நிற்கிறது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் வெளிப்பாடுகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது.”

Read More »

குடியரசு துணைத்தலைவர், பிரதமர், பிற முக்கிய பிரமுகர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி

2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை நாடு இன்று நினைவு கூர்ந்தது. உச்சபட்ச ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தைப் பாதுகாக்கும் போது தங்கள் இன்னுயிரை ஈந்த துணிச்சலான பாதுகாப்புப் படையினருக்கும் பிற ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்தியது. மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், பிரதமர் திரு நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தி, மாநிலங்களவை துணைத்தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிற பிரமுகர்கள் ஆகியோர் வீர மரணம் அடைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். மக்களவைச் செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவைச் செயலாளர் திரு பி சி மோடி, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை முறியடிக்கும்போது உயிர்த்தியாகம் செய்த நமது துணிச்சலான பாதுகாப்புப் படையினர், பிற ஊழியர்கள் ஆகியோரின்  உச்சபட்ச தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன். …

Read More »

பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது

மணிப்பூரில் பழங்குடியின மக்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள் தேசிய முன்னுரிமையாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். மணிப்பூரில் உள்ள சேனாபதி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அவர் இன்று (12.12.2025) தொடங்கி வைத்து உரையாற்றினார். அனைவரையும் உள்ளடக்கிய மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், உள்ளூர் தலைவர்கள் சமூக அமைப்புகளுடன் மத்திய அரசு தொடர்ந்து கலந்தாலோசனை நடத்தி வருவதாக …

Read More »

2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, ரூ.11,718.24 கோடி செலவில் 2027-ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பணியாகும். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்: (i) வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு – ஏப்ரல் முதல் செப்டம்பர், 2026 …

Read More »

2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2026 பருவத்திற்கான கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு  ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்குவதற்காக, அனைத்து  பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, அகில இந்திய  சராசரி உற்பத்தி செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்படும் என்று 2018-19 மத்திய பட்ஜெட்டில் அரசு அறிவித்தது. 2026 பருவத்திற்கு கொப்பரையின் நியாயமான சராசரி தரத்திற்கான குறைந்தபட்ச …

Read More »

2004–14-ல் 171 ஆக இருந்த வருடாந்தர சராசரி ரயில் விபத்துகள் 2025–26-ல் (இதுவரை) 11 ஆகக் குறைந்துள்ளது

இந்திய ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எந்தவொரு அசாதாரண சம்பவமும் ரயில்வே நிர்வாகத்தால் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. தொழில்நுட்ப காரணம்  தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என சந்தேகிக்கப்படும் இடங்களில், மாநில காவல்துறையின் உதவியும் பெறப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றின் வழிகாட்டுதலும் பெறப்படுகிறது. இருப்பினும், முதன்மை விசாரணை வழிமுறைகள் மாநில காவல்துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் …

Read More »

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த சிறப்புமிக்க தருணத்தில், கூட்டு விவாதத்திற்கான வழிமுறையை தேர்ந்தெடுத்ததற்காக அவை உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தியாகம் மற்றும் தவத்தின் வழிமுறையைக் காட்டி, நாட்டின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்த வந்தே மாதரம் என்ற மந்திரமும், முழக்கமும் நினைவுகூரப்படுவதாகவும், அவையில் உள்ள அனைத்து …

Read More »