Thursday, April 09 2026 | 04:52:14 PM
Breaking News

5ஜி தொழில்நுட்பத்தை நாடு தழுவிய அளவில் வெளியிடுவதற்கான விரிவான திட்டம்

நாடு தழுவிய அளவில் 5ஜி தொழில்நுட்பத்தை நடைமுறைப் படுத்துவதற்காக,  5ஜி சேவைகளுக்கான அலைக்கற்றையை ஆகஸ்ட் 2022-ல் ஏலத்தின் மூலம் அரசு ஒதுக்கியுள்ளது. அதன்பிறகு, 5ஜி சேவைகள் 01அக்டோபர்2022 அன்று தொடங்கப்பட்டன. 31 அக்டோபர் 2024 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் 5ஜி சேவைகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது நாட்டின் 783 மாவட்டங்களில் 779 மாவட்டங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. மேலும், நாட்டில் 4.6 லட்சத்துக்கும் மேற்பட்ட 5ஜி அடிப்படை டிரான்ஸ்ஸீவர் நிலையங்கள் (பி.டி.எஸ்) நிறுவப்பட்டுள்ளன. 5ஜி சேவைகளை பரவலாக்க அரசு பல முன்முயற்சிகளை எடுத்துள்ளது, அவற்றில் பின்வருவன அடங்கும்: ஏலம் மூலம் செல்பேசி சேவைகளுக்கு போதுமான …

Read More »

நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில், 6,22,840 கிராமங்கள் செல்பேசி வசதி பெற்றுள்ளன

நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில் (இந்திய தலைமைப் பதிவாளர் கூற்றுப்படி), சுமார் 6,22,840 கிராமங்களில் செல்பேசி வசதி உள்ளது, இவற்றில் 6,14,564 கிராமங்கள் 30.09.2024 நிலவரப்படி 4ஜி சேவை இணைப்பு பெற்றுள்ளன. பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் பிரதமரின் பழங்குடியின நியாய மகா இயக்கத்தின் கீழ், 4,543 குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடியினர் குடியிருப்புகள், செல்பேசி வசதி இல்லாதவை என கண்டறியப்பட்டு, அவற்றில் 1,136 குடியிருப்புகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகள் உட்பட நாட்டின் ஊரக, தொலைதூர மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் செல்போன் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக டிஜிட்டல் பாரத் …

Read More »

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சமநிலையான, லட்சியமான, விரிவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன: பியூஷ் கோயல்

ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, செக் குடியரசு, எஸ்டோனியா, இத்தாலி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, மால்டா, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக் குடியரசு, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய ஐரோப்பிய ஆணைய தூதுக்குழுவினருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா, வர்த்தகத் துறை செயலாளர், டிபிஐஐடி செயலாளர் மற்றும் ஏனைய மூத்த அதிகாரிகள் …

Read More »

2024-25-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் அந்நிய நேரடி முதலீடு 26% அதிகரித்து $42.1 பில்லியனாக உள்ளது

ஏப்ரல் 2000 முதல் மொத்த அந்நிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) 1 டிரில்லியன் டாலரை எட்டியதன் மூலம் இந்தியா தனது பொருளாதார பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், அந்நிய நேரடி முதலீடு சுமார் 26% அதிகரித்து 42.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கணிசமான கடன் அல்லாத நிதி ஆதாரங்களை வழங்குவதன் மூலமும், தொழில்நுட்ப பரிமாற்றங்களை ஊக்குவிப்பதன் மூலமும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் இந்தியாவின் …

Read More »

நாடாளுமன்றக் கேள்வி: அணு மின் உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள்

அணுமின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள 8180 மெகாவாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகாவாட்டாக உயர்த்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2070 ஆம் ஆண்டு வாக்கில்  நாட்டின் எரிசக்தி கலவையை நிகர பூஜ்ஜியத்திற்கு மாற்றுவதற்காக, நாட்டின் எரிசக்தித் துறையை கார்பன் நீக்கம் செய்வதற்கான உத்தியின் ஒரு பகுதியாக அணுசக்தி விரிவாக்கம் உள்ளது. இந்திய அணு மின் கழகம் அமலாக்கும் திட்டங்களில் தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணு மின் திட்டம் 3,4,5,6 ஆகியவற்றில் மொத்தம் 2000 மெகா வாட் மின்னுற்பத்தியும் அடங்கும் தொலைதூரப் பகுதிகளில் சிறிய  அணு உலைகளை நிறுவி, அங்கு …

Read More »

ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்

அணுசக்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ஓய்வு பெற்ற விஞ்ஞானிகள் / பொறியாளர்கள் உள்ளிட்ட தலைசிறந்த நிபுணர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், அணுசக்தித் துறையில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கான ஹோமி பாபா இருக்கை உருவாக்கத் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், விருது பெறும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.2,00,000/- மதிப்பூதியம் வழங்கப்படும் (மதிப்பூதியம் மற்றும் ஓய்வூதியம் கடைசியாக பெற்ற ஊதியத்தை விட அதிகமாக …

Read More »

விண்வெளித் துறையில் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முயற்சி

இந்தியாவின் விண்வெளி தொலைநோக்குத் திட்டம் 2047-ல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்குகளை அடைய மத்திய அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், சர்வதேச கூட்டாண்மைகள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் விண்வெளி ஆய்வு பணிகளை முன்னெடுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன. விண்வெளி நடவடிக்கைகளில் இந்திய தனியார் துறையின் பங்களிப்பை அனுமதிக்க மத்திய அரசு 2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 2035-க்குள் பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவவும், 2040-க்குள் நிலவில் இந்தியரை தரையிறக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கு 2047-ஐ மத்திய …

Read More »

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது: பிரதமர்

ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது ஊரகப் பகுதிகளில், பெண்களுக்கு அதிகாரமளித்தலை மேம்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறியுள்ளார். தங்கள் வீட்டு வாசலிலேயே, சுத்தமான தண்ணீர் கிடைப்பதால், பெண்கள் இப்போது திறன் மேம்பாடு, தற்சார்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியும் என்று அவர் கூறினார். சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில், ஒரு வீடியோவைப்  பகிர்ந்து, அவர் கூறியுள்ளதாவது: “ஜல் ஜீவன் இயக்கம், குறிப்பாக நமது கிராமப்புறங்களில்  பெண்களுக்கு எவ்வாறு அதிகாரம் அளிக்கிறது …

Read More »

பிரதமருடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது: “மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.

Read More »

டிசம்பர் 13 அன்று பிரதமர் உத்தரப்பிரதேசம் பயணம்

பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி  கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.5500 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். பிரயாக்ராஜில் …

Read More »