குவைத் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார். 2024 செப்டம்பரில் ஐநா பொதுச்சபை அமர்வின்போது , பட்டத்து இளவரசரை சந்தித்ததை பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். குவைத் உடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். இருதரப்பு உறவுகள் சிறப்பாக முன்னேறி வருவதை ஒப்புக் கொண்ட தலைவர்கள், ஒரு உத்திபூர்வ கூட்டாண்மைக்கு உயர்த்தப்பட்டதை வரவேற்றனர். ஐ.நா மற்றும் பிற பலதரப்பு மன்றங்களில் இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான ஒருங்கிணைப்பை அவர்கள் வலியுறுத்தினர். குவைத் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா-ஜிசிசி உறவுகள் மேலும் வலுப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பரஸ்பரம் வசதியான தேதியில் இந்தியாவிற்கு வருகை தருமாறு குவைத்தின் பட்டத்து இளவரசருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குவைத்தின் பட்டத்து இளவரசர், பிரதமரைக் கௌரவித்து விருந்து அளித்தார்.
Read More »ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
வ.எண் புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்படிக்கை குறிக்கோள் 01 பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தும். பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாகும். 02 இந்தியா மற்றும் குவைத் இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் . கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றிற்கு கலாச்சார பரிமாற்ற திட்டம் வழிவகுக்கும். 03 விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான திட்டம் (2025-2028) இந்தியா மற்றும் குவைத் இடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விளையாட்டுத் துறையில் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும். 04 சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் உறுப்பினர். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, கூட்டாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உறுப்பு நாடுகளுக்கு குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்க உதவும் வகையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அளவிடுவதற்கான முக்கிய பொதுவான சவால்களை இது நிவர்த்தி செய்கிறது.
Read More »குவைத் பிரதமரை, பிரதமர் சந்தித்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம் மற்றும் குவைத் சர்வதேச சோலார் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Read More »சௌத்ரி சரண் சிங் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஒருமைப்பாடு மற்றும் அச்சமற்ற தலைவர் போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டு- குடியரசு துணைத் தலைவர்
விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பத்திரிக்கைத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான சவுத்ரி சரண் சிங் விருதுகளை குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய திரு தன்கர், சௌத்ரி சரண் சிங்கின் அசாதாரண பாரம்பரியத்தைப் பாராட்டினார், கிராமப்புற மேம்பாடு, விவசாயிகள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பை அவர் சுட்டிக்காட்டினார். “சௌத்ரி சரண் சிங் நாட்டின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர். வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஒருமைப்பாடு, கிராமப்புற மேம்பாட்டிற்கான அர்ப்பணிப்பு, விவசாயிகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் தனது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்தும் ஒரு தலைவர் , ”என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார். “சௌத்ரி சரண் சிங் கம்பீரமான தன்மை, அரசாட்சி, தொலைநோக்கு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறார். அவர் இந்தியக் குடியரசின் மிகப்பெரிய மாநிலத்தின் முதல் முதலமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் ஆனார் என்பதில் ஆச்சரியமில்லை என்று திரு தன்கர் கூறினார். அவரது பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்த அவர், “இந்த மனிதரின் மகத்தான பங்களிப்பை மதிப்பிடுவதில் மக்கள் தொலைநோக்கு பார்வையற்றவர்களாக இருப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது. அவரது அற்புதமான குணங்கள், அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் கிராமப்புற இந்தியா பற்றிய அவரது அறிவு ஆகியவை உலகெங்கிலும் உள்ள அறிவொளி பெற்ற நபர்களின் பிரதிபலிப்புக்கு உட்பட்டவை. மண்ணின் மகன், அவர் கிராமப்புற இந்தியாவை மட்டுமல்ல, நகர்ப்புற இந்தியாவையும் நமது நாகரிக நெறிமுறைகளுடன் இணைந்த பார்வையுடன் கவனத்தில் கொண்டார்’’ என்றார். இன்று புது தில்லியில் சௌத்ரி சரண் சிங் விருதுகள் 2024 விருது பெற்றவர்களிடம் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், “கிராமப்புற வளர்ச்சியின் முதுகெலும்பு விவசாயம். விவசாயம் வளர்ச்சியடையாத வரை, கிராமப்புற நிலப்பரப்பை மாற்ற முடியாது. கிராமப்புற நிலப்பரப்பு மாறாத வரை, நாம் ஒரு வளர்ந்த தேசத்தை விரும்ப முடியாது என்று கூறினார். இந்தியாவின் பொருளாதாரப் பாதையைப் பற்றி விவாதித்த அவர், “சந்தேகத்திற்கு இடமின்றி, தற்போது, இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்து வருகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, நமது பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. நாங்கள் உலகளவில் ஐந்தாவது பெரிய நாடு மற்றும் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட மூன்றாவது பெரிய இடத்தைப் பெறுவதற்கான பாதையில் இருக்கிறோம். ஆனால் 2047-க்குள் வளர்ந்த நாடாக இருக்க, நமது வருமானம் எட்டு மடங்கு அதிகரிக்க வேண்டும் – இது ஒரு கடினமான சவால்’’ என்றார். இந்தச் சவாலை எதிர்கொள்ள, கிராமப் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்: “விவசாயிகளும் அவர்களது குடும்பமும் சந்தைப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், மற்றும் கிளஸ்டர்களை உருவாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டு தன்னிறைவுக்கு வழிவகுக்கும் போதுதான் கிராமப் பொருளாதாரம் உயரும். எங்களிடம் உள்ள மிகப்பெரிய சந்தை விவசாய விளைபொருள்கள் ஆகும், இருப்பினும் விவசாய சமூகங்கள் அதில் ஈடுபடவில்லை. விவசாயத் துறையானது பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக மாறுவதற்கு அரசுகளால் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ‘’ என கேட்டுக் கொண்டார். குடியரசுத் துணைத் தலைவர் ஜனநாயகத்தின் சாரத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்: “வெளிப்பாடும் உரையாடலும் ஜனநாயகத்தை வரையறுக்கின்றன. ஒரு நாடு எவ்வளவு ஜனநாயகமானது என்பது அதன் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் வெளிப்பாட்டின் நிலையால் வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு ஜனநாயகமும் வெற்றிபெற வேண்டுமானால், இரு தரப்பிலும் பெரும் பொறுப்புடன் கருத்துப் பரிமாற்றமும் உரையாடலும் ஒன்றாகச் செல்ல வேண்டும் என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பொறுப்பு வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். “இந்த விருதுகள், சந்ததியினர் சுயமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகக் கட்டமைக்கப்பட வேண்டும். செயல்பாட்டின் நெகிழ்வுத்தன்மைக்கு நிதி வலிமை அடிப்படையாகும். கிராமப்புற இந்தியாவின் நலன், விவசாயிகளின் நலன் – அது கார்ப்பரேட் துறை, அறிவுஜீவிகள் அல்லது பிற சமூகங்களில் இருந்து வருபவர்கள் – இது போன்ற நம்பிக்கையை வளர்க்க முன்வர வேண்டும். மற்றொரு சௌத்ரி சரண் சிங் வருவதற்கான நேரம் இது’’ என அவர் தெரிவித்தார். சௌத்ரி சரண் சிங் விருதுகள் 2024 விவசாயம், கிராமப்புற மேம்பாடு மற்றும் பத்திரிகை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டாடியது. கலாம் ரத்னா விருது திருமதி நீரஜா சௌத்ரிக்கு நுண்ணறிவு கொண்ட பத்திரிகையில் அர்ப்பணிப்பிற்காக வழங்கப்பட்டது. “இந்தியாவின் நீர்மனிதன்” டாக்டர் ராஜேந்திர சிங்கிற்கு நீர் பாதுகாப்பில் முன்னோடியாக இருந்த முயற்சிகளுக்காக சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. விவசாய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்தியதற்காக டாக்டர் ஃபிரோஸ் ஹொசைனுக்கு கிரிஷாக் உத்தன் விருது கிடைத்தது. கடைசியாக, கிசான் விருது திரு. ப்ரீதம் சிங்கின் விவசாயச் சிறப்பிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்க்கான மத்திய இணை அமைச்சர் (தனி பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி, மற்றும் பிற பிரமுகர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) சம்பிரதாய அணிவகுப்பு நடைபெற்றது
விமானப்படையின் சிறப்புப் படையான கருட்’ கமாண்டோக்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிக்கும் வகையில், கருஞ்சிவப்பு தொப்பி (மெரூன் பெரெட்) அணிந்து செல்லும் சம்பிரதாய அணிவகுப்பு இன்று (21 டிசம்பர் 2024) சண்டிநகர் விமானப்படை நிலையத்தின் கருட் ரெஜிமென்டல் பயிற்சி மையத்தில் (GRTC) நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக விமானப் பணியாளர் செயல்பாடுகளின் (போக்குவரத்து – ஹெலிகாப்டர்) துணைத் தலைவர் அணிவகுப்பை பார்வையிட்டார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் ‘கருட்’ வீரர்களுக்கு அவர்களின் வெற்றிகரமான தேர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இளம் கமாண்டோக்களிடையே உரையாற்றிய அவர் , வேகமாக மாறிவரும் பாதுகாப்பு சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்புப் படை திறன்களை மேம்படுத்துவது, கடுமையான பயிற்சி அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வெற்றி பெற்ற ‘கருட்’ பயிற்சியாளர்களுக்கு மெரூன் பெரட், கருட் தேர்ச்சி பேட்ஜ் ஆகியவற்றை வழங்கிய அவர், விருது பெற்றவர்களுக்கு கோப்பைகளையும் வழங்கினார். மெரூன் பெரெட் சடங்கு அணிவகுப்பு என்பது ‘கருட்’ வீரர்களுக்கு பெருமை, சாதனையின் தருணமாகும். உயரடுக்கு ‘கருட்’ படையில் இணைந்துள்ள ‘இளம் சிறப்புப் படையினர், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறனுக்கு மேலும் பலம் சேர்ப்பார்கள்.
Read More »டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கும் பாரத்நெட்
பாரத்நெட் அறிமுகம்: டிஜிட்டல் கண்டுபிடிப்புகளும் பயன்பாடுகளும் அதிகரித்து வரும் உலகில், இணைய இணைப்பு பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், ஆளுகை ஆகியவற்றிற்கான ஒரு முக்கிய அம்சமாக அந்த டிஜிட்டல் அம்சங்கள் மாறியுள்ளன. இதில் டிஜிட்டல் இடைவெளி என்பது குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தது, குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் இது அதிகமாக இருந்தது. இதை நிவர்த்தி செய்ய, மத்திய அரசு அக்டோபர் 2011-ல் பாரத்நெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது நாட்டின் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் குறைந்த செலவில் அதிவேக இணைய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லட்சிய திட்டமாகும். தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்த முன்முயற்சி, கிராமப்புற இந்தியாவை மேம்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நகர்ப்புற – கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் முயல்கிறது. பாரத்நெட் என்பது வெறும் உள்கட்டமைப்பு திட்டம் மட்டுமல்ல. இது உண்மையான டிஜிட்டல் தேசத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தின் முதுகெலும்பாகும். திருத்தப்பட்ட பாரத்நெட் 2023: ஆகஸ்ட் 2023-ல் , திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்திற்கு (ABP) அரசு ஒப்புதல் அளித்தது. 2.64 இலட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழை (OF) இணைப்பு மூலம் இணைய அணுகலை இந்தத் திட்டம் வழங்குகிறது. மேலும் கிராம பஞ்சாயத்து அல்லாத மீதமுள்ள கிராமங்களுக்கு (உத்தேசமாக 3.8 லட்சம்) தேவையின் அடிப்படையில் கண்ணாடி இழை இணைப்பை வழங்கவும் இத்திட்டம் வகை செய்கிறது. ரூ.1,39,579 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா நிதியம் டிஜிட்டல் பாரத் நிதியம் (டிபிஎன்) என்பது இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம், அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிதியமாகும் . இது யுனிவர்சல் சர்வீஸ் ஒபிளிகேஷன் ஃபண்டுக்கு (யுஎஸ்ஓஎஃப்) மாற்றாக இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோள்கள்: *கிராமப்புற, தொலைதூர பகுதிகளில் மலிவு மற்றும் உயர்தர மொபைல், டிஜிட்டல் சேவைகளை வழங்குதல் *அறிவு, தகவலுக்கான சமமான அணுகலை உறுதி செய்தல் *டிஜிட்டல் இணைப்பு, சேவைகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் *டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, அணுகலுக்கான தடைகளை அகற்றவும் பாரத்நெட்டின் செயல்பாடு பாரத்நெட் உலகின் மிகப்பெரிய கிராமப்புற பிராட்பேண்ட் இணைப்பு திட்டமாக செயல்படுகிறது. இத்திட்டம் பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் (BBNL ) என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலம் 25.02.2012 அன்று இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 30.04.2016 அன்று, தொலைத் தொடர்பு ஆணையம் இத்திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்த ஒப்புதல் அளித்தது. கட்டம் 1: தற்போதுள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்க கண்ணாடௌ கேபிள்களை அமைப்பதில் கவனம் செலுத்தியது. டிசம்பர் 2017-ல் இது நிறைவடைந்தது. இரண்டாம் கட்டம்: கண்ணாடி இழை, ரேடியோ, செயற்கைக்கோள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கூடுதலாக 1.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்த கட்டம் மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை உள்ளடக்கியது. கட்டம் 3: 5ஜி தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், அலைவரிசை திறனை அதிகரிப்பதன் மூலமும், வலுவான கடைசி மைல் இணைப்பை உறுதி செய்வதன் மூலமும் நெட்வொர்க்கை எதிர்காலத்தில் சரிசெய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அணுகல் தன்மை, நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி இந்த கட்டம் நடந்து கொண்டிருக்கிறது . பாரத்நெட்டின் தாக்கம்: பாரத்நெட் கிராமப்புற இந்தியாவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பல வழிகளில் பங்களித்துள்ளது. இந்தத் திட்டம் தொலைதூர கிராமங்களை அதிவேக இணையத்துடன் இணைத்து, மின்-ஆளுமை சேவைகள், ஆன்லைன் கல்வி, தொலை மருத்துவம் ஆகியவற்றை அணுக உதவுகிறது. இந்தியாவில் இணைய உள்ளடக்கம்: இந்தியாவில் இணைய இணைப்பை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. இதன் விளைவாக, அக்டோபர், 2024 நிலவரப்படி: *783 மாவட்டங்களில் உள்ள 4ஜி பேஸ் டிரான்ஸ்ஸீவர் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை 24,96,644 ஐ எட்டியுள்ளது . *779 மாவட்டங்களில் 4,62,084 பிடிஎஸ் நிறுவப்பட்டதன் மூலம் உலகில் 5G சேவைகளை இந்தியா மிக வேகமாக செயல்படுத்தியுள்ளது . *டேட்டாவின் விலை மார்ச் 2014-ல் ஒரு ஜிபி ரூ. 269 லிருந்து (மார்ச் 2014-ல்), தற்போது ரூ .9.08 ஆக வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. *சராசரி மொபைல் பிராட்பேண்ட் வேகம் மார்ச் 2014-ல் 1.30 எம்பிபிஎஸ் ஆக இருந்த்து. தற்போது 95.67 எம்பிபிஎஸ் ஆக அதிகரித்துள்ளது. *நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் 6,15,836 கிராமங்களில் 4ஜி மொபைல் இணைப்பு உள்ளது . கிராமப்புற இந்தியாவை டிஜிட்டல் அதிகாரம் பெற்ற சமூகமாக மாற்றுவதற்கான இலக்கை பாரத்நெட் கொண்டுள்ளது. பரந்த வாய்ப்புகளுடன் இணைய விரும்பும் லட்சக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு இது ஒரு உயிர்நாடியாக திகழ்கிறது. வலுவான செயலாக்கம், தொடர்ச்சியான முயற்சிகளுடன், பாரத்நெட் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, பாரத்நெட் திட்டத்தின் இணைய சக்தி இந்தியாவின் ஒவ்வொரு மூலையையும் மேம்படுத்தும்.
Read More »தொழில் துறையில் புதிய உயரங்களைத் தொட உதவும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகைத் திட்டம்
இந்தியாவின் உற்பத்தித் துறை அதன் உலகளாவிய நிலையை மறுவடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்கு சிந்தனை கொள்கைகளால் உந்தப்பட்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பரிணாமத்தின் மையமாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் (பிஎல்ஐ) திட்டம் உள்ளது. இது புதுமைகளை ஊக்குவித்தல், செயல்திறனை மேம்படுத்துதல், முக்கியமான தொழில்களில் போட்டித்தன்மையை அதிகரித்தல், தேசத்தை உலகளாவிய உற்பத்தி மையமாக நிறுவுதல் ஆகியவற்றுக்கான அரசின் முயற்சியாகும். மிஎல்ஐ திட்டம் முதலீடு, உற்பத்தி, வேலை உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளது. ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, 14 துறைகளில், ரூ .1.46 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது, இதன் விளைவாக ரூ.12.50 லட்சம் கோடிக்கு மேல் உற்பத்தி/விற்பனை அதிகரித்துள்ளது, 9.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு உருவாக்கம் நடைபெற்றுள்ளது. ஏற்றுமதி ரூ .4 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மின்னணுவியல், மருந்து, உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் உள்ளன. 2022-23, 23-24 நிதியாண்டில் முறையே 8 துறைகளில் ரூ.2,968 கோடியும், 9 துறைகளில் ரூ.6,753 கோடியும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2020-ல் தொடங்கப்பட்டது, பிஎல்ஐ திட்டம் தற்சார்பை நோக்கிய ஒரு பாய்ச்சல் ஆகும். உற்பத்தியில் சிறந்து விளங்குவதற்கும், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கும், உள்ளூர் முன்னேற்றம், உலகளாவிய போட்டித்திறன் ஆகிய இரண்டிற்கும் சக்தியளிக்கும் ஒரு செழிப்பான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் நாட்டின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் உற்பத்தி திறன்களையும் ஏற்றுமதியையும் மேம்படுத்துவதற்காக 14 முக்கிய துறைகளுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் ரூ.1.97 லட்சம் கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளன. 14 துறைகள்: *மொபைல் உற்பத்தி, குறிப்பிட்ட மின்னணு பாகங்கள், *ஆக்டிவ் ஃபார்மசூட்டிகல்ஸ், *மருத்துவ சாதனங்கள் உற்பத்தி *ஆட்டோமொபைல்கள், வாகன பாகங்கள் *மருந்துகள் *சிறப்பு ஸ்டீல் *தொலைத் தொடர்பு, நெட்வொர்க்கிங் தயாரிப்புகள் *மின்னணு/ தொழில்நுட்பத் தயாரிப்புகள் *வெள்ளைப் பொருட்கள் (ஏசி-கள், எல்இடி-கள்) *உணவுத் தயாரிப்புகள் *ஜவுளி தயாரிப்புகள்: எம்எம்எஎஃப் பிரிவு, தொழில்நுட்ப ஜவுளி *உயர் திறன் சூரிய சக்தி பிவி தொகுதிகள் *மேம்பட்ட வேதியியல் செல் (ACC) பேட்டரி *ட்ரோன்கள், ட்ரோன் பாகங்கள். பிஎல்ஐ திட்டங்கள் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகப் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது, 14 துறைகளில் பிஎல்ஐ திட்டங்களின் கீழ் 764 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 764 ஒப்புதல்களில், உணவுப் பொருட்கள் துறை அதிகபட்சமாக 182 ஒப்புதல்களுடன் முதலிடத்திலும், ஆட்டோமொபைல்கள், வாகன உதிரிபாகங்கள் துறை 95 ஒப்புதல்களுடன் அடுத்த இடத்திலும் உள்ளன. பிஎல்ஐ திட்டம் இந்தியாவின் குறு,சிறு, நடுத்த தொழில்துறைச் சூழல் அமைப்பில் ஒரு சிறந்த தாக்கத்தை உருவாக்க தயாராக உள்ளது. இத்திட்டம் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தியில் இந்தியாவின் தன்னம்பிக்கைக்கும் உலகளாவிய தலைமைக்கும் வழி வகுக்கிறது.
Read More »குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
“குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன். பல தலைமுறைகளாக குவைத்துடனான வரலாற்று தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். நாம் வலுவான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு நாடுகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களையும் கொண்டிருக்கிறோம். குவைத் அமீர், பட்டத்து இளவரசர், குவைத் பிரதமர் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக எதிர்கால ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள இந்திய வம்சாவளியினரை குவைத்தில் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுச் சிறப்பு, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கான இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தப் பயணம், இந்தியா – குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
Read More »தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பலை ஆராய, பழமையான ஒயிட் ரானைக் கண்டறியுமாறு பிரதமர் வலியுறுத்தல்
மார்ச் 2025 வரை நடைபெறும் ரான் உற்சவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் அழைத்துள்ளார். இந்த விழா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “கட்ச் உங்கள் அனைவருக்காகவும் காத்திருக்கிறது! தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் அழகிய ஒயிட் ரானின் ( உப்பு சதுப்பு நிலம்) , கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் கண்டறிய வாருங்கள். மார்ச் 2025 வரை நடைபெறும் இந்தத் திருவிழா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’.
Read More »குவைத்தில் 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியைச் சந்திப்பதை பிரதமர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், இன்று குவைத்தில் உள்ள 101 வயதான முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான திரு மங்கள் சைன் ஹந்தா ஜியை, புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான உரையாடலின் போது சந்திக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் பதிலளித்துள்ளார். சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “நிச்சயமாக! நான் இன்று குவைத்தில் திரு மங்கள் சைன் ஹந்தா அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
Read More »
Matribhumi Samachar Tamil