பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவின் கூட்டம் 2024, டிசம்பர் 17 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. முந்தைய பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலை பெருநிறுவனமயமாக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நிதி புள்ளிவிவரங்கள், நவீனமயமாக்கல், மூலதன செலவினம், ஏற்றுமதி, உருவாக்கப்பட்ட புதிய தயாரிப்புகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து குழு உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டது. முக்கியமான பொருட்களை உள்நாட்டுமயமாக்குதல், உற்பத்தி வசதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் …
Read More »பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் 11.6 லட்சம் பெண் இயக்குநர்கள்
2024 நவம்பர் 30 அன்றைய நிலவரப்படி பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத பொது நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பெண் இயக்குநர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பின்வருமாறு; வகை பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் 8,672 பட்டியலிடப்படாத பொதுத் துறை நிறுவனங்கள் 46,939 ஒரு நபர் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 11,11,040 பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம், நிறுவனங்களின் பல்வேறு நிலைகளில் முடிவெடுப்பதில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவனங்கள் சட்டம், 2013-ல் பின்வரும் விதிகளை சேர்த்துள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 149 துணைப்பிரிவு (1)-ன் கீழ், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் (இயக்குநர்களின் நியமனம் மற்றும் தகுதி) விதிகள், 2024-ன் விதி 3-ன் படி, ரூ.100 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட பங்கு மூலதனம் கொண்ட அல்லது ரூ.300 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட விற்றுமுதல் கொண்ட ஒவ்வொரு பட்டியலிடப்பட்ட நிறுவனமும் மற்ற ஒவ்வொரு பொது நிறுவனமும் குறைந்தது ஒரு பெண் இயக்குநரை நியமிக்க வேண்டும். இந்த சட்டத்தின் விதிமுறைகளை மீறும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கும் மற்றும் நிறுவனத்தின் ஒவ்வொரு அதிகாரிக்கும், நிறுவனங்கள் சட்டம், 2013-ன் பிரிவு 172-ன் கீழ் அபராதம் விதிப்பதற்கு வகை செய்கிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை இணையமைச்சரும், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.
Read More »திவால் தொடர்பான நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில் திவால் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்கள்
திவால் நடைமுறைகளை வலுப்படுத்தும் வகையில், அச்சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் சர்வதேச செலாணிக் கொள்கையில் ஆறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்திய திவால் சட்ட வாரியம் நொடித்துப்போதல் மற்றும் திவால் வாரியம், சர்வதேச நாணய வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து 100-க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் தவிர, பெருநிறுவனங்களின் மறுசீரமைப்பு, திவால் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது, நிறுவனங்களை …
Read More »தவறான விளம்பரம் செய்த 45 பயிற்சி மையங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு-10-ன் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் உரிமைகளை மீறுதல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், பொதுமக்கள், நுகர்வோரின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துகிறது. 2024 நவம்பர், 13 அன்று, “பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள், 2024”-ஐ வெளியிட்டுள்ளது, இது பயிற்சி மையங்கள் பொருட்கள் அல்லது சேவையின் …
Read More »கூட்டுறவு மற்றும் கிராமிய பொருளாதாரம்
கூட்டுறவு அமைச்சகம், 2021 ஜூலை 6 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நாடு முழுவதும் உள்ள கூட்டுறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் அவற்றின் திறனை மேம்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிரூட்டவும், வலுப்படுத்தவும் பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தீவிர பங்கேற்புடன் கூட்டுறவு அமைச்சகம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கணினிமயமாக்கல் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை வலுப்படுத்துவதற்காக, மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.2,516 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களையும் ஒரு பொதுவான அமைப்பின் கீழ் நபார்டு வங்கியுடன் இணைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 67,930 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 40,727 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இஆர்பி மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்குதல்: நீண்டகாலக் கூட்டுறவுக் கடன் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,851 வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனமாக நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதுவரை, 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் இருந்து முன்மொழிவுகள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.
Read More »கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.
2021 ஜூலை 6-ம் தேதி முதல், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் & கூட்டுறவு சங்கங்கள் மற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இணையாக வரி தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஊக்குவிப்பதே கூட்டுறவு அமைச்சகத்தின் கடமையாகும். கூட்டுறவு சங்கங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு கோரி 25.11.2024 தேதியிட்ட குறிப்பாணை தமிழக கூட்டுறவு அமைச்சரிடமிருந்து பெறப்பட்டது. ஜிஎஸ்டி வரி தொடர்பான முன்மொழிவை ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்கிறது. அண்மையில் கருப்பஞ்சாற்றுக் கசண்டு மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இது கூட்டுறவு …
Read More »கூட்டுறவுத் துறையில் செயல் திறன் விருதுகள்
தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு அளித்துள்ள தகவலின்படி, தொழில்நுட்ப செயல்திறனை மேம்படுத்தவும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும் வகையிலும் தொழில்நுட்ப செயல்திறன் விருதுகள் அதன் வெள்ளி விழா ஆண்டில் (1985) அறிமுகம் செய்யப்பட்டது . செயல்திறன் விருதுகள் காரணமாக துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் பின்னூட்டங்கள் குறித்து தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. வெப்பமண்டல மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் ஆகியவற்றில் சராசரி கரும்பு மகசூல் 128-144 டன்/எக்டர் …
Read More »இந்திய விதைக் கூட்டுறவு சங்கத்தின் குறிக்கோள்கள்
பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டம், 2002-ன் கீழ், இந்திய விதைக் கூட்டுறவு சங்கத்தை கூட்டுறவு அமைச்சகம் அமைத்துள்ளது. இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு லிமிடெட் , கிரிஷக் பாரதி கூட்டுறவு லிமிடெட்), இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் இந்திய விதைக் கூட்டுறவு சங்கம் ஊக்குவிக்கப்படுகிறது. சங்கத்தின் ஆரம்ப கட்ட மூலதனம் …
Read More »சி-டாட் – சிசிலியம் சர்க்கியூட்ஸ் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம்
அதிநவீன அடுத்த தலைமுறைக்கான உள்நாட்டு தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையமும் ஐஐடி ஹைதராபாத் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் புத்தொழில் நிறுவனமான சிலிசியம் சர்க்யூட்ஸ் தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி “லியோ செயற்கைக்கோளுக்குத் தேவையான உதிரி பாகங்கள் வடிவமைப்பு, மேம்பாட்டு நடவடிக்கைகளை இந்த …
Read More »பருவநிலைகளைத் தாங்கி வளரும் திறன் கொண்ட நெல் ரகங்களை உருவாக்குதல்
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னோடித் திட்டமான ‘பருவநிலை மாற்ற தாங்குதிறன் வேளாண்மைக்கான தேசிய கண்டுபிடிப்பு’ மூலம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல் பயிரிடப்படும் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய தன்மையை ஒருங்கிணைந்த உருவகப்படுத்துதல் மாதிரியாக்க ஆய்வுகளை மேற்கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த ஆய்வானது பருவகாலங்களில் பயிரிடப்படும் மானாவாரி நெல் பயிர்களின் விளைச்சல் 2050-ம் ஆண்டில் 20% ஆகவும், 2080-ம் ஆண்டில் 47% ஆகவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பாசன நெல் சாகுபடி 2050-ம் ஆண்டில் 3.5% ஆகவும், 2080-ம் ஆண்டில் 5% ஆகவும் குறையக்கூடும். கடந்த 10 ஆண்டுகளில், மொத்தம் 668 நெல் வகைகள் (நெல்) உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் 199 வகைகள் தீவிர மற்றும் பிற வகை பருவநிலைகளைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களாகும். 103 நெல் வகைகள் வறட்சி, நீர் அழுத்தங்களை தாங்கி வளரக்கூடியவை, 50 நெல் வகைகள் வெள்ளம், ஆழமான நீர் நிலைகள், நீரில் மூழ்கும் தன்மையுடன் கூடியவை, 34 நெல் வகைகள் உப்புத்தன்மை காரத்தன்மை போன்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டவை. 6 நெல் இரகங்கள் வெப்ப அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. 6 நெல் இரகங்கள் குளிர் அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடியவை. இதில் 579 நெல் இரகங்கள் பூச்சி மற்றும் நோய்களைத் தாங்கி வளரக்கூடியவை. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு. பகீரத் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Read More »
Matribhumi Samachar Tamil