Monday, December 08 2025 | 06:56:30 PM
Breaking News

Tag Archives: India

இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை  2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை”  வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.  இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.

Read More »

தற்சார்பு இந்தியா: இந்திய ராணுவத்திற்கான ஆயுத கொள்முதலுக்காக எல் அண்ட் டி நிறுவனத்துடன் 7,629 கோடி ரூபாய் ஒப்பந்தம்

லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் 155 மிமீ / 52 காலிபர் கே 9 வஜ்ரா-டி ரக பீரங்கிகள் கொள்முதல் செய்வதற்காக 7,628.70 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 2024-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி புதுதில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எல் அண்ட் டி நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த …

Read More »

அதிநவீன கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த உயர்நிலை தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெறுமாறு விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற உயர்நிலை தொழில்நுட்பங்களில், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் மாறிவரும் காலத்திற்கேற்ப ஆழமான திறனைப் பெற வேண்டும். உயர்நிலையிலான அதி நவீன கண்டுபிடிப்புகளில்இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இதனை அவர்கள் மேற்கொள் வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தி உள்ளார். டிசம்பர் 19 அன்று தில்லி ஐஐடியில் இந்திய தேசிய பொறியியல் அகாடமியின் ஆண்டு மாநாட்டின் தொடக்க …

Read More »

இந்தியாவுக்கான பயணத்தை ஐ.என்.எஸ். துஷில் தொடங்கியது

அண்மையில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்ட  பன்னோக்கு  ஏவுகணை போர்க்கப்பலான ஐ.என்.எஸ் துஷில், ரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து இந்தியாவுக்கு 2024 டிசம்பர் 17 அன்று தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தப் போர்க் கப்பல் ரஷ்யாவில் கட்டப்பட்டு, 2024 டிசம்பர் 9-ம் தேதி அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில் இயக்கி வைக்கப்பட்டது. இந்தப் போர்க்கப்பல் பால்டிக், வடகடல், அட்லாண்டிக் பெருங்கடல், வழியாக பயணம் செய்து இந்தியப் பெருங்கடலைக் கடந்து,  பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்கள் வழியாக இந்தியா வந்து சேரும். ஐ.என்.எஸ் துஷில் போர்க்கப்பல் இந்தியக் கடற்படையின் ராஜதந்திரமிக்க நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக உள்ளது. இந்தப் போர்க்கப்பல் கடற்கொள்ளைகளைத் தடுப்பது,  முக்கிய கடற்பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது, கடல்சார் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொள்வது ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

Read More »

இந்தியாவில் பள்ளிக் கல்வியின் தரம், முன்னேறி வருகிறது – திரு தர்மேந்திர பிரதான்

கடந்த பத்தாண்டுகளில், இந்த அரசின் தலைமையின் கீழ் இந்தியாவின் பள்ளிக் கல்வி முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் முதல் பெண் சக்திக்கு அதிகாரமளித்தல்,இந்திய மொழிகளை ஊக்குவித்தல் என்பதுவரை, ஒவ்வொரு முயற்சியும் தரம், சமத்துவம் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டால் மேற்கொள்ளப்படுகிறது என்று திரு தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். நமது பள்ளிகள் கற்றல் மையங்களாக மட்டுமின்றி, நாட்டில் உள்ள …

Read More »

பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் இது மற்றவர்களை இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

பாரம்பரிய அறிவை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் இது மற்றவர்களை இந்தியாவை முன்னேற்ற முடியும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை  இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர்நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு  மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  கூறியுள்ளார் அறிவியல் மற்றும் பாரம்பரிய ஆராய்ச்சி முன்முயற்சியின் ஐந்தாண்டு கொண்டாட்டத்தில் பேசிய அமைச்சர், இந்தியாவின் பண்டைய ஞானத்தை சமகால அறிவியல் கண்டுபிடிப்புகளுடன் …

Read More »

இலங்கை – இந்தியா கடற்டை கூட்டுப்பயிற்சி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது

இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி டிசம்பர் 17 முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17 முதல் 18 வரையிலும், கடல் மார்க்கப் பயிற்சி டிசம்பர் 19 முதல் 20 வரையும் நடைபெறவுள்ளது. 2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLINEX எனப்படும் கடற்படை கூட்டுப்பயிற்சி பல ஆண்டுகளாக இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு கடற்படை பயிற்சிகளாகும். இந்திய கடற்படையின் ரோந்து கப்பலான ஐஎன்எஸ், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயுர ஆகியவை சிறப்பு படை குழுக்களுடன் பயிற்சியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. டிசம்பர் 19-ம் தேதி தொடங்கும் கடல் மார்க்கப் பயிற்சியில், சிறப்புப் படை நடவடிக்கைகள், துப்பாக்கிச்சுடுதல், தகவல் தொடர்பு பயிற்சிகள், கடல்சார் நடைமுறைகள் உள்ளிட்ட கூட்டுப் …

Read More »

இந்தியா – இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

1. பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர். 2. ஆழமான வேரூன்றிய கலாச்சார, நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அருகாமை, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் அமைந்துள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 3. 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய …

Read More »

எதிர்கால உலகை இந்தியாவின் அறிவுத்திறன் வழிநடத்தவுள்ளது : ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம்

இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னோடி நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கழகத்தின்  (என்.ஐ.டி.டி.டி.ஆர்) வைர விழாவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 15, 2024 அன்று இந்நிறுவனம் 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஏ.ஐ.சி.டி.இ தலைவர், இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கும் நவீன தொழில்நுட்ப …

Read More »

2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதம் ஆக மாற்றுவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை நனவாக்க டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு

அரசின் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு); புவி அறிவியல்,  பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், 2047-க்குள் இந்தியாவை “வளர்ச்சியடைந்த பாரதமாக ” மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கொள்கையை  நனவாக்க அனைத்து அரசுத் துறைகளையும், மத்திய மற்றும் மாநில முயற்சிகளையும் “முழு அரசு” மற்றும் “முழு அறிவியல்” அணுகுமுறையுடன் இணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.  புதுதில்லியில் அனைத்து அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களின் மாதாந்திர கூட்டு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார். இன்று புதுதில்லியில் நடைபெற்ற அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டத்தின்போது, அறிவியல் முன்முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் அந்தந்த மாநில அறிவியல் குழுக்கள் தீவிரமாக பங்காற்ற வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். அறிவியலில் கூட்டுறவு கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், நீடித்த மற்றும் முற்போக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தற்போதைய திட்டங்களை மதிப்பிடுவதற்கும், இந்தியாவின் அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கான எதிர்கால உத்திகளைப் பற்றி விவாதிப்பதற்கும் இந்த கூட்டம் ஒரு முக்கிய தளமாக செயல்பட்டது. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், மண்டல வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் தேசிய இலக்குகளுக்கு பங்களிப்பு செய்தல் ஆகியவற்றில் மாநில அறிவியல் கவுன்சில்களின் முக்கிய பங்கை டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்கும், அடிமட்ட கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள உள்ளூர் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மாநிலங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் அறிவியல் முகமைகளிலிருந்து வெளிவரும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான சந்தை மூலதனமயமாக்கலின் முக்கியத்துவம் விவாதங்களின் மையமாக இருந்தது. முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சுகாதாரம், வேளாண்மை மற்றும் பருவநிலை பின்னடைவு போன்ற துறைகளில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அரசு ஆதரவு நிறுவனங்களிடமிருந்து அதிநவீன தீர்வுகளை அளவிட வேண்டியதன் அவசியத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். அறிவியல் சூழலில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சியின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், ஒருங்கிணைந்த அறிவியல் கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசின் முன்முயற்சிகளுடன் மாநிலங்கள் இணைய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அணுகுமுறை, பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் மற்றும் நாடு முழுவதும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் நன்மைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார். “மாநில அறிவியல் கவுன்சில்கள் தொலைநோக்கை அடைவதில் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நமது அறிவியல் வளங்களின் முழு திறனையும் பயன்படுத்த முடியும்” என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார்.  அறிவியல் செயலாளர்களின் மாதாந்திர கூட்டம், ஒத்துழைப்பு, கண்டுபிடிப்பு மற்றும் வணிகமயமாக்கல் மூலம் வலுவான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மத்திய மற்றும் மாநில முயற்சிகளை ஒருங்கிணைத்தல், பொது-தனியார் கூட்டாண்மையை ஊக்குவித்தல் மற்றும் புதுமைகளை சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் முக்கியத்துவம், 2047 க்குள் வளர்ந்த இந்தியாவுக்கான பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை அடைவதில் அறிவியலின் உருமாறும் பங்கை வலியுறுத்துகிறது. இந்த முழு அறிவியல் அணுகுமுறை தொழில்நுட்பம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. மூத்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் சூட் தலைமை தாங்கினார்.

Read More »