மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் என்ற முன்னோடித் திட்டத்தை 2020-21-ம் நிதியாண்டு முதல் 2024-25-ம் நிதியாண்டு வரை 5 ஆண்டு காலத்திற்கு மொத்தம் ரூ.20,050 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தி வருகிறது. மத்திய மீன்வளத்துறை பல்வேறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், இதர செயலாக்க முகமைகளின் ரூ.20864.29 கோடி மதிப்பீட்டிலான மீன்வள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் …
Read More »பெண் தலைவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கு
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், புதுதில்லியில் பல்கலைக்கழக மானிய குழு ஏற்பாடு செய்த பெண் தலைவர்களுக்கான ஒருநாள் பயிலரங்கை தொடங்கி வைத்தார். இந்தப் பயிலரங்கில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்க எட்டும் வகையில், பயிலரங்குகள் நடத்தப்பட உள்ளன. மத்திய வடகிழக்கு பிராந்திய கல்வி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார், அந்த அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் குமார், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ் …
Read More »பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தடுப்பு குறித்த பயிலரங்கு
பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கவும், பணியிடங்களில் பாலியல் வன்கொடுமையை தடுப்பது குறித்த பயிலரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. 2024 டிசம்பர் 12-ம் தேதி அன்று புது தில்லியில் உள்ள நவ் சேனா பவன் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கை இந்திய கடற்படை ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கை ஆயுதப்படை மருத்துவ சேவைப்பிரிவு இயக்குநர் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பணியிடங்களில் பாலினச் சமத்துவத்தை பின்பற்ற வேண்டிய …
Read More »விதிமுறைகளை மீறிய 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
நுகர்வோர் பாதுகாப்பு (நேரடி விற்பனை) விதிகள், 2021ஐ மீறியதாகக் கண்டறியப்பட்ட 17 நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவற்றில் 13 நிறுவனங்கள் மீதான புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளன. மூன்று நிறுவனங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, நேரடி விற்பனை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், தொடர்புடைய சட்ட கட்டமைப்புடன் இணங்குவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் சிசிபிஏ தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, இந்த நேரடி விற்பனை நிறுவனங்களின் வலைத்தளங்களை ஆணையம் கவனமாக ஆய்வு செய்தது. …
Read More »கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வெளியிட்டார்
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தின் நூற்றாண்டு விழா சின்னத்தை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு வெளியிட்டார். கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் தனது 100-வது சேவையை கொண்டாடுவது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இந்த நிகழ்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னாம், இந்திய …
Read More »2024 டிசம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி வரும் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் தில்லியில் தலைமைச் செயலாளர்களின் நான்காவது தேசிய மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். இது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் அதிகரிப்பதற்கான மற்றொரு முக்கியப் படியாக இருக்கும். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையை வலுப்படுத்தவும், விரைவான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் தலைமைச் செயலாளர்கள் மாநாடு உந்தப்படுகிறது. …
Read More »உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா …
Read More »18வது உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற குகேஷின் சாதனை குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய வாழ்த்துரை
மாநிலங்களவையில், அதன் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ள இளம் வீரர் குகேஷூக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். அவரது உரை பின்வருமாறு: “மாண்புமிகு உறுப்பினர்களே, இந்திய விளையாட்டு வரலாற்றில் அற்புதமான உலகளாவிய சாதனைப் படைக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு அற்புதமான சதுரங்கப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து இளைய உலக சதுரங்க சாம்பியனாக நமது 18 வயது சதுரங்க விற்பன்னர் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த நட்சத்திர வெற்றி சதுரங்கப் பலகையையும் தாண்டி எதிரொலிக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு …
Read More »நாடாளுமன்ற கேள்வி: பாலசோரில் டாப்ளர் ரேடார் நிலையம்
டாப்ளர் வானிலை ரேடார்கள் (டி.டபிள்யூ.ஆர்) நெட்வொர்க்கானது முக்கியமாக இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழையைக் கண்காணிக்கவும், 3 மணி நேரம் வரை சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது. 6 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை கணிப்பதற்காக இந்தக் கட்டமைப்பு வானிலை முன்கணிப்பு மாதிரிகளில், குறிப்பாக நவ்காஸ்ட் மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்த டி.டபிள்யூ.ஆர்களின் உதவியுடன் தகுந்த முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. பாலசோரில் உள்ள …
Read More »நேபாள ராணுவ தலைமை தளபதி, பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை 2024 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பான பல விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நேபாள இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், வழக்கமான பயிற்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிடங்குகள் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் வலுவான …
Read More »
Matribhumi Samachar Tamil