Friday, December 05 2025 | 07:04:14 PM
Breaking News

National

புதிய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு, செயல்பாடுகள் குறித்த பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு திரு ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2024, டிசம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. முந்தைய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலை பெருநிறுவனமயமாக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிதி புள்ளிவிவரங்கள், நவீனமயமாக்கல், மூலதன செலவினம், ஏற்றுமதி, உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது. முக்கியமான பொருட்களை உள்நாட்டுமயமாக்குதல், உற்பத்தி வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் …

Read More »

பருவநிலைகளைத் தாங்கி வளரும் திறன் கொண்ட நெல் ரகங்களை உருவாக்குதல்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டமான ‘பருவநிலை மாற்ற தாங்குதிறன் வேளாண்மைக்கான தேசிய கண்டுபிடிப்பு’  மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் பயிரிடப்படும் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஒருங்கிணைந்த உருவகப்படுத்துதல் மாதிரியாக்க ஆய்வுகளை மேற்கொண்டு  மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது பருவகாலங்களில் பயிரிடப்படும் மானாவாரி நெல் பயிர்களின் விளைச்சல் 2050-ம் ஆண்டில் 20% ஆகவும், 2080-ம் ஆண்டில் 47% ஆகவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பாசன நெல் சாகுபடி 2050-ம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080-ம் ஆண்டில் 5% ஆகவும் குறையக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 668 நெல் வகைகள் (நெல்) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 199 வகைகள் தீவிர மற்றும் பிற வகை பருவநிலைகளைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களாகும். 103 நெல் வகைகள் வறட்சி, நீர் அழுத்தங்களை தாங்கி வளரக்கூடியவை, 50 நெல் வகைகள் வெள்ளம், ஆழமான நீர் நிலைகள், நீரில் மூழ்கும் தன்மையுடன் கூடியவை, 34 நெல் வகைகள் உப்புத்தன்மை  காரத்தன்மை  போன்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.  6 நெல் இரகங்கள் வெப்ப அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. 6 நெல் இரகங்கள் குளிர் அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. இதில் 579 நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரக்கூடியவை. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read More »

விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டங்கள்

வேளாண் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தவும், மாற்று சந்தை வழிவகைகளை உருவாக்கவும், விவசாயிகளுக்கு லாபகரமான விலை உறுதி செய்யும் வகையில் சந்தை ஏற்றத் தாழ்வுகளை தணிக்கவும் மத்திய அரசு  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண் சந்தை, 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்குதல், டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான நடவடிக்கைகள் இணையதள சேவை மூலம் சந்தைகள், வேளாண் உள்கட்டமைப்பு நிதி, வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டம், பிரதமரின்  விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விலை ஆதரவு ஆகியவை  இந்த நடவடிக்கைகளில் அடங்கும். இத்திட்டத்தின் துணை திட்டமான சந்தைப்படுத்தல், ஆராய்ச்சி மற்றும் தகவல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் வேளாண் விளைபொருட்களின் விலைகள் மற்றும் அதன் விநியோகம் குறித்த அன்றாட தகவல்களை வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் 3,771 சந்தை வளாகங்களில் 300-க்கும் மேற்பட்ட வேளாண் விளைப் பொருட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.  விவசாய விளைபொருட்களின் தரநிலைக்கான இணையதளம், இ-நாம் இணையதளம், கிசான் சுவிதா போன்ற டிஜிட்டல் தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்படுகின்றன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்

மாநிலத்தின் வேளாண்மை வளர்ச்சிக்கு மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், தகுந்த கொள்கை நடவடிக்கைகள், பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பல்வேறு திட்டங்கள் மூலம் மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கிறது.  உற்பத்தியை அதிகரித்தல், ஆதாயமான வருவாய் மற்றும் விவசாயிகளுக்கு வருமான ஆதரவு ஆகியவற்றுக்கான மத்திய அரசு திட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காக உள்ளன. பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்தல், உற்பத்திச் செலவைக் குறைத்தல், பயிர்களை மாற்றி மாற்றி பயிரிடுதல், நீடித்த வேளாண்மைக்காக பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் …

Read More »

வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன்

வேளாண் நிலங்களில் இயற்கை கார்பன் இருப்பது குறித்து  மண் வள அட்டை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மண்ணில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்வள அட்டையை மாநிலங்கள் புதுப்பிக்க வேண்டும். இதுவரை 24.60 கோடி சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மண்ணில் இயற்கை கார்பன் அளவு  குறைவதற்கான முக்கிய காரணிகள் (i) இரசாயன உரங்களின் முறையற்ற அல்லது அதிகப்படியான பயன்பாடு, அடிக்கடி மண்ணை உழவு, செய்தல், பயிர்க்கழிவுகளை எரித்தல், அதிகப்படியான மேய்ச்சல், மண் அரிப்பு போன்ற குறைபாடுள்ள நடைமுறைகள். (ii) நீண்ட கால  தாவர வகைகளுக்குப் பதிலாக ஒரே மாதிரியான பயிர்கள், மேய்ச்சல் நிலங்களைப் பயன்படுத்துதல், (iii) மண்ணின் மொத்த அடர்த்தி, அதிக சரளை உள்ளடக்கம், மண் அரிப்பு, குறைந்த நிலத்தடி நீர், குறைந்த ஈரப்பதம் போன்ற மண்ணின் இயற்பியல் வேதியியல் பண்புகள். இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம்  மண்வளத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மண்ணில் உள்ள இயற்கை கார்பனின் அளவு தொடர்பான விவரங்களை மாநில சுய உதவிக் குழுவிற்கு அளித்து, இரண்டாம் நிலை மற்றும் நுண்ணூட்ட உரங்களுடன் இரசாயன உரங்களையும், இயற்கை உரங்கள், உயிர் உரங்களையும் சரியான முறையில் பயன்படுத்தி, மண்ணின் அங்கக இயற்கை கார்பன் மற்றும் வளத்தை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

Read More »

திருமதி துளசி கௌடா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்  பதிவிட்டிருப்பதாவது: “கர்நாடகாவைச் சேர்ந்த மதிப்பிற்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்ம விருது பெற்றவருமான திருமதி துளசி கவுடாவின்  மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இயற்கையை பேணி வளர்ப்பதற்கும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நடுவதற்கும், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அவர் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். …

Read More »

புள்ளியியல் நடைமுறைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி – தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளன

நம்பகமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றில் மாநிலங்களின் திறன்களையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த ‘புள்ளியியல் வலுப்படுத்துதலுக்கான ஆதரவு நடைமுறை’ என்ற மத்திய அரசின் துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம் மானிய உதவி வழங்குகிறது. இந்த துணைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல், ஒருங்கிணைந்த மாநில தரவுத்தளங்களை உருவாக்குதல், தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் …

Read More »

பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் இது மற்றவர்களை இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் இது மற்றவர்களை இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார் அறிவியல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சி முன்முயற்சியின் ஐந்தாண்டு கொண்டாட்டத்தில் பேசிய அமைச்சர், இந்தியாவின் பண்டைய ஞானத்தை சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் …

Read More »

உயிரி எரிபொருட்களை ஊக்குவிப்பதற்கான அரசின் முன்முயற்சிகள்

2014-ம் ஆண்டு முதல், பெட்ரோலில் எத்தனால் கலப்பதை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல், நிர்வகிக்கப்பட்ட விலை வழிமுறை, எத்தனால் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதமாக குறைத்தது,  எத்தனால் ஆலைகளுடன் நீண்டகால கொள்முதல் ஒப்பந்தங்கள், பயோடீசல் விற்பனைக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது, பயோடீசல் கொள்முதலுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்தல்,  டீசலில் பயோடீசலை  5 சதவீதம்  கலப்பதை கட்டாயமாக்குவது தொடர்பாக உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தம் போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அழுத்தப்பட்ட உயிரி …

Read More »

நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 97 புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம், நாடு முழுவதும் உள்ள 165 தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகள், 1590 மருந்தகங்கள் மூலம் காப்பீட்டு நபர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு சிகிச்சை, மருந்துகள் மற்றும் காயத்திற்கு கட்டு போடுதல், சிறப்பு ஆலோசனை மற்றும் மருத்துவமனையில் சேர்த்தல் போன்ற விரிவான மருத்துவ சேவையை அளித்து வருகிறது. நாடு முழுவதும் புதிய இஎஸ்ஐ மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களை இஎஸ்ஐசி அமைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் …

Read More »