Friday, December 05 2025 | 08:22:22 PM
Breaking News

விமான பரிசோதனையில் ஈடுபடும் விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா

விமானப்படையின் பரிசோதனை விமானிகள் பயிற்சி நிறைவு விழாவானது விமானம் மற்றும் அமைப்புகள்பரிசோநனை நிலையத்தில் உள்ள விமானப்படை பரிசோதனை விமானிகள்  பள்ளியில் 06-ம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை பராமரிப்பு அதிகாரி ஏர் மார்ஷல் விஜய் குமார் கார்க் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஐ.ஏ.எஃப்., டி.ஆர்.டி.ஓ., எச்.ஏ.எல்., சொசைட்டி ஆஃப் எக்ஸ்பரிமென்ட்டல் டெஸ்ட் பைலட்ஸ் (எஸ்.இ.டி.பி) மற்றும் சொசைட்டி ஆஃப் ஃப்ளைட் டெஸ்ட் இன்ஜினியர்ஸ் (எஸ்.எஃப்.டி.இ) ஆகியவற்றின் மூத்த பிரதிநிதிகளும் …

Read More »

டிஏபி உரம் கூடுதலாக இறக்குமதி செய்ய அரசு முயற்சி

நடப்பு ரபி பருவத்தில் நாட்டில் டிஏபி உரங்களின் தேவை 52.05 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ளது. நாட்டில் உரங்களின் சீரான  விநியோகத்தை உறுதி செய்யும் வகையிலும் போதிய அளவிலான உரங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு பயிர் பருவ காலங்கள் தொடங்குவதற்கு முன்னர் மத்திய வேளாண்மைத் துறை சார்பில் அனைத்து மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்த பின், உரங்களின் தேவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. …

Read More »

நானோ யூரியா இனி பிரதமரின் வேளாண் வள மையங்களில் கிடைக்கும்

உயிர் செயல்திறன் சோதனைகள் மற்றும் நச்சுயியல் சோதனைகளின் அடிப்படையில் மத்திய அரசு உரக் கட்டுப்பாடு ஆணை-1985-ன் கீழ் நானோ டிஏபி திட்டத்தை அறிவிக்கை செய்துள்ளது. விவசாயிகளிடையே நானோ உரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன: •    விழிப்புணர்வு முகாம்கள், காணொலி கருத்தரங்குகள், நாடகங்கள், கள செயல் விளக்கங்கள், வேளாண் மாநாடுகள், பிராந்திய மொழிகளில் விளம்பர படங்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் நானோ யூரியா பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. •    நானோ யூரியா பிரதமரின் வேளாண் …

Read More »

மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு இனி சுங்க வரி இல்லை

நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024 மூலம் டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை- 2013-ன் படி, இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) வரிகள், தீர்வைகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் …

Read More »

உள்நாட்டு மருந்து உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்

மருந்துகள் உற்பத்திக்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு 2022-23-ம் நிதியாண்டு முதல் 2027-28-ம் நிதியாண்டு வரையிலான திட்ட உற்பத்தி காலத்துக்கு  ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டு காலத்திற்கு அடையாளம் காணப்பட்ட மருந்துகள் உற்பத்தி செய்ய 55 மருந்து தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 48 உற்பத்தித் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 34 திட்டங்களுக்கு 25 வகையான மருந்துகளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றின் உள்நாட்டு உற்பத்தியை …

Read More »

வெங்காய விவசாயிகளுக்கு உதவும் சிறப்பு திட்டம்

வெங்காயம் உள்ளிட்ட அழுகும் தோட்டக்கலைப் பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சந்தை குறுக்கீட்டுத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. முந்தைய சாதாரண பருவத்தின் சராசரி விலைகளுடன் ஒப்பிடும்போது சந்தை விலைகள் குறைந்தது 10% வீழ்ச்சியடையும் போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நஷ்டத்தில் விற்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.  இதனால் ஏற்படும் நிதி இழப்புகள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே 50:50 என்ற அடிப்படையில் பகிர்ந்து …

Read More »

பிரதமரின் கிசான் திட்டத்தில் ததகுதியற்ற பயனாளிகளை அடையாளம் காணுவதற்கான தணிக்கை

பிரதமரின் கிசான் திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் நான்கு மாதங்களுக்கு  ஒரு முறை மூன்று சம தவணைகளில் ரூ.6,000/- நேரடி பணப்பரிமாற்றத்தின் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்படுகிறது. இத்திட்டம் உலக அளவில்  நேரடி பணப் பரிமாற்ற திட்டத்தின் மாபெரும் திட்டமாகும். விவசாயிகளை மையமாகக் …

Read More »

பிரதமரின் கிசான் மான் தன் திட்டத்தின் பயனாளிகள் தமிழ்நாட்டில் 1,10,582 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்

பிரதமரின் கிசான் மான் தன்  திட்டம் (பி.எம்.கே.எம்.ஒய்), ஒரு மத்திய துறை திட்டமாகும், இது 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும், இது 60 வயதை எட்டும்போது குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ .3000- உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஓய்வூதியத்தை வழங்குகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வயதான காலத்தில் சமூகப் பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து மாதந்தோறும் ரூ.55 …

Read More »

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை

2024-25 காரீப் சந்தைப் பருவத்தில் சாதாரண நெல் மற்றும் நெல் (கிரேடு-ஏ) ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை  குவிண்டாலுக்கு ரூ.2300 ஆகவும், குவிண்டாலுக்கு ரூ.2320 ஆகவும் அரசு நிர்ணயித்துள்ளது. 2024-25 காரீப் பருவ காலத்தில், நெல் கொள்முதலுக்காக (01.12.2024 வரை) விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.65,695 கோடியாகும். மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் …

Read More »

மெகா எண்ணெய் பனை மரம் நடுகை இயக்கம் மற்றும் அடைந்த மைல்கற்கள்

மெகா எண்ணெய் பனை தோட்ட இயக்கம், 2024 ஜூலை 15 முதல் செப்டம்பர் 30 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. 17,000 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 25 லட்சம் நடவுப்பொருட்கள் 15,755 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. சாத்தியமான பகுதிகளில் எண்ணெய் பனை சாகுபடி செய்யப்படும் பகுதிகள். அரசு திட்டத்தின் கீழ் எண்ணெய் பனை வளர்ப்பு பொருத்தமான வேளாண் காலநிலை நிலைமைகளைக் கொண்ட சாத்தியமான பகுதிகளில் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் …

Read More »