Friday, March 06 2026 | 02:05:43 PM
Breaking News

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

“ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி,  2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார். இந்தக் கண்காட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீட்டுக் கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் …

Read More »

நாடு தழுவிய வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை: அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது

இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்,  நாடு தழுவிய அளவில் வைஃபை  அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது.  இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யம். வைஃபை  நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் …

Read More »

பெருநிறுவன விவாகரங்கள் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகள்

நாட்டில் உள்ள பெருநிறுவனங்களின் செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டது. 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அத்துறைக்கான மத்திய அமைச்சகம் மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக சிறு நிறுவனங்களில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்திற்கான உச்சவரம்பு மற்றும் விற்பனை உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எளிதாக வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்கும் வகையில், கொள்கைகள், ஒழுங்குமுறை நெறிமுறைகள், தொழில்நுட்பம் …

Read More »

ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது

2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 2026 ஜனவரி 15 – ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள மாநகராட்சி பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வு, குரூப் II, தாள் – 5, தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத்திற்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடத்திற்கான தேர்வு, 2026 ஜனவரி 19 – ம் தேதி (திங்கட்கிழமை) அன்று …

Read More »

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி நகரில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது

ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிகள், பொதுப் போக்குவரத்து பகுதிகள் மற்றும் அதிவிரைவு முனையங்கள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது. 2025 நவம்பர் 11 முதல் 13 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், …

Read More »

பாதுகாப்புப் படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக ரூ. 79,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பாதுகாப்பு கொள்முதல் குழுமம் ஒப்புதல்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் குழுமத்தின் கூட்டத்தில், பாதுகாப்புப் படைகளின் பல்வேறு திட்டங்களுக்குத் தேவையான 79,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29, 2025 அன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவுகளுக்கான லாய்ட்டர் வெடிமருந்து அமைப்பு, குறைந்த உயர இலகுரக ரேடார்கள், பினாகா  ராக்கெட் லாஞ்சர் அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிந்து தாக்கும் அமைப்பு போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு …

Read More »

மனதின் குரல் நிகழ்ச்சியின் 129-வது அத்தியாயத்தில், 28.12.2025 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் வரவேற்கிறோம்.  சில நாட்களில் 2026ஆம் ஆண்டு தன்னைப் பதிவு செய்ய இருக்கிறது, நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, என் மனதில் ஓராண்டுக்கால நினைவுகள் நிழலாடுகின்றன – தேசத்தை ஒன்றாக இணைத்துவைத்த பல காட்சிகள், பல விவாதங்கள், பல சாதனைகள்.  2025ஆம் ஆண்டின் பல கணங்கள் பாரத நாட்டு மக்களான நமக்குப் பெருமிதத்தைச் சேர்த்தன.  தேசத்தின் பாதுகாப்புத் தொடங்கி விளையாட்டு மைதானம் வரை, …

Read More »

மோடி அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரிய அறிவியல் சீர்திருத்தங்களில் ஒன்றாக, அணுசக்தி சீர்திருத்தம் தொடர்பான சாந்தி மசோதா வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், அணுசக்தித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.  புதுதில்லியில் இன்று (28.12.2025) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, துணிச்சலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கூறினார். இந்தியாவின் அணுசக்தித் துறையில் சாந்தி மசோதா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்றும், பாதுகாப்பு, இறையாண்மை, பொது நலன் ஆகியவற்றில் சமரசமற்ற தரங்களைப் பேணும் அதே வேளையில், அமைதியான, தூய்மையான, நிலையான எரிசக்திக்கான திறனும் வலுப்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். 60 ஆண்டுகளாக இதுபோன்ற சீர்திருத்தங்கள் மேற்கோள்ளப்படவில்லை என்றும், தடைகளை அகற்றி, உலகளாவிய சிறந்த நடைமுறைகளுடன் இணைக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் திறனால் மட்டுமே இது சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார். அமைதியான அணுசக்தி பயன்பாட்டிற்கான இந்தியாவின் நீண்டகால உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், டாக்டர் ஹோமி பாபாவின் காலத்திலிருந்தே, இந்தியாவின் அணுசக்தி திட்டம் வளர்ச்சி, சுகாதாரம், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். சாந்தி மசோதா, அமைதியான நோக்கத்திலிருந்து மாறுபடவில்லை என்றும், தூய மின் உற்பத்தி, மருத்துவ பயன்பாடுகள், மேம்பட்ட ஆராய்ச்சி போன்ற  நோக்கங்களுக்காக அணுசக்தி விரிவாக்கத்தை வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கு அணுசக்தியும் இன்றியமையாதது என்று அவர் கூறினார். இந்தியா புதைபடிவ எரிபொருள்கள், நிலக்கரி ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்கும்போது அணுசக்தி ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் அணுசக்தி திறன் 2014-ம் ஆண்டில் சுமார் 4.4 ஜிகா வாட்டாக இருந்தது எனவும் இப்போது இது கிட்டத்தட்ட இருமடங்காக 8.7 ஜிகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.  வரும் ஆண்டுகளில் இதை கணிசமாக அதிகரிக்க தெளிவான திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் சுமார் 100 GW அணுசக்தி திறனை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுகிறது …

Read More »

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் குறைதீர்க்கும் பணிகளை விரைவுபடுத்த பயணிகளுக்கு உதவும் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது

கடந்த 11 ஆண்டுகளில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பயணிகள் போக்குவரத்து எண்ணிக்கையிலும், வழித்தட எண்ணிக்கையிலும் பெரிய உயர்வுக்கு வழிவகுத்தது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்க வெற்றியைக் கொண்டு வந்தாலும், விமான தாமதங்கள், பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள், பொருள்கள் தொடர்பான சிக்கல்கள், நெரிசல், நீண்ட வரிசை, நெரிசல் மிகுந்த காலங்களில் போதுமான வசதிகள் இல்லாதது போன்ற தொடர்ச்சியான சவால்களையும் ஏற்படுத்தியது. பயணிகளை மையமாகக் கொண்ட இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு கட்டமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த  பதில் செயல்முறை அவசியம். இந்த தேவைகளை உணர்ந்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தலைமையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், நிரந்தரமாக 24 மணி நேரமும் செயல்படும் பயணிகளுக்கான உதவி கட்டுப்பாட்டு அறையை நிறுவ முடிவு செய்து அதை செயல்படுத்தியுள்ளது. டிசம்பர் 03, 2025 முதல் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பயணிகளின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். திரு சமீர் குமார் சின்ஹா, இந்த மையத்தை தினமும் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்து, பயணிகளின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதை உறுதி செய்கிறார்.  குறைகளைத் தீர்ப்பதில் வேகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Read More »

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது

மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்யப்பட்டு 3.5 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், முக்கிய பெருநகரங்கள் முதல் தொலைதூர பகுதிகள் வரை, மின் வணிக பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான குறைகள் அதிகம் பெறப்பட்டன. இது தேசிய நுகர்வோர் உதவி எண்ணின் நாடு தழுவிய செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் வழக்குத் தொடரும் முன் குறைகளைத் தீர்க்க தங்கள் குறைகளை 1915 என்ற கட்டணமில்லா எண் மூலம் 17 மொழிகளில் பதிவு செய்யலாம் . ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் வழிமுறையான இன்கிராம் தளம் மூலமாகவும் குறைகளைச் சமர்ப்பிக்கலாம். நுகர்வோர் உதவி தொடர்பான இணையதளம்: www.consumerhelpline.gov.in நுகர்வோர் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், பிரச்சனைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காணவும் உதவி எண்ணை அதிக அளவில் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகாரங்கள் துறை கேட்டுக்கொள்கிறது.

Read More »