இந்தியாவின் மகத்தான ஆன்மிக மற்றும் அறநெறித் தலைவர்களான ஸ்ரீ நாராயண குரு – மகாத்மா காந்தி ஆகிய இருவருக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல் குறித்து புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் அனைவருக்கும் தமது மரியாதை கலந்த வாழ்த்துகளை தெரிவித்ததோடு இன்று இந்த அரங்கம் முன்னெப்போதும் இல்லாத தேசத்தின் வரலாற்றுத் தருணத்தைக் காண்கிறது என்றார். நமது சுதந்திரப் …
Read More »தீவிரவாத எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான அவசரகாலக் கொள்முதல் ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் இறுதி செய்துள்ளது
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையாக, அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் பதின்மூன்று ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமான ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள், இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும். தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் …
Read More »உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தலைமை தாங்கினார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் திரு. விஷ்ணு தியோ சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். உறுப்பு மாநிலங்களின் மூத்த அமைச்சர்கள், மத்திய உள்துறை …
Read More »கிழக்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு மத்திய அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெறுகிறது
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடனான மண்டல மின்சார மாநாடு இன்று (ஜூன் 24-ம் தேதி) பாட்னாவில் மத்திய மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக், ஒடிசா மாநில துணை முதலமைச்சர் திரு கனக் வர்தன் சிங் …
Read More »இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நம் நாட்டின் வரலாற்றில், கணக்காளர்கள் சமூகத்தில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். கணக்கியல் மற்றும் பொறுப்புகள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும். இந்த துறையின் உயர் பொறுப்புணர்வு காரணமாக, அது சிறப்பான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. நவீன காலத்தில், …
Read More »‘ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர்’ — டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் அழைப்பை நினைவு கூர்தல்: அவரது தியாக தினத்தன்று குடியரசு துணைத் தலைவர் புகழாரம்
குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி “நினைவு தினம்) அவருக்கு மரியாதை செலுத்தினார், “நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு மகத்தான நாள். நமது மண்ணின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான, டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினம் இன்று. அவர் ஒரு முழக்கத்தை வழங்கினார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஒரே அரசியல் சாசனம், …
Read More »தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாக கொண்ட ஆளுகை மூலம் நிதி மேற்பார்வை செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா
தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மூலம், நிதிசார் கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச் செலவினங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், நிதிசார் ஒழுங்குமுறை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும், நிதிசார் கண்காணிப்பு வழிமுறைகள் பயனுள்ள வகையில் …
Read More »உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குகிறார்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, நாளை (ஜூன் 24, 2025 செவ்வாய்க்கிழமை) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25-வது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்தக் …
Read More »இந்தியா வந்துள்ள சிலியின் கோடெல்கோ குழுவை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் வரவேற்றது
சிலியின் அரசுக்குச் சொந்தமான தாமிரச் சுரங்க நிறுவனமான கோடெல்கோ-வின் (கார்ப்பரேசியன் நேஷனல் டெல் கோப்ரே) பிரதிநிதிகளை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் இன்று அதிகாலை புதுதில்லியில் வரவேற்றது. சிலி காப்பர் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துஸ்தான் காப்பர் நிறுவன அலகுகள் மற்றும் அலுவலகங்களுக்குச் சென்று பல்வேறு சுரங்க மற்றும் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பிடுவார்கள். இது போன்ற மதிப்பீடு இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை ஆகும். …
Read More »ஈரான் அதிபர் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (22.06.2025) ஈரான் அதிபர் திரு மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமரிடம் ஈரான் அதிபர் பெஷஷ்கியான் விரிவாக விளக்கிக் கூறினார். இது தொடர்பாக அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய பதற்றங்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா அமைதி மற்றும் …
Read More »
Matribhumi Samachar Tamil