Saturday, December 06 2025 | 01:42:27 PM
Breaking News

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20, 21 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

பீகார், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 20,21 தேதிகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்வார். ஜூன் 20 அன்று பீகார் மாநிலம் சிவானுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர், நண்பகல் 12 மணி வாக்கில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருக்கும் பிரதமர் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார். இதன் பின்னர் ஒடிசாவின் புவனேஸ்வருக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் பிற்பகல் …

Read More »

குரோஷியா பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்களின் தமிழாக்கம்

மாண்புமிகு பிரதமர் அவர்களே, இரு நாடுகளின்  பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அழகான நகரமான ஜாக்ரெப்பில் எனக்குக் கிடைத்த வரவேற்பு, உற்சாகம் மற்றும் அன்பிற்காக பிரதமருக்கும், குரோஷியா அரசிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். நண்பர்களே, இந்தியாவும் குரோஷியாவும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்மைத்துவம் …

Read More »

லண்டனில் நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல் இந்தியாவின் உத்திசார் பொருளாதார தொலைநோக்குப் பார்வையை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார்

லண்டனில் இன்று நடைபெற்ற இந்திய உலகளாவிய மன்றம் 2025 இல், இந்தியாவின் உத்தி ரீதியான உலகளாவிய கண்ணோட்டத்தையும் பொருளாதாரத் தலைமையையும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் காட்சிப்படுத்தினார். மே 2025 இல் இந்திய-இங்கிலாந்து தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அவரது வருகை ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. “ஒப்பந்தம் முதல் செயல் வரை: இங்கிலாந்து-இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்” என்ற தலைப்பில் இந்திய …

Read More »

தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தனியார் டிஜிட்டல் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் புத்தொழில் நிறுவனங்களுக்கான சூழல் அமைப்பை வலுப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும் ஏதுவாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, தனியார் டிஜிட்டல் தளமான யுவர்ஸ்டோரி மீடியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாடு முழுவதும் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் இந்த ஒப்பந்தம் …

Read More »

அதிகாரிகளின் முடிவுகளும், செயல்பாடுகளும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியை கொண்டுள்ளன: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இந்திய நிறுவன சட்ட சேவை, விமானப் படை பாதுகாப்பு, தர உத்தரவாத சேவை, மத்திய தொழிலாளர் சேவை ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளே, வணக்கம்! இந்த மதிப்புமிக்க சேவைகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் சாதனையும், உறுதிப்பாடும், விடாமுயற்சியின் பிரதிபலிப்பாகும். பொது சேவையின் சவால்களை நீங்கள் ஏற்கும்போது, ​​உங்கள் முடிவுகளும் செயல்களும் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அந்தந்த களங்களில், நீங்கள் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான முன்னோடிகளாக செயல்பட வேண்டும். இந்திய நிறுவன சட்ட சேவைப் பயிற்சி …

Read More »

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனம் நடத்தும் யோகா விழிப்புணர்வு இயக்கத்தில் 25000 பேர் பங்கேற்பு

நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள சிங்க்ரௌலியை தளமாகக் கொண்ட மினிரத்னா நிறுவனமான நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம், சமூகத்தில் யோகா மற்றும் அதன் சுகாதார நன்மைகளை ஊக்குவிக்கும் வகையில் 2025 ஜூன் 15 முதல் ஜூன் 20, வரை ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. 2025 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், சர்வதேச …

Read More »

இமாச்சலப்பிரதேசத்திற்கு மத்திய அரசின் நிதியுதவியாக ரூ. 2006 கோடி வழங்குவதற்கு உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா ஒப்புதல்

இமாச்சலப் பிரதேசத்தில் 2023-ம் ஆண்டு நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவு, பெருமழை சம்பவங்களுக்குப் பிறகு மீட்பு, மறுசீரமைப்புத் திட்டத்திற்காக மத்திய அரசின் உதவியாக ரூ. 2006.40 கோடி வழங்குவதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நிதியமைச்சர், வேளாண் அமைச்சர் மற்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு நிதியின் கீழ் …

Read More »

நாடு முழுவதும் மே மாதத்தில் 8,835 அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்பு துறை, 2025 மே மாதத்திற்கான மாதாந்திர ‘செயலக சீர்திருத்தங்கள்’ அறிக்கையின் 22வது பதிப்பை வெளியிட்டுள்ளது. தூய்மைப் பணி, நிலுவையைக் குறைத்தல், முடிவெடுப்பதில் திறனை அதிகரித்தல், மின்-அலுவலகமயமாக்கல் அமல்படுத்துதல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மாற்றத்தக்க ஆளுகை மற்றும் நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு நடைபெற்று வரும் முன்முயற்சிளில் விரிவான பகுப்பாய்வை இந்த அறிக்கை அளிக்கிறது. …

Read More »

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார்

சுற்றுலாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்ஐபிசிசிடி) இந்தூர் வளாகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி …

Read More »

தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு சுங்கச் சாவடி செலவைக் குறைக்கும் சிறப்புத் திட்டம் : டாக்டர் எல் முருகன்

மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின்  சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000-க்கு பாஸ் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து துறை …

Read More »