Friday, December 05 2025 | 09:09:59 PM
Breaking News

அதிநவீன கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உயர்நிலை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுமாறு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற உயர்நிலை தொழில்நுட்பங்களில், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆழமான திறனைப் பெற வேண்டும். உயர்நிலையிலான அதி நவீன கண்டுபிடிப்புகளில்இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இதனை அவர்கள் மேற்கொள் வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 19 அன்று தில்லி ஐஐடியில் இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் ஆண்டு மாநாட்டின் தொடக்க …

Read More »

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கம்

மத்திய விமானப்படை தலைமையக தளபதிகள் கருத்தரங்கில்  பங்கேற்பதற்காக  மத்திய விமானப்படை தலைமையகத்திற்கு வருகை தந்த விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங்கை, ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் வரவேற்றார். அவருக்கு இந்திய விமானப்படையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  இந்த கருத்தரங்கம் டிசம்பர் 18 இல் தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதுள்ள பாதுகாப்பு சூழலை வலுப்படுத்துவதில்இந்திய விமானப்படையின் …

Read More »

இந்திய கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் தொடக்கம்

இந்தியக் கடலோரக் காவல் படைக்கான ரோந்துக் கப்பல்களைக் கட்டும் பணி மும்பையில் உள்ள மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படைக்கு  14 விரைவு ரோந்து கப்பல்கள், ஆறு அடுத்த தலைமுறை  கடலார ரோந்துக் கப்பல்களை கட்டும் பணி இந்தக் கப்பல் கட்டும் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகைக் கப்பல்களில்   முதலாவது கப்பல்கள் கட்டும் பணி 19-ந்தேதி தொடங்கப்பட்டது. இந்தக் கப்பல்களை உருவாக்குவதற்கு எம்டிஎல்  நிறுவனத்திற்கு ரூ. 2,684 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்புக்கான …

Read More »

இந்தியாவுக்கான பயணத்தை ஐ.என்.எஸ். துஷில் தொடங்கியது

அண்மையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட  பன்னோக்கு  ஏவுகணை போர்க்கப்பலான ஐ.என்.எஸ் துஷில், ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து இந்தியாவுக்கு 2024 டிசம்பர் 17 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டு, 2024 டிசம்பர் 9-ம் தேதி அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் பால்டிக், வடகடல், அட்லாண்டிக் பெருங்கடல், வழியாக பயணம் செய்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து,  பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்கள் வழியாக இந்தியா வந்து சேரும். ஐ.என்.எஸ் துஷில் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் ராஜதந்திரமிக்க நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உள்ளது. இந்தப் போர்க்கப்பல் கடற்கொள்ளைகளைத் தடுப்பது,  முக்கிய கடற்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது, கடல்சார் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

Read More »

ராய்காட் கோட்டையின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு, அகழ்வாராய்ச்சியின் முன்னேற்றங்களும் சவால்களும்

ராய்காட் கோட்டை 1909 முதல் இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் அதிகார வரம்பின் கீழ் மத்திய அரசால் பாதுகாக்கப்படும்  நினைவுச்சின்னமாக உள்ளது. இந்திய தொல்லியல் துறை மற்றும் ராய்காட் மேம்பாட்டு ஆணையம் இடையே 2017-ம் ஆண்டில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ராய்காட் கோட்டையின் சுற்றுப்பகுதியில் மேம்பாடு மற்றும் வசதிகளை வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை 1980-ம் ஆண்டு முதல் ராய்காட் கோட்டையின் பல்வேறு பகுதிகளில் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. ராய்காட் கோட்டைக்குள் மகா தர்வாசா, சிம்மாசனா, நாகர்கானா, ஜகதேஷ்வர் கோயில், பஜார்பேட்டை, ஹதி டேங்க் சுவர்கள், பால்கி தர்வாசா, மீனா தர்வாசா, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சமாதி பகுதி மற்றும் அஷ்டபிரதன்வாடா போன்ற பல்வேறு கட்டமைப்புகளின் பாதுகாப்பு இந்திய தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நடைபாதை, கழிவறை பிரிவு, குடிநீர், இருக்கைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் கலாச்சார அறிவிப்பு பலகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் இந்திய தொல்லியல் துறையால் செய்யப்பட்டுள்ளன. ராய்காட் கோட்டையைப் பாதுகாப்பது என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், மேலும் இது கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

புராதன கலாச்சார பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்தல்

இந்திய தொல்லியல் சர்வே நாடு முழுவதும் 3698 மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் இடங்களின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இந்திய தொல்லியல் துறை அலுவலர்களால் நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தேவை மற்றும் கிடைக்கும் இடங்களுக்கேற்ப நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட்ட நிதி விவரம் வருமாறு:                                               (தொகை ரூபாய் கோடிகளில்) வ.எண் ஆண்டு ஒதுக்கீடு செலவினம் 1. 2019-20 435.61 435.39 2. 2020-21 260.90 260.83 3. 2021-22 270.00 269.57 4. 2022-23 392.71 391.93 5. 2023-24 443.53 443.53 பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அழிப்பவர்கள், அகற்றுபவர்கள், மாற்றுபவர்கள், சிதைப்பவர்கள், ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »

நாட்டில் விரைவான வைஃபை சேவை

நாடுமுழுவதும் 31.05.2024 ம் தேதி  நிலவரப்படி மொபைல் சேவைகள் மக்கள் தொகையில் 99.21 சதவீதமாகவும், 3ஜி மொபைல் சேவைகள் மக்கள் தொகையில் 99.0 சதவீதமாகவும் உள்ளன. வைஃபை சேவையின்  தரநிலைகள், இணைய வழி சேவை வழங்குவோர், திட்டங்களின் வகைப்பாடுகள், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து பயனாளிகளின் எண்ணிக்கை  அமைகிறது. மொபைல் சேவைகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம்  அவற்றின் தொழில்நுட்ப-வர்த்தக சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மக்கள் வசிக்காத தொலைதூர கிராமங்களில் மொபைல் சேவைகளை படிப்படியாக கொண்டு வரும் வகையில் …

Read More »

பிரதமரின் கதிசக்தி திட்டத்தின்கீழ் முக்கிய ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மதிப்பீடு

உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 85 வது கூட்டத்தில் பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் ஐந்து திட்டங்கள் (2 ரயில்வே, நெடுஞ்சாலை மேம்பாட்டின் 3 திட்டங்கள்) மதிப்பீடு செய்யப்பட்டன.  பல்முனை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த  ஒருங்கிணைந்த மேம்பாடு, கடைக்கோடி பகுதிக்கும் இணைப்பு , பல்வகை வாகன முனையங்களுக்கிடையில் இணைப்பு ஆகிய குறிக்கோள்கள் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த திட்டங்கள் மூலம் பயண நேரங்களைக் குறைக்கவும், போக்குவரத்து வசதியை அதிகரிப்பதன் மூலமும் …

Read More »

நிலக்கரி இறக்குமதி குறைப்பு

உலகளவில் நிலக்கரி உற்பத்தியில்  ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா இருந்தபோதிலும் சில குறிப்பிட்ட வகை  நிலக்கரிகளைப் பொறுத்து குறிப்பாக கோக்கிங் நிலக்கரி, உயர்தர அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஆகியவற்றில் பற்றாக்குறை உள்ளது. நிலக்கரி விநியோகத்தில் உள்ள இந்த இடைவெளி காரணமாக எஃகு உற்பத்தி உட்பட முக்கிய தொழில்களை பாதுகாக்கவும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யவும் நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது. 2024-25 ம் நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் …

Read More »

தேசிய ஆயுஷ் இயக்கத்தில் சித்த மருத்துவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது – ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா

பொது சுகாதாரத்திற்கான சித்த மருத்துவம் என்ற கருப்பொருளில் 8 வது சித்த தினம் 19 டிசம்பர் 2024 அன்று சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலையரங்கில் கொண்டாடப்பட்டது, இவ்விழாவை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்ச்சியில் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா சிறப்பு …

Read More »