Saturday, April 11 2026 | 08:58:15 PM
Breaking News

National

புராதனத் தலங்களை பாதுகாப்பதில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பு

பாரம்பரிய தலங்களைப் பாதுகாப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து  கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டுவதன் மூலம், 1890-ம் ஆண்டு அறக்கட்டளை சட்டத்தின் கீழ் தேசிய கலாச்சார நிதியம் 1996-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிதியத்தின் அனைத்து செயல் திட்டங்களும் திட்ட அமலாக்க குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேசிய கலாச்சார நிதியத்திற்கு வழங்கப்படும்  நன்கொடைகள் நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு அல்லது அங்குள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக …

Read More »

பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் தடைசெய்யப்பட்ட / ஒழுங்குபடுத்தப்பட்ட எல்லைகளை மறுவரையறை செய்தல்

நாட்டில் 3,696 புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் சிறப்பு  வாய்ந்த இடங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தொல்லியல் துறையால்  நடத்தப்பட்ட செயல்திறன் தணிக்கை மற்றும் தொடர் கணக்கெடுப்பின் பணிகளின் போது, 18 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள்  மற்றும் பழம்பெருமை வாய்ந்த தலங்கள், சிறப்பான முறையில் பாதுகாக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. தடைசெய்யப்பட்ட அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் புகார் தெரிவித்தால் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் …

Read More »

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை, தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தோடு தொடர்புடையவர்களுக்கு சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை நடத்துகிறது

வழக்கு பதிவு செய்வதற்கு முந்தைய நிலையிலேயே குறைகள் தீர்த்துவைக்கப்படுவதை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளில், நுகர்வோர் விவகாரங்கள் துறை  இந்த ஆண்டு தேசிய நுகர்வோர் இலவச உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  திறன் மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திறன் மேம்பாட்டுத் திட்டம் என்பது தேசிய நுகர்வோர் உதவி எண் மையத்தில் செயல்படுவர்களுக்கான  வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான சிறப்பு திறன் மேம்பாட்டு முயற்சிகளை உள்ளடக்கியதாகும்.  நுகர்வோர் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் …

Read More »

மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான சஞ்சார் சாத்தி இணையதளத்தை தொலைத் தொடர்புத் துறை தொடங்கியுள்ளது

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது.  இதன் மூலம் சந்தேகத்திற்குரிய மோசடியான தகவல் தொடர்புகள் மற்றும் உரிமைக் கோரப்படாத வர்த்தக தொடர்புகள் ஆகியவை குறித்து புகார்தெரிவிக்கும் வகையில் இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மோசடியான  தகவல் தொடர்புகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், மொபைல் இணைப்புகள், கைபேசிகள், குறுந்தகவல்களை அனுப்புவர்கள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மீது தொலைத் தொடர்புத் …

Read More »

நாட்டில் போலியான தொலைபேசி அழைப்புகள்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) விதிமுறைகள், அதாவது தொலைத் தொடர்பு வர்த்தகத் தகவல் தொடர்பு நுகர்வோர் விருப்ப விதிமுறைகள், 2018 (டி.சி.சி.சி.பி.ஆர் -2018) ஆகிய சட்டங்களில் போலியான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் குறித்த புகார்களை கையாள்கிறது. இந்த விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான பல்வேறு  வழிகாட்டுதல் நெறிமுறைகள்  பின்பற்றப்பட்டு வருகின்றன. தொலைத்தொடர்பு சந்தாதாரர் அனைத்து வர்த்தக தகவல் தொடர்புகளையும் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யயவும் வேண்டாத அழைப்புகளை தடுக்கவோ வகை  …

Read More »

நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில், 6,22,840 கிராமங்கள் செல்பேசி வசதி பெற்றுள்ளன

நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் (இந்திய தலைமைப் பதிவாளர் கூற்றுப்படி), சுமார் 6,22,840 கிராமங்களில் செல்பேசி வசதி உள்ளது, இவற்றில் 6,14,564 கிராமங்கள் 30.09.2024 நிலவரப்படி 4ஜி சேவை இணைப்பு பெற்றுள்ளன. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பிரதமரின் பழங்குடியின நியாய மகா இயக்கத்தின் கீழ், 4,543 குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் குடியிருப்புகள், செல்பேசி வசதி இல்லாதவை என கண்டறியப்பட்டு, அவற்றில் 1,136 குடியிருப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகள் உட்பட நாட்டின் ஊரக, தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக டிஜிட்டல் பாரத் …

Read More »

நாடாளுமன்றக் கேள்வி: அணு மின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்

அணுமின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8180 மெகாவாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகாவாட்டாக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2070 ஆம் ஆண்டு வாக்கில்  நாட்டின் எரிசக்தி கலவையை நிகர பூஜ்ஜியத்திற்கு மாற்றுவதற்காக, நாட்டின் எரிசக்தித் துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான உத்தியின் ஒரு பகுதியாக அணுசக்தி விரிவாக்கம் உள்ளது. இந்திய அணு மின் கழகம் அமலாக்கும் திட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் திட்டம் 3,4,5,6 ஆகியவற்றில் மொத்தம் 2000 மெகா வாட் மின்னுற்பத்தியும் அடங்கும் தொலைதூரப் பகுதிகளில் சிறிய  அணு உலைகளை நிறுவி, அங்கு …

Read More »

விண்வெளித் துறையில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முயற்சி

இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேச கூட்டாண்மைகள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் விண்வெளி ஆய்வு பணிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. விண்வெளி நடவடிக்கைகளில் இந்திய தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு 2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவவும், 2040-க்குள் நிலவில் இந்தியரை தரையிறக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கு 2047-ஐ மத்திய …

Read More »

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது: பிரதமர்

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில், ஒரு வீடியோவைப்  பகிர்ந்து, அவர் கூறியுள்ளதாவது: “ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது கிராமப்புறங்களில்  பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது …

Read More »

ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலுக்கு இந்திய ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை குடியரசுத் தலைவர் வழங்கினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 12, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு பதவியேற்பு விழாவில், நேபாள இராணுவத்தின் இராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெலுக்கு இந்திய இராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை வழங்கினார். அவரது பாராட்டத்தக்க இராணுவ வலிமை மற்றும் இந்தியா-நேபாளம் இடையே நீண்டகாலமாக நட்புறவை வளர்ப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Read More »