படைத் தளபதிகளின், துணைக் குழுவான கூட்டு மின்காந்த வாரியத்தின் வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 20 அன்று புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின் கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு எட்டப்படுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அலைக்கற்றை மேலாண்மை ஆகிய துறைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல …
Read More »நீரை திறம்பட பயன்படுத்த வேண்டும் – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
6-வது தேசிய நீர் விருதுகள், நீர் பாதுகாப்பு – மக்கள் பங்களிப்பு விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது பேசிய அவர், மனித நாகரிகத்தின் கதை என்பது ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், கடற்கரைகளிலும், பல்வேறு நீர் நிலைகளையொட்டி அமையும் குழுக்களின் கதையாகும் என்று தெரிவித்தார். நமது பாரம்பரியத்தில், ஆறுகள், ஏரிகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் போற்றப்படுகின்றன என்று அவர் கூறினார். நமது தேசியப் பாடலில், பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய முதல் வார்த்தை சுஜலாம் என்பதாகும். எண்ணற்ற நீர் …
Read More »வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் நவம்பர் 18 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. 2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,25,13,094 கணக்கெடுப்பு படிவங்கள் …
Read More »நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு முன்னுரிமை- மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான்
ஆசிய விதை மாநாடு 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது ஆசிய விதை மாநாடு 2025-க்கான இலட்சினையும் வெளியிடப்பட்டது. தரமான விதைகள் மூலம் செழுமைக்கான விதைகளை விதைத்தல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும், இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், …
Read More »எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா – பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது
மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் (எஸ்விசிசி), பிரேசிலில் உள்ள ஆயுர்வேத அமைப்பான கோனயூர் அமைப்பும் இணைந்து 2025 நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தின. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதன் 40 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்வதாக அமைந்தது. …
Read More »பொதுமக்களுக்கு மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சையை அணுகக்கூடிய வகையில் மலிவுக் கட்டணத்திலும் வழங்க மத்திய அரசு திட்டம்
அணுசக்தித் துறையின் கீழ் உள்ள டாடா நினைவு மருத்துவமனை (டிஎம்சி), விரிவான சான்றுகள் அடிப்படையிலான புற்றுநோய் சிகிச்சையை வழங்கி வருகிறது. மும்பை, வாரணாசி, விசாகப்பட்டினம், சங்ரூர், முல்லன்பூர், குவஹாத்தி மற்றும் புவனேஷ்வர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்தியாவின் 7 மாநிலங்களில் டிஎம்சி 11 மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. 11 மருத்துவமனைகளில், 8 செயல்பாட்டுக்கு வந்துள்ளன, 3 மருத்துவமனைகள் கட்டுமானத்தில் உள்ளன. டாடா நினைவு மையம் (டிஎம்சி) நாட்டின் முதன்மையான புற்றுநோய் மையமாக …
Read More »குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவினருக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள்
மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சந்தீப் குமார் பதக்கின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்தார். 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய பெருந்திட்டத்தை நவம்பர் 15, 2023 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பாதுகாப்பான …
Read More »பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள திட்டத்தின் வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு மாதிரி மற்றும் பலதுறை செயல்பாடுகள்
திருமதி ரமிலாபென் பெச்சர்பாய் பாராவின் நட்சத்திரக் குறியிடப்படாத கேள்விக்கு பதிலளித்த மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கி இன்று மாநிலங்களவையில், பழங்குடியின கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள தர்தி ஆபா ஜன்சாதிய கிராம் உத்கர்ஷ் திட்டம் (DAJGUA) பழங்குடியினர் பகுதிகளில் உள்ளடக்கிய மற்றும் நிலையான வளர்ச்சியை இயக்குவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும் என்று தெரிவித்தார். இந்த அபியான் 17 துறை அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 25 …
Read More »தேர்தல் நடைமுறைகளை சீரமைத்தல்: பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்
நாட்டில் உள்ள தேசிய/மாநில அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 195-ன் பிரிவு 29ஏ-வின் விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன தற்போது, 6 தேசியக் கட்சிகள், 67 மாநிலக் கட்சிகள், 2854 பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் …
Read More »சஞ்சார் சாத்தி மொபைல் செயலி 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது – 6 மாதங்களில் 50 லட்சம் பேர் பதிவிறக்கம்
தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாத்தி செயலி, தொலைத்தொடர்பு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மொபைல் செயலி ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் பரந்த மொழியியல், பிராந்திய பன்முகத்தன்மைகளை அங்கீகரித்து, ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் இந்த செயலியின் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகளையும், ஏமாற்றுத் தகவல் அடங்கிய செய்திகளைப் பற்றி புகாரளிப்பது இதன் மூலம் எளிதாகி உள்ளது. 5.35 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளை மீட்கவும், மக்களின் புகார்களின் அடிப்படையில் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், சக்ஷு அம்சத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 29 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை செயலிழக்கச் செய்யவும் இந்த சஞ்சார் சாத்தி வழிவகுத்துள்ளது. சஞ்சார் சாத்தி தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். இது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தொலைத்தொடர்புத் துறை, நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கையையும் செயல்படுத்தியுள்ளது. இது நிதி மோசடி அபாயத்துடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் மொபைல் எண்களை மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது. இந்தக் கருவி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை வழங்குநர்கள் போன்றோர், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. 2023 மே 16, 2023 அன்று தொடங்கப்பட்ட இணையதளத்தின் வெற்றியை அடுத்து 2025 ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகவும் வசதியாகவும் அணுக அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது. …
Read More »
Matribhumi Samachar Tamil