Thursday, May 07 2026 | 03:36:24 AM
Breaking News

National

முன்னேறும் மாவட்டங்களில் 4ஜி மொபைல் சேவைகள்

ஆந்திரப்பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள முன்னேறும் ஆர்வ மாவட்டங்களில் சேவை இல்லாத 7,287 கிராமங்களில் 4,779 செல்பேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்தகைய கிராமங்கள் அனைத்துக்கும் மொபைல்  சேவையை படிப்படியாக வழங்குவதற்கு இத்திட்டம் வகைசெய்கிறது. 31.10.2024 நிலவரப்படி, 3,352 கிராமங்களில் சேவை கிடைக்கும் வகையில் 2,177 மொபைல் கோபுரங்கள் அமைக்ககப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் மொபைல் கோபுரங்கள் அமைக்க திட்டமிடப்பட்ட கிராமங்களின் பட்டியல் https://dot.gov.in/circular-and-notifications/3294 என்ற இணையதள இணைப்பில் உள்ளது. மக்களவையில் இன்று கேள்வி …

Read More »

போலி அழைப்புகள், மோசடி அழைப்புகளைக் கையாள்வது

தொலைத் தொடர்புத் துறை (DoT) மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக சஞ்சார் சாத்தி இணையதளத்தை (www.sancharsaathi.gov.in) உருவாக்கியுள்ளது, இது சந்தேகத்திற்குரிய மோசடி தகவல்தொடர்புகள், தேவையற்ற வணிக தகவல்தொடர்புகள் (UCC) குறித்து புகாரளிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து வருவதாகத் தோன்றும் சர்வதேச ஏமாற்று அழைப்புகளை அடையாளம் காணவும் தடுக்கவும் தொலைத் தொடர்புத் துறையும், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் (டி.எஸ்.பி) ஸ்பூஃப்ட் இன்கம்மிங் சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளனர். போலி டிஜிட்டல் கைதுகள், ஃபெடெக்ஸ் மோசடிகள், அரசு, காவல்துறை அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற மோசடிகளை தடுக்க நடவடிக்கைகள் …

Read More »

அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்பு

பாரத் நெட் திட்டம் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குகிறது. டிஜிட்டல் பாரத் நிதியத்திலிருந்து நிதியளிக்கப்பட்ட ஒரு முன்னோடி திட்டத்தின் மூலம், பிஎஸ்என்எல் பாரத் நெட் உத்யாமிஸ் எனப்படும் உள்ளூர் கூட்டாளர்கள் / தொழில்முனைவோர் மூலம் பாரத்நெட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி கிராம பஞ்சாயத்துகள் / கிராமங்களில் அதிவேக கண்ணாடி இழை நார் இணைய இணைப்புகளை வழங்கியுள்ளது. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் …

Read More »

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக தொலைத்தொடர்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது

நாட்டில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கும் அதன் தரத்தை உயர்த்துவதற்கும் தொலைத்தொடர்புத்துறை கடந்த 5 ஆண்டுகளில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு – நாட்டின் தொலைதூர, கிராமப்புற பகுதிகளில் அதிவேக இணையம் / தரவுமொபைல் சேவைகளை வழங்குவதற்காக டிஜிட்டல் பாரத் நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், எல்லைப் பகுதிகள், பிற முன்னுரிமைப் பகுதிகளில் மொபைல் சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பிராந்தியம், அந்தமான் – நிக்கோபார், லட்சத்தீவு தீவுகளில் மொபைல் …

Read More »

விண்வெளிக் கழிவுகள் மேலாண்மை

விண்வெளி நிலைத்தன்மைக்கான “விண்வெளி சூழ்நிலைமை விழிப்புணர்வின்”, வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், விண்வெளிப் பயணப் பாதுகாப்பு மற்றும் கழிவுகள் குறைப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் கவனம் செலுத்தவும், நெரிசலான விண்வெளி சூழலில் செயல்படுவதில் உருவாகி வரும் சவால்களை சமாளிக்கவும் பாதுகாப்பான மற்றும் நீடித்த விண்வெளி செயல்பாடுகள் மேலாண்மைக்கான இஸ்ரோ அமைப்பு(IS4OM) நிறுவப்பட்டுள்ளது. விண்வெளிக் கழிவுகள் ஒருங்கிணைப்புக் குழு பரிந்துரைத்த சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்வெளிக் கழிவுகள் குறைப்பு வழிகாட்டுதல்களை …

Read More »

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய கடற்படையின்  துணிச்சல்மிக்க வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்தை உறுதி செய்யும் அவர்களின் அர்ப்பணிப்புக்காக அவர்களைப் பாராட்டினார். சமூக ஊடக எக்ஸ் தள  பதிவில் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: “கடற்படை தினத்தை முன்னிட்டு, ஈடு இணையற்ற தைரியத்துடனும், அர்ப்பணிப்புடனும் நமது கடல்களைப் பாதுகாக்கும் இந்திய கடற்படையின் துணிச்சல்மிக்க வீரர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துவோம். …

Read More »

ஸ்குவாஷ் விளையாட்டு ஜாம்பவான் ராஜ் மன்சந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

முன்னணி ஸ்குவாஷ் வீரர் ராஜ் மன்சந்தா மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அர்ப்பணிப்புக்கும் சிறப்புக்கும் பெயர் பெற்றவர் மன்சந்தா என பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ்  தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அர்ப்பணிப்புக்கும், சிறப்புக்கும் பெயர் பெற்ற இந்திய ஸ்குவாஷின் ஜாம்பவான் ராஜ் மன்சந்தா அவர்கள் மறைவால் வேதனை அடைந்தேன். அவர் வென்ற விருதுகள், விளையாட்டின் மீதான அவரது ஆர்வம், தலைமுறைகளை ஊக்குவிக்கும்  திறன் ஆகியவை அவரை தனிச்சிறப்புடையவராக ஆக்கின. ஸ்குவாஷ் மைதானத்திற்கு அப்பால்,  அவரது சேவை ராணுவத்திலும் தொடர்ந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி: பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi)”

Read More »

ஆர்.வெங்கட்ராமன் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமனின் பிறந்த நாளையொட்டி இன்று (2024 டிசம்பர் 4) புவனேஸ்வரில் உள்ள ராஜ் பவனில் அவரது திருவுருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Read More »