சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு தினமான இன்று அவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. பட்டேலின் ஆளுமையும், பணியும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தீர்மானத்தை அடைவதற்கு குடிமக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “நாட்டின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவு நாளில் அவருக்கு மாபெரும் அஞ்சலி. வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் உறுதியை அடைவதற்கு அவரது ஆளுமையும் பணியும் நாட்டு மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்’’.
Read More »காசநோய் இல்லாத பாரதம் பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள்
‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோயிலிருந்து விடுவிக்க தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் இன்று ‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான நட்பு கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு பிர்லா, காசநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றிக்கு வெகுஜன விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை முக்கியமானவை என்று கூறினார். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளும் காசநோய் இல்லாதவையாக மாற போட்டியிடும் ‘ஆரோக்கியமான போட்டி’ என்ற உணர்வைத் தூண்டினார். உலக சுகாதார அமைப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க உலகளாவிய இலக்கை நிர்ணயித்துள்ளது, ஆனால் பிரதமர் மோடியின் கீழ், இந்தியா 2025 க்குள் காசநோயை ஒழிக்க அதிக லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைவதற்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் திரு பிர்லா கூறினார். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா காசநோய் இல்லாத நாடாக மாறுவதை உறுதி செய்ய உறுதியுடன் பணியாற்றுமாறு அவர்களை திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார். 20 ஓவர் நட்பு கிரிக்கெட் போட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த எம்.பி.யுமான திரு அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால் இந்தியாவை காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மக்களவை சபாநாயகர் லெவன் அணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார், மாநிலங்களவை தலைவர் லெவன் அணிக்கு திரு கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். மக்களவை தலைவர் லெவன் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அனுராக் சிங் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Read More »நாட்டு நலப்பணித் திட்டத்தின் 80வது சுற்றுக்கான அகில
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் , 2024 டிசம்பர் 10 & 11 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் அதன் சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் என்எஸ்எஸ் 80-வது சுற்றுக்கான அகில இந்திய பயிற்சியாளர்களின் பயிலரங்கை ஏற்பாடு செய்தது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திரு கல் சிங் 10 டிசம்பர் 2024 அன்று பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் …
Read More »விண்வெளி, கடல் மற்றும் இமயமலை வளங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
2047-ம் ஆண்டிற்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உத்திகள் அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் – தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தில்லி பாரத் மண்டபத்தில் முன்னணி ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இந்திய பொருளாதார மாநாட்டில்” அவர் பங்கேற்றுப் பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு இந்தியாவின் விண்வெளி, கடல், …
Read More »எரிசக்தி சேமிப்பு தொடர்பான தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டி கௌரவித்தார்
தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2024-ஐ முன்னிட்டு, புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியதுடன் எரிசக்தி சேமிப்புச் செயல்திறனுக்கான சிறந்த பங்களிப்பைக் கொண்டாடியது. விழாவின் போது, எரிசக்தி சேமிப்பு 2024 குறித்த தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் கௌரவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளங்களை உகந்த …
Read More »விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு 14 டிசம்பர் 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்றது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக (ஆர்ஓ) இருந்தார். பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு , அவர் பட்டங்களை வழங்கினார். 178 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 204 வீரர்கள் இன்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், …
Read More »இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிப் பணிகள் சேவை அமைப்பின் 50-வது நிறுவன தின கொண்டாட்டம்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் பங்கேற்பு
இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிச் சேவை அமைப்பு (IP&TAFS) தனது 50-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் இன்று (14.12.2024) கொண்டாடியது. குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குடிமைப் பணி அதிகாரிகள் தொழில்நுட்ப நுண்ணறிவு கொண்டவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைக் கடந்து மாற்றத்தை …
Read More »இன்றைய நிறுவன சவால்கள் பெரும்பாலும் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் உண்மையான வெளிப்பாடு இன்மையால் உருவாகின்றன- குடியரசு துணைத்தலைவர்
“இன்றைய நிறுவன சவால்கள் உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் உண்மையான வெளிப்பாடுகள் குறைந்ததால் உருவாகின்றன. வெளிப்பாடு மற்றும் அர்த்தமுள்ள உரையாடல் இரண்டும் ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற நகைகள். வெளிப்பாடு மற்றும் தொடர்பு ஒருவருக்கொருவரை இணைக்கின்றன. நல்லிணக்கமே வெற்றிக்கு முக்கியமாகும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திலும் முக்கிய மதிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கிய திரு தன்கர், “ஜனநாயகம் அமைப்புகளில் மட்டுமல்ல, அடிப்படை …
Read More »பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் – குடியரசுத்துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு தின விழா 2024-ல் பேசிய திரு ஜக்தீப் தன்கர், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் அபாயகரமான சுற்றுச்சூழல் சூழ்நிலைகளால் தேசிய தலைநகரமான தில்லி ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறது என்றார். நாம் புதுமை அணுகுமுறையில் இறங்க வேண்டும் …
Read More »டிசம்பர் 14, தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்
நீடித்த வளர்ச்சியின் அடித்தளமாக எரிசக்தி திறன் உள்ளது. முன்னேற்றம், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் இழைகளை ஒன்றாக இணைக்கிறது. இந்தியாவில், நிலைத்தன்மைக்கான இந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு டிசம்பர் 14 அன்று தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வருடாந்தர நிகழ்வு நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட பொறுப்பின் ஒளியாகப் பிரகாசிக்கிறது. இது நீடித்த எரிசக்தி நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு முக்கியமான தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒரு சடங்கு நிகழ்வாக இல்லாமல், தனிநபர்கள், தொழில்கள் மற்றும் …
Read More »
Matribhumi Samachar Tamil