உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் வகையில், உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடத்தில் இன்று மரம் நடும் இயக்கத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஏற்பாடு செய்தது. அன்னையின் பெயரில் மரக் கன்று நடும் இரண்டாம் கட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, தில்லி-டேராடூன் வழித்தடத்தில் சுமார் 40,000 மரக்கன்றுகளை நடுவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து – நெடுஞ்சாலை அமைச்சகத்தின் செயலாளர் திரு வி. உமாசங்கர், மரக்கன்றுகளை நடும் இயக்கத்தில் முதல் மரக்கன்றை நட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் திரு சந்தோஷ் குமார் யாதவ், தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரிகள் இந்த இயக்கத்தில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். பாக்பத் மாவட்ட ஆட்சியர் திருமதி அஸ்மிதா லால், காவல் கண்காணிப்பாளர் திரு சூரஜ் குமார் உள்ளிட்ட உள்ளூர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மரக் கன்றுகளை நட்டனர். தில்லி-டேராடூன் வழித்தடம் தில்லிக்கும் உத்தரகண்டிற்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 40,000 மரக் கன்றுகளை நடுவது, காற்றின் தரத்தை மேம்படுத்தி, மண் அரிப்பைக் குறைத்து பல சுற்றுச்சூழல் நன்மைகளை இந்தப் பகுதிக்கு வழங்கும். அன்னையின் பெயரில் மரக்கன்று இடம் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இதுவரை 5,12,000-க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நட்டுள்ளது.
Read More »அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் நேரிட்ட ஏராளமான உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்தார், அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் மகத்தான வலி மற்றும் இழப்பை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிதாதர். இன்று முன்னதாக, அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட திரு மோடி, பேரழிவிற்குப் பிறகு அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் அவசரகால …
Read More »யோகா இணைப்பு 2025 : ஒரே பூமி, ஒரே சுகாதாரத்திற்கான யோகா என்பது குறித்து மெய்நிகர் முறையில் உலகளாவிய உச்சிமாநாடு புதுதில்லியில் நாளை நடைபெறுகிறது
11-வது சர்வதேச யோகா தினத்தின் முன்னோட்டமாக புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (2025 ஜூன் 14) யோகா இணைப்பு என்ற உலகளாவிய மெய்நிகர் உச்சிமாநாட்டை ஆயுஷ் அமைச்சகம் நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த யோகா குருக்கள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதார நிபுணர்கள், வர்த்தக தலைவர்கள், ஆய்வாளர்கள், உலக அளவில் செல்வாக்கு செலுத்துவோரை இந்த உச்சிமாநாடு ஒருங்கிணைக்கும். யோகா துறையில் உயர்நிலை ஆய்வு அமைப்பான யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. சர்வதேச அளவிலான …
Read More »இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு
இந்தியா-மங்கோலியா கூட்டு ராணுவப் பயிற்சியான நோமாடிக் எலிபெண்ட்டின் 17வது பதிப்பு இன்று மங்கோலியாவின் உலான்பாதரில் நிறைவடைந்தது. பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், செயல்பாட்டு தளவாடங்கள் மற்றும் உத்திசார் செயல்பாடுகளின் இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங் ஆகியோர் நிறைவு விழாவில் பங்கேற்றனர். அருணாச்சல ஸ்கவுட்ஸ் பட்டாலியனின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களுடன் மொத்தம் 45 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவக் குழு, இரண்டு வார காலப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு …
Read More »நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறந்த நடைமுறைகள் குறித்த முதல் மாநாட்டை மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜே பி நட்டா மெய்நிகர் மூலம் தொடங்கி வைத்தார்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், தனது அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சிறந்த நடைமுறைகள்” குறித்த மாநாட்டின் முதல் பதிப்பில் மெய்நிகர் மூலம் உரையாற்றினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, பல்வேறு எய்ம்ஸ் நிறுவனங்கள் பின்பற்றும் முன்மாதிரியான நடைமுறைகளை எடுத்துரைக்கிறது. இதில் நோயாளிகளை மையமாகக் கொண்ட பராமரிப்பு, செயல்பாட்டுத் திறன், …
Read More »நாட்டின் தற்சார்பை வலுப்படுத்துவதாகஇளையோர் தலைமையிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன – பிரதமர் பாராட்டு
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் தற்சார்பு நிலையை அடைவதற்கு நாட்டில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா திட்டமானது இளைஞர்கள் புதுமைகளைப் படைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ள தாகவும் அவர் கூறினார். இது உலக அளவில் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், தொழில்நுட்பப் பயன்பாடு நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை …
Read More »சர்வதேச யோகா தினம் ஒரு சாதனை மட்டுமல்ல – இது ஒரு உலகளாவிய நல்வாழ்வு இயக்கம்: மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்
11-வது சர்வதேச யோகா தின விழாவிற்கான அறிமுக நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் இன்று நடைபெற்றது. சர்வதேச யோகா தினத்தையொட்டி முக்கிய நிகழ்ச்சி ஜூன் 21-ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கொண்டாட்டம் குறித்து ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், செயலாளர் திரு வைத்திய ராஜேஷ் கோடேச்சா ஆகியோர் செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் …
Read More »2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கோடைகால பாசிப்பயறும் உத்திரப்பிரதேசத்தில் நிலக்கடலையும் கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல்
2025–26 கோடைக்கால பயிர் பருவத்திற்காக ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொள்முதல் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மொத்தம் 54,166 மெட்ரிக் டன் பாசிப்பயறு கொள்முதல் செய்வதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2025–26 கோடை பயிர் பருவத்திற்காக உத்தரப் பிரதேசத்தில் 50,750 மெட்ரிக் டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கும் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் …
Read More »15 நாட்கள் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் நிறைவு
மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று குஜராத் மாநிலம் பர்தோலியில் நடைபெற்ற வேளாண் சம்மேளனத்தில் வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். 15 நாட்களாக நடைபெற்ற இந்த பிரச்சார இயக்கத்தின் நிகழ்ச்சிகளில் வேளாண் மேம்பாடு, விதைப்பு, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. 1928-ம் ஆண்டு ஜூன் 12 அன்று, சர்தார் …
Read More »மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் விரிவான அரசு மற்றும் தொழில்துறையினர் உடனான பேச்சுவார்த்தை மூலம் இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துகிறார்
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இரண்டு நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். முதல் நாளில் ஸ்வீடன் அரசின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தப் பயணம் இருதரப்பு பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துதல், வர்த்தகம், முதலீட்டு திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை கண்டறிவதை நோக்கமாகக் கொண்டதாகும். அமைச்சர் …
Read More »
Matribhumi Samachar Tamil