Tuesday, March 10 2026 | 09:24:00 PM
Breaking News

Matribhumi Samachar

அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது சிறப்பு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் மஹாபரி நிர்வாண் தினம் என்பதைக் குறிப்பிட்டார். பாபாசாஹேப் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது உட்பட கடந்த 2 ஆண்டுகளில் பல தேசிய, சர்வதேச நிகழ்வுகளுக்கு பாரத மண்டபம் சாட்சியாக திகழ்ந்துள்ளது …

Read More »

அஷ்டலட்சுமி மகா திருவிழா 2024

வடகிழக்கு இந்தியாவின் கலாச்சார வளமை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டாடுதல் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் என்பது பல நூற்றாண்டுகளின் மரபுகள், மாறுபட்ட மொழிகள், வளமான நாட்டுப்புறக் கதைகள்  போன்ற துடிப்புமிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. அனைத்து சமூகமும்,  அனைத்து மாநிலமும் தனக்கே உரிய தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ள பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் நவீன வளர்ச்சியின் அசாதாரண கலவையை தன்னகத்தே கொண்டுள்ள பிராந்தியமாக இது உள்ளது. அசாமின் பசுமையான தேயிலைத் தோட்டங்கள் முதல் மிசோரமின் மலைகள் வரை, மணிப்பூரின் …

Read More »

வடகிழக்கு பிராந்தியத்தில் கிராமிய வாழ்வாதாரத் திட்டம்

உலக வங்கி நிதியுதவியுடன் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் வடகிழக்கு ஊரக வாழ்வாதாரத் திட்டம் 30.09.2019 அன்று நிறைவடைந்தது. மிசோரம், நாகாலாந்து, சிக்கிம்,திரிபுரா ஆகிய 4 மாநிலங்களின் 11 மாவட்டங்களில் 58 வளர்ச்சி வட்டாரங்களின் கீழ் உள்ள 1,645 கிராமங்களில் வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்காக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பிரிவில் 10462 மாணவ மாணவியருக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 28,154 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 1,212 கிராம கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதன் மூலமும், 1599 சமூக வளர்ச்சிக் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் …

Read More »

வடக்கு அரபிக் கடலில் தத்தளித்த 12 மாலுமிகளை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்

இந்திய கடலோர காவல்படை 2024  டிசம்பர் 04 அதிகாலையில் வடக்கு அரேபிய கடலில் மூழ்கிய இந்திய கப்பல் எம்எஸ்வி அல் பிரன்பிரிலிருந்து 12 பணியாளர்களை மீட்டது. இந்த மனிதாபிமான தேடல் மற்றும் மீட்பு பணி இந்திய கடலோர காவல்படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பால் சாத்தியமானது. இரு நாடுகளின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையங்கள் தங்களின் நடவடிக்கை முழுவதும் தொடர்ச்சியான தகவல் தொடர்புகளை பராமரித்தன. ஈரானின் போர்பந்தரில் இருந்து புறப்பட்ட அல் …

Read More »

செம்மொழிகளைப் பாதுகாத்தலும் மேம்படுத்துதலும் தமிழுக்கு 2024-25- ல் ரூ.14 கோடி ஒதுக்கீடு

கீழ்க்கண்ட 11 மொழிகளை செம்மொழிகளாக அரசு அங்கீகரித்துள்ளது. தமிழ் 2004,  சமஸ்கிருதம் 2005, தெலுங்கு 2008, கன்னடம், மலையாளம் 2013, ஒடியா 2014, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி 2024. செம்மொழிகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும்  மத்திய அரசு கல்வி அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்குகிறது. ஆண்டு வாரியாக செம்மொழி தமிழுக்கு வழங்கப்பட்ட  நிதி (ரூ. லட்சத்தில்) 2020-21 – ரூ.1200.00, 2021-22 – ரூ. 1200.00, 2022-23 – ரூ. 1200.00,  …

Read More »

தேசிய பண்பாட்டு வரைபடமும் இலக்குத் திட்டமும்

இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும், கலாச்சார அமைச்சகம் கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது. இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால்  செயல்படுத்தப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான அதன் திறனையும் ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின்  ஒரு பகுதியாக, கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கம் ஜூன் 2023 (httpsmgmd.gov.in) -ல் மேரா காவ்ன் மேரி தரோஹர் …

Read More »

நினைவுச் சின்னங்களின் பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் பராமரித்தலும்

பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள்  மற்றும் எச்சங்கள்  சட்டம், 1958, பிரிவு 4 எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடத்தையும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க வழிவகை செய்கிறது. தொல்லியல், வரலாற்று அல்லது கட்டடக்கலை முக்கியத்துவத்தைப் பொறுத்து, எந்தவொரு பண்டைய நினைவுச்சின்னம் அல்லது தொல்பொருள் இடம்  மற்றும் எச்சங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று அரசு அறிவிக்க இந்தச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. இந்திய அரசிதழில் பொதுமக்களிடமிருந்து ஆட்சேபனைகளை வரவேற்கும் இரண்டு மாத அறிவிப்பு …

Read More »

‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ தலைப்பிலான அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டி

கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (இன்டாக்) 7 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ‘இந்தியாவைக் கொண்டாடுதல்’ என்ற தலைப்பில் அகில இந்திய சுவரொட்டி தயாரிக்கும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கான பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை  நடத்தும் இன்டாக் நிறுவனத்தின் பாரம்பரிய கல்வி மற்றும் தொடர்பு பிரிவு இதனை நடத்தி வருகிறது. 100 இன்டாக் பிரிவுகள் அந்தந்த நகரங்கள் / பிராந்தியத்தில் இந்த போட்டியை நடத்துகின்றன, இது மார்ச் 2025-ல் முடிவடையும். இப்போட்டி புதுதில்லியில் 71, இன்டாக், லோடி எஸ்டேட்டில் 2024  …

Read More »

நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்களின் தாங்குதிறனை வலுப்படுத்த சர்வதேச ஆலோசனை அமைப்பு

நீர்மூழ்கி தொலைத்தொடர்பு கேபிள்கள் உலகளாவிய தகவல்தொடர்புகளின் முதுகெலும்பாகும். இது சுமார் 99% இணைய போக்குவரத்தைக் கொண்டுள்ளது. வர்த்தகம், நிதி, அரசு நடவடிக்கைகள், டிஜிட்டல் சுகாதாரம், கல்வி போன்ற முக்கியமான சேவைகளை வலுப்படுத்த இது உதவுகிறது. இந்த கேபிள்கள் சேதமடையக் கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 150 முதல் 200 வரை பிழைகள் நிகழ்கின்றன. மீன்பிடித்தல், நங்கூரமிடுதல், இயற்கை அபாயங்கள், உபகரணங்கள் செயலிழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் கேபிள்களுக்கு சேதம் ஏற்படுகிறது. வளர்ந்து …

Read More »

மாஸ்கோவில் நடைபெற்ற விடிபி ரஷ்ய அழைப்பின் முதலீட்டு மன்றத்தில் பிரதமர் மோடியின் ” முதலில் இந்தியா” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்” முன்முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் “இந்தியா முதலில்” கொள்கை மற்றும் “இந்தியாவில் தயாரிப்போம்”  முன்முயற்சி ஆகியவற்றை அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார். உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட “இந்தியாவில் தயாரிப்போம்” …

Read More »