Monday, December 08 2025 | 05:15:10 PM
Breaking News

கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வழங்கினார்

கோயம்புத்தூரில்  இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்  திரு கே ஹரி, திரு புத்ரபிரதாப், திரு பி முரளி, திரு ரமேஷ் சுந்தர், திரு வி சிங்காரவேலு ஆகிய 5 பேருக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில், நேற்று (16.07.2025) நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் 97-வது நிறுவன தின விழாவின் போது இந்த விருதுகளை அவர்களுக்கு மத்திய வேளாண் …

Read More »

தூய்மை நமது கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது – குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

தூய்மை நமது கலாச்சார, ஆன்மீக உணர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான  தூய்மை கணக்கெடுப்பு (ஸ்வச் சர்வேக்ஷன்) விருதுகளை புதுதில்லியில் இன்று (17.07.2025) அவர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், நமது நகரங்களில் தூய்மைக்கான  முயற்சிகளை ஊக்குவிப்பதில் இந்த விருதுகள் வெற்றிகரமான  நடைமுறையாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டார். கடந்த ஆண்டு  உலகின் மிகப்பெரிய தூய்மை ஆய்வை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், …

Read More »

நாட்டில் கூட்டுறவுத்துறை 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் வலுப்படுத்தப்பட்டுள்ளது – மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

கூட்டுறவுத் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்ட 4 ஆண்டுகளுக்குள் 61 சிறப்பு முன்முயற்சிகள் மூலம் கூட்டுறவு இயக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இன்று நடைபெற்ற கூட்டுறவுத் திருவிழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் ராஜஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாநில அரசுப்பணிகளுக்குத் தேர்வு செய்யப்டப்ட 8,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார். கூட்டுறவுத்துறை சார்பில் பயனாளிகளுக்கு கடன்களை …

Read More »

தன தானிய வேளாண் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அறிக்கை வெளியிட்டார்

‘பிரதமரின் தன தானிய வேளாண்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவையின் முக்கிய முடிவு குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று செய்தியாளர்களிடம் உரையாற்றினார். உணவு தானிய உற்பத்தி 40% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும், பழங்கள், பால் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியும் வரலாற்று வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே, ஒரே மாநிலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு …

Read More »

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2014 தொகுதியின் உதவிப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய மத்திய செயலக அதிகாரிகள் குழு, அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2014 தொகுதியைச் சேர்ந்த உதவிப் பிரிவு அதிகாரிகள் (ASO) அடங்கிய மத்திய செயலக அதிகாரிகள் குழு, இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளுக்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்து, பதவி உயர்வு தொடர்பான விஷயங்கள் மற்றும் பிற சேவைப் …

Read More »

நாட்டிலேயே எடை குறைந்த சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை உருவாக்கி அதை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த சக்கர நாற்காலி இது என ஐஐடி கூறியுள்ளது. இந்த ஒற்றை குழாய் திட அமைப்பு (‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’) சக்கர நாற்காலி உள்நாட்டிலேயே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டதாகும். சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, பயனாளிகளின் உடல் அமைப்புக்கும், அவர்களின் தினசரி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ப …

Read More »

துணை மருத்துவ பணியாளர்கள் சுகாதார நடைமுறையின் முதுகெலும்பு ஆவர்: புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக இப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு பங்கேற்றார். துணை மருத்துவப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு  பட்டங்களை வழங்கிய அவர், பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ வடிவமைப்பதில் துணை மருத்துவப் பணியாளர்களின் முக்கியத்துவம் பற்றி அவர் எடுத்துரைத்தார். இந்த விழா இங்கு கூடியுள்ள இளைஞர்களுக்கு ஒரு மைல் கல்லாக …

Read More »

புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழக ஆட்சிமன்றக்குழு தலைவராக முனைவர் கோட்டா ஹரிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்

காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழக ஆட்சிமன்றக்குழு தலைவராக பத்மஸ்ரீ முனைவர் கோட்டா ஹரிநாராயணா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் 15.07.2025 அன்று அறிவித்துள்ளது. அவர் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தற்போதைய ஆட்சிமன்றக் குழு தலைவராகவும் பணியாற்றுகிறார். 1943-ம் ஆண்டு ஒடிசாவின் பிரம்மபூரில் பிறந்த முனைவர் கோட்டா ஹரிநாராயணா, வாரணாசியில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் விண்வெளிப் பொறியியலில் …

Read More »

ராவன்ஷா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ராவன்ஷா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (15.07.2025) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சுதந்திரப் போராட்ட காலத்தில் செயல்பாட்டு மையமாகவும், ஒடிசா மாநிலத்தை உருவாக்கிய இயக்கத்துடன் தொடர்புடையதுமான இந்த நிறுவனம், கல்வி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கி வருவதாக  தெரிவித்தார். இந்த நிறுவனத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பலர், …

Read More »

அனிமேஷன், விஷூவல் எஃபெட்க்ஸ் உள்ளிட்ட காட்சித் தொழில்துறை சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடக்கம்-இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் முதல் தொகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த நிறுவனம் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ், விரிச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப துறைகளில் தொழில் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை தொடங்குகிறது. 2025 மே மாதம் நடைபெற்ற உலக ஒலி-ஒளி பொழுதுபோக்கு உச்சிமாநாட்டில் இந்த நிறுவனம் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு அஸ்வினி …

Read More »