Friday, December 05 2025 | 11:06:45 PM
Breaking News

Tag Archives: Dr. Jitendra Singh

உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் குறித்த நூல் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார்

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (17.08.2025) பிரபல நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் டாக்டர் அம்ப்ரிஷ் மிதல், திரு சிவம் விஜ் ஆகியோரால் எழுதப்பட்ட “எடையை குறைக்கும் புரட்சி – எடை குறைப்புக்கான மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார். மருத்துவப் பேராசிரியரும், புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவரும், பல நூல்களை எழுதியவருமான மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் …

Read More »

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்: டாக்டர் ஜிதேந்திர சிங்

புது டெல்லி, ஜூலை 27: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை 30 ஆம் தேதி ஏவப்படும் “நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார்” (நிசார்) இஸ்ரோவின் சர்வதேச ஒத்துழைப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று இங்கு தெரிவித்தார். ஊடகங்களுக்கு விளக்கமளித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோள் பணிகள் முடிவடைந்து இருப்பதால் அது ஜூலை 30, …

Read More »

வரவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டினர்

அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், மத்திய கலாச்சார அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி, ஆகஸ்ட் 23, 2025 அன்று நடைபெறவிருக்கும் தேசிய விண்வெளி தின கொண்டாட்டங்களுக்கான விரிவான செயல்திட்டத்தை வகுக்க ஏற்பாடு செய்தார். இந்தியாவின் குறிப்பிடத்தக்க விண்வெளிப் பயணத்தைக் கொண்டாடுவதில் மாணவர்கள், அறிவியல் சமூகங்கள் மற்றும் பொதுமக்களை …

Read More »

நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை  2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன  என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் …

Read More »

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2014 தொகுதியின் உதவிப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய மத்திய செயலக அதிகாரிகள் குழு, அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள 2014 தொகுதியைச் சேர்ந்த உதவிப் பிரிவு அதிகாரிகள் (ASO) அடங்கிய மத்திய செயலக அதிகாரிகள் குழு, இன்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறைகளுக்கான இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கைச் சந்தித்து, பதவி உயர்வு தொடர்பான விஷயங்கள் மற்றும் பிற சேவைப் …

Read More »

சுகாதார – தொழில்நுட்பப் புரட்சியின் திருப்புமுனையாக இந்தியா உள்ளது: இ.டி. மருத்துவர்கள் தின மாநாட்டில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

எக்கனாமிக் டைம்ஸ் (இ.டி.) டைம்ஸ் நவ் ஏற்பாடு செய்திருந்த மருத்துவர் தின மாநாட்டில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் முக்கிய உரையாற்றினார். திரு ஜிதேந்திர சிங் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவரும் மருத்துவ பேராசிரியரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா சுகாதார-தொழில்நுட்ப புரட்சியின் திருப்புமுனையாக  உள்ளது என நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.  பொருளாதாரத்தில் உலக அளவில் 10-வது இடத்திலிருந்து 4-வது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது எனவும் இந்த ஏற்றம் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலையப் பயணம், உள்நாட்டு உயிரி அறிவியல் கருவிகளை சுமந்து சென்றிருப்பதாக அவர் தெரிவித்தார். விரைவில் ஒரு புதிய மருத்துவத் துறையான விண்வெளி மருத்துவத்திற்கு வழிவகுக்கும் ஒரு மைல்கல் இது என்று அமைச்சர் குறிப்பிட்டார். விரைவில், மருத்துவக் கல்வியில் விண்வெளி மருத்துவர்கள் என்ற ஒரு பிரத்யேகப் பிரிவு உருவாகலாம் எனவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்தியாவில் 70% க்கும் அதிகமானோர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றாலும், வயதான மக்களின் எண்ணிக்கையும் வேகமாக வளர்ந்து வருகின்றது என அவர் தெரிவித்தார். 1947-ம் ஆண்டில், சராசரி ஆயுட்காலம் 50-55 வயதாக இருந்தது எனவும் இப்போது அது 80-ஐ நெருங்குகிறது எனவும் அவர் கூறினார். இந்தியாவின் சமீபத்திய உலகளாவிய சாதனைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நோய்த் தடுப்பு மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்தார். கோவிட்-19-க்கான உலகின் முதல் மரபணு தடுப்பூசியையும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும் ஹெச்பிவி தடுப்பூசியையும் இந்தியா உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டார். மேலும், ஹீமோபிலியாவிற்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது எனவும் இதன் முடிவுகள் மதிப்புமிக்க நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தனியார் துறையுடனான முதல் கட்ட ஒத்துழைப்பே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றும் அவர் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு காரணமாக இந்த சாதனைகள் சாத்தியமானது என்று அவர் குறிப்பிட்டார். கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில்துறையினர் ஆகியோருக்கும் அரசுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அறிவியல் மற்றும் மருத்துவத்தின் ஆன்மா இரண்டையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Read More »

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை திரிபுரா முதலமைச்சர் சந்தித்தார்

திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று (16.02.2025) மத்திய அறிவியல், தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். மேம்பட்ட வானிலை முன்னறிவிப்பு, நிர்வாக விஷயங்கள், மூங்கில் தொழிலை ஊக்குவித்தல் உள்ளிட்ட மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் விவாதித்தார். சமீபத்தில் தொடங்கப்பட்ட அகர்தலா-அகௌரா ரயில் இணைப்பு மூலம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி – பங்களாதேஷ் இடையேயான இணைப்பை வலுப்படுத்துவது குறித்தும் …

Read More »

ஜம்மு-காஷ்மீரின் கத்துவாவில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் குடிநீர் திட்டங்கள்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீரில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர் திட்டங்களையும் திறம்பட செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். அங்குள்ள கத்துவாவின் ஜஸ்ரோட்டா கிராமத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஏழு குடிநீர் விநியோகத் திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். 25.31 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்களால், ஜஸ்ரோட்டா, ராக் ஹோஷியாரி, பட்யாரி, சக்தா சக், பதோலி சார்பாட், மங்க்தியான் உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள 2584 வீடுகளை உள்ளடக்கிய 15,881  பேர் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கத்துவா மாவட்டத்தில் 1369.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 303 குடிநீர் வழங்கல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஒருங்கிணைந்து தீர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் 100 நாட்களில் தமது நாடாளுமன்றத் தொகுதியில் செய்யப்பட்ட பணிகளை அமைச்சர் விவரித்தார். தற்போதைய அரசு நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு சேவை செய்வதில் ‘முழு அரசு’ அணுகுமுறையுடன் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், வாழ்வாதாரங்களை அதிகரிப்பதற்கும் சுற்றுலாவின் திறனை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், இப்பகுதியில் பசோஹ்லி, மந்தாலியா போன்ற இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். உதம்பூர் மாவட்டத்தின் மன்சர் பகுதி சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார். வரும் காலங்களில், கத்துவா மாவட்டம் பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புக்கான வழிகள் அதிகரிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஜம்மு காஷ்மீர் ஜல்சக்தி அமைச்சர் திரு ஜாவேத் அகமது ராணா, ஜல்சக்தித் துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More »

நாட்டின் எரிசக்தி ஆதாரங்களில் அணு எரிசக்தி திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்க உதவும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

2025-26-ம்  நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “அணுசக்தி இயக்கம்” நாட்டின் எரிசக்தி துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அணுமின் உற்பத்தி  இந்தியாவின் முக்கிய எரிசக்தி ஆதாரமாக மாற உதவும்  என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் அணுமின் உற்பத்தியின் முக்கிய பங்களிப்பை சுட்டிக்காட்டினர். எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்டுவதற்கு அணுமின் …

Read More »

மரபணு சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் நோயின் தனிப்பட்ட மேலாண்மைக்கு உறுதியளிக்கிறது: டாக்டர். ஜிதேந்திர சிங்

“மரபணு சிகிச்சை ஒவ்வொரு நோயாளிக்கும் தனிப்பட்ட முறையில் நோயை நிர்வகிக்க உறுதியளிக்கிறது. இரண்டு நபர்கள் ஒரே நிலையில் – அது புற்றுநோய், சிறுநீரக நோய் அல்லது வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டாலும் – ஒவ்வொரு விஷயத்திலும் சிகிச்சை வேறுபட்டதாக இருக்கலாம், தனிநபரின் தனிப்பட்ட மரபணு அமைப்பு, முன்பே இருக்கும் பாதிப்புகள் மற்றும் பரம்பரை பாதிப்புகள் ஆகியவற்றால் வழிநடத்தப்படும். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப் பொறுப்பு); பூமி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறைக்கான இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், ஜம்மு எய்ம்சில் மேம்பட்ட மரபியல் & துல்லிய மருத்துவத்திற்கான மையத்தைத் திறந்து வைத்து இவ்வாறு பேசினார். இந்த மையம், தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, தனிப்பட்ட மரபணு சுயவிவரங்களின் அடிப்படையில் இலக்கு சிகிச்சையை வழங்குவதற்காக அதிநவீன மரபணு ஆராய்ச்சியை மேம்படுத்துகிறது. மரபணு சிகிச்சையின் உருமாறும் ஆற்றலை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், மரபணு முன்னேற்றங்களுடன், மருத்துவர்கள் இனி ஒரு அளவு-பொருத்தமான அணுகுமுறையை நம்ப மாட்டார்கள், ஆனால் ஒவ்வொரு நபருக்கும் செயல்திறன் மற்றும் தனித்தன்மையை அதிகரிக்க சிகிச்சைகளை உருவாக்குவார்கள் என்று கூறினார். புதிதாகத் தொடங்கப்பட்ட மேம்பட்ட மரபியல் மற்றும் துல்லிய மருத்துவ மையம், இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி நிலப்பரப்பில் முன்னணியில் எய்ம்ஸ் ஜம்முவை வைக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், சுகாதாரத் துறையில் தொழில்நுட்பம் சார்ந்த முன்னேற்றத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது என்று ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டினார். உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் மேற்கோள் காட்டினார். இந்த மையத்தின் முக்கிய நோக்கம் துல்லியமான மருந்தை மலிவு விலையிலும், மக்களுக்கு அணுகக்கூடியதாகவும் மாற்றுவதாகும். தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகள் பாரம்பரியமாக விலையுயர்ந்ததாக இருந்தாலும், எய்ம்ஸ் ஜம்மு உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் அரசாங்க ஆதரவு பயோடெக் முன்முயற்சிகளைப் பயன்படுத்தி செலவுகளைக் குறைக்கவும், துல்லியமான மருத்துவத்தை பொது சுகாதாரத் திட்டங்களில் ஒருங்கிணைக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. டாக்டர். ஜிதேந்திர சிங், புற்றுநோய் சிகிச்சையில் துல்லியமான மருத்துவம் எவ்வாறு கேம்-சேஞ்சராக இருக்க முடியும் என்பதைப் பற்றி விரிவாகக் கூறினார், இது வழக்கமான கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக இலக்கு சிகிச்சைகளை வடிவமைக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது.  வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை ஹீமோபிலியாவுக்கான முதல் மரபணு சிகிச்சை சோதனையை நடத்துவதில் இந்தியாவின் சமீபத்திய வெற்றியை அவர் மேற்கோள் காட்டினா. முன்னதாக, தனது வரவேற்பு உரையில், எய்ம்ஸ் ஜம்முவின் இயக்குநர், டாக்டர் சக்தி குப்தா, எய்ம்ஸ் ஜம்முவை அமைத்து, தொடர்ந்து மேம்படுத்தியதற்காக டாக்டர் ஜிதேந்திர சிங்கைப் பாராட்டினார். எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா மற்றும் புதுதில்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் வி ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினர்.

Read More »