இமாச்சலப் பிரதேசத்தில் இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வதையும் அவற்றின் தீவிரத்தையும் கருத்தில் கொண்டு, பல்துறை மத்தியக் குழுவை அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள், அடைமழை ஆகிய பேரிடர்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (CBRI), …
Read More »காசி பிரகடன வெளியீட்டுடன் வாரணாசியில் நிறைவடைந்தது இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு
“வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு போதைப் பொருள் இல்லாத பாரதம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இரண்டு நாள் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு, காசி பிரகடனத்தை முறையாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வுடன் இன்று வாரணாசியில் நிறைவடைந்தது. இளைஞர் நலன், விளையாட்டுகள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உச்சிமாநாடு, 600-க்கும் மேற்பட்ட இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள், 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக, சமூக-கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், கள நிபுணர்களை ஒன்றிணைத்தது. 2047-ம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத …
Read More »ராஜஸ்தானில் 435 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்
ராஜஸ்தானில் ஜெலெஸ்ட்ரா இந்தியாவால் உருவாக்கப்பட்ட 435 மெகாவாட் கோர்பியா சூரிய மின்சக்தி திட்டத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராஜஸ்தான் பாலைவன நிலப்பரப்பிலிருந்து உலகளாவிய தூய்மையான எரிசக்தி மையமாக மாறுவதை சுட்டிக் காட்டினார். “நாங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு மெகாவாட்டிலும், நாங்கள் மின்சாரத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, நாங்கள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார், இந்தத் திட்டம் மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். எட்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட கோர்பியா சூரிய மின்சக்தி திட்டம், 1250 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்திய சூரிய எரிசக்தி கழகத்துடன் 25 ஆண்டு மின் கொள்முதல் ஒப்பந்தத்தால் ஆதரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் 755 ஜிகாவாட் சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், தோராயமாக 1.28 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7.05 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும். ராஜஸ்தானின் மின்சார திறனில் கிட்டத்தட்ட 70 …
Read More »ஒடிசாவின் புவனேஸ்வரில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு நாள் முகாம்
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜூலை 21 – 22, 2025 அன்று ஒடிசாவின் புவனேஸ்வரில் இரண்டு நாள் முகாமை நடத்துகிறது. ஆணையத்தின் தலைவர், நீதிபதி திரு வி. ராமசுப்பிரமணியன், உறுப்பினர்கள், நீதிபதி (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, திருமதி. விஜய பாரதி சயானி மற்றும் திரு பிரியங்க் கனூங்கோ ஆகியோர் ஜூலை 21, 2025 அன்று கேசரி நகரில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் காலை 10.00 மணி …
Read More »நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்கு நாளை (ஜூலை 18-ம் தேதி) பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 18 – ம் தேதி) பீகார், மேற்கு வங்க மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பீகாரில் உள்ள மோதிஹரியில் ரூ.7,200 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்றத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார், பின்னர் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகிறார். இதனையடுத்து, மேற்கு வங்க மாநிலத்திற்குச் செல்லும் பிரதமர், பிற்பகல் 3 மணியளவில் துர்காபூரில் ரூ.5000 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் …
Read More »வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டிலிருந்து விஷ வெள்ளரிக்காய் உருகுவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை வலுப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் பயிரிடப்பட்ட விஷ வெள்ளரிக்காய், மத்திய தொழில் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் வெற்றிகரமாக உருகுவே நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி தொகுப்பில் இரண்டு முக்கிய விஷ வெள்ளரிக்காய் பொருட்கள் அடங்கியுள்ளன. ஒன்று ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் முழுமையான விஷ வெள்ளரிக்காய்கள். மற்றொன்று பர்கர், பீசா, …
Read More »மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் 75-வது பிரதமரின் மாற்றுத்திறனாளி சேவை மையம்: உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனில் மத்திய இணையமைச்சர் திரு. பி. எல். வர்மா தொடங்கி வைக்க உள்ளார்
மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகமானது உத்தரப்பிரதேச மாநிலம் படாவுனில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பிரதமரின் 75-வது மாற்றுத்திறனாளி சேவை மையத்தைத் திறந்து வைக்கவுள்ளது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் நாடு தழுவிய முயற்சியின் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக இது உள்ளது. இந்த நிகழ்ச்சியில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. பி. எல். வர்மா, அமைச்சகத்தின் …
Read More »ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு – காந்தி நகரில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா தலைமை வகித்தார்
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா குஜராத்தின் காந்திநகரில் 500-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட குழுவிற்கு தலைமை தாங்கி, உடல் திறன் இந்தியா ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி (ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிளிங்) ஓட்டும் நிகழ்வின் 31-வது பதிப்பை வழிநடத்தினார். இதேபோல் இந்த நிகழ்வு இன்று (13.07.2025 – ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த வாரம் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மிதிவண்டி ஓட்டுதல் நிகழ்வு நாடு முழுவதும் 7000-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்வின்போது பேசிய அமைச்சர், ஞாயிற்றுக் கிழமைகளில் மிதிவண்டி ஒட்டும் நிகழ்வு இப்போது நாடு தழுவிய ஒரு வலுவான முன் முயற்சியாக மாறியுள்ளது என்றார். இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உடல் திறன் இந்தியா இயக்கத்தை முழு வீச்சில் முன்னெடுத்துச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது உடற்பயிற்சி பற்றியது மட்டுமானதாக இல்லாமல் தேசிய அளவில் ஆரோக்கியம் தொடர்பான ஒரு முக்கிய முயற்சியாகவும் மாறியுள்ளது என்று அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா கூறினார். இந்த வார மிதிவண்டி ஓட்டும் நிகழ்வுகளில் ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், கெயில், ஹெச்பிசிஎல், பிபிசிஎல், ஆயில் இந்தியா உள்ளிட்ட பல முன்னணி பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசிய தலைநகர் புது தில்லியில், மேஜர் தியான் சந்த் மைதானத்தில் கயிறு தாண்டுதல், ஜூம்பா, யோகா நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றுடன் கூடிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குர்கானில் நடைபெற்ற நிகழ்வில் 700 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு மிதிவண்டி ஓட்டுதல், யோகா செய்தல் மற்றும் பல விளையாட்டுகளில் பங்கேற்றனர். டிசம்பர் 2024-ல் தொடங்கப்பட்ட உடல்திறன் இந்தியா ஞாயிற்றுக் கிழமைகளில் சைக்கிள் ஓட்டுதல் இயக்கம் நாடு முழுவதும் தனிநபர்களின் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக 3000-க்கும் மேற்பட்ட மிதிவண்டி ஓட்டும் சங்கங்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் இதில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன. இந்த மிதிவண்டி ஓட்டுதல் பயணங்கள் நாடு முழுவதும் உள்ள பல கேலோ இந்தியா மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள், இந்திய விளையாட்டு ஆணையப் பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா அங்கீகாரம் பெற்ற அகாடமிகள், பிராந்திய மையங்கள், பல்வேறு தேசிய சிறப்பு மையங்கள் போன்றவற்றால் நடத்தப்படுகின்றன.
Read More »யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ‘இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள்’ இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
இந்தியாவின் மராட்டிய ராணுவ நிலப்பரப்புகள் மதிப்புமிக்க யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாரம்பரிய பட்டியலில் 12 கம்பீரமான கோட்டைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ளன. 1 கோட்டை தமிழ்நாட்டில் உள்ளது. மராட்டிய பேரரசின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ள பிரதமர், “நாம் புகழ்பெற்ற மராட்டிய பேரரசைப் பற்றிப் பேசும்போது, அதை நல்லாட்சி, ராணுவ வலிமை, கலாச்சார பெருமை, சமூக நலனுக்கு முக்கியத்துவம் …
Read More »
Matribhumi Samachar Tamil