அஜர்பைஜானின் பாகுவில் 19.11.2024 அன்று நடைபெற்ற ஐ.நா காலநிலை மாற்ற உச்சி மாநாட்டிற்கான சிஓபி29-ன் போது, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் குறித்த அமைச்சர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் ஓர் அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது. அதில், “வளர்ந்த நாடுகளின் வரலாறு காணாத கரியமில வாயு வெளியேற்றம் காரணமாக வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைப் பெரும்பாலும் சந்தித்து வருகின்றன. வளரும் நாடுகளாகிய எங்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களின் வாழ்க்கை – அவர்களின் உயிர்வாழ்வு – அவர்களின் …
Read More »கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களுடன் மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி கலந்துரையாடினார்
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை, கல்வித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ஜெயந்த் சவுத்ரி, பல்வேறு தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயாக்களைச் சேர்ந்த இளம் தடகள மற்றும் பாரா விளையாட்டு வீரர்களுடன் இன்று கலந்துரையாடினார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும், ஏர் ரைஃபிள் துப்பாக்கி சுடுதலில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியருமான …
Read More »36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஆயுதப்படையினர், அதிகாரிகள் ஆகியோரின் துணிச்சல் மற்றும் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவர்கள் கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், வீடியோக்கள் போன்றவற்றை அனுப்பியுள்ளனர் வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரம், தன்னலமற்ற தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் எழுச்சியூட்டும் கதைகளையும், இந்த துணிச்சல்மிக்கவர்களின் வாழ்க்கைக் கதைகளையும் மாணவர்களிடையே கூறி, அவர்களிடையே …
Read More »இந்தியா-ஜப்பான் கூட்டுப்படை அதிகாரிகளின் 2-வது பேச்சுவார்த்தை புதுதில்லியில் நிறைவடைந்தது
ஒருங்கிணைந்த பாதுகாப்பு அதிகாரிகள், ஜப்பான் பாதுகாப்புப் படை அதிகாரிகள் இடையேயான இந்தியா-ஜப்பான் 2-வது கூட்டுப்படை பேச்சுவார்த்தை 2024 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நிறைவடைந்தது. நவீன போர்முறையின் வளர்ந்து வரும் இயக்கவியலை அங்கீகரிக்கும் வகையில், இரு நாடுகளும் தங்களது பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய கூறுகளாக விண்வெளி மற்றும் இணையதள தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் பகிர்ந்து கொள்ளப்பட்ட உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டன. ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை அதிகாரிகள் துணைத்தலைவர் ஏர் வைஸ் மார்ஷல் …
Read More »வியன்டியானில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசியா, லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர்களை சந்தித்து பேசினார்
வியன்டியானில் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கிடையே பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமது கலீத் பின் நோர்டின் மற்றும் லாவோஸ் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சான்சமோன் சன்யாலத் ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். மலேசிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான முடிவுகளை எட்டுவதற்கான பரஸ்பரம் இருதரப்பு முயற்சிகளை ஆதரிக்க ஒப்புக்கொண்டனர். 2025 -ம் …
Read More »வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவியானது சட்டமுறை எடையளவு விதிகள்-2011-ல் சேர்ப்பு
நுகர்வோர் விவகாரத் துறையின் சட்டமுறை எடையியல் பிரிவானதூ அளவிடல் மற்றும் எடைகள், அளவீடுகளின் துல்லியம் ஆகியவற்றின் உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவிகளுக்கான வரைவு விதிகள், பொது ஆலோசனைக்காக துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய சட்ட அளவியல் நிறுவனம் (ஐ.ஐ.எல்.எம்), பிராந்திய குறிப்பு ஆய்வகங்கள் (ஆர்.ஆர்.எஸ்.எல்), உற்பத்தியாளர்கள் மற்றும் வி.சி.ஓ.க்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட துறையால் அமைக்கப்பட்ட குழுவால் வரைவு விதிகள் வகுக்கப்பட்டன. பங்குதாரர்கள் வழங்கிய …
Read More »திறமையான வெளிப்படைத்தன்மையுள்ள பொது விநியோக முறைக்கு மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது
டிஜிட்டல் மயம், வெளிப்படைத்தன்மை, திறமையான விநியோக நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி பொது விநியோக முறையை சீர்திருத்தம் செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள் காரணமாக, இடையிலேயே பலன் கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு இலக்குகள் எட்டப்பட்டு வருகின்றன. விநியோகத்தைப் பொறுத்தவரை இந்திய உணவுக் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான செயல்பாடுகளும் சேவைகளும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு விநியோகத் தொடர் நிர்வாக முறை கடைபிடிக்கப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு …
Read More »ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுக்க டிராய் எடுத்துவரும் நடவடிக்கைகள்
ஸ்பேம் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான பிரச்சனையை எதிர்த்துப் போராட இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிரான புகார்கள் மீதான கடுமையான நடவடிக்கைகள் காரணமாக அவை வெகுவாகக் குறைந்துவருகின்றன.2024, ஆகஸ்ட் 13 அன்று டிராய் வெளியிட்ட வழிகாட்டுதல்படி, விதிமுறைகளை மீறி விளம்பரக் குரல் அழைப்புகளைச் செய்யும் எந்தவொரு நிறுவனமும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். அனைத்து தொலைத்தொடர்பு வளங்களையும் துண்டித்தல், இரண்டு …
Read More »இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அறிக்கை
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் ஊடாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து, புத்தாண்டில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான இங்கிலாந்தின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். சமநிலையான, பரஸ்பரம் பயனளிக்கும் மற்றும் முன்னோக்கிய பார்வையுடைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை அடைவதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு, பரஸ்பர திருப்தியுடன் மீதமுள்ள …
Read More »2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்கள், முறைப்படுத்தாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி குறைந்துள்ளது
2024 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் முறைப்படுத்தப்படாத துறைகளின் நிலக்கரி இறக்குமதி 63.28 மில்லியன் டன்னாக குறைந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70.18 மில்லியன் டன்னாக இருந்தது. அதாவது நிலக்கரி இறக்குமதி 9.83% குறைந்துள்ளது. இதே போல் நிலக்கரி அடிப்படையிலான உள்நாட்டு அனல் மின் நிலையங்களின் நிலக்கரி இறக்குமதி 8.59% குறைந்தது. அதாவது 10.71 மில்லியன் டன்னிலிருந்து 9.79 மில்லியன் டன்னாக குறைந்தது. இந்தத் துறைகள் உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை சார்ந்திருப்பது அதிகமாகி உள்ளதை இது காட்டுகிறது. இருப்பினும், எஃகு தொழிற்சாலைக்குத் தேவையான நிலக்கரி இறக்குமதியும், இறக்குமதி …
Read More »