Saturday, February 07 2026 | 04:48:20 AM
Breaking News

Matribhumi Samachar

மத்தியப் பிரதேசத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பான சுற்றுலாத் தலத் திட்டத்தை மத்திய இணை அமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் ஆய்வு செய்தார்

சுற்றுலாவில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய பொது மக்கள் ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனத்தின் (என்ஐபிசிசிடி) இந்தூர் வளாகத்தில் ஒரு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்தியப் பிரதேச சுற்றுலாத் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி …

Read More »

தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு சுங்கச் சாவடி செலவைக் குறைக்கும் சிறப்புத் திட்டம் : டாக்டர் எல் முருகன்

மக்கள் பயனடையும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின்  சாதனைப் பட்டியலில் மற்றுமொரு மைல்கல் திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் திரு எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் ‘ஃபாஸ்டேக்’ கட்டணமாக ஆண்டுக்கு ரூ.3000-க்கு பாஸ் வழங்கும் சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய சாலைப் போக்குவரத்து துறை …

Read More »

மானேசரில் இந்தியாவின் மிகப் பெரிய பன்னோக்கு சரக்கு முனையம் திறப்பு

ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று (17.06.2025) ஹரியானாவின் மானேசரில் உள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய வாகன பன்னோக்கு  சரக்குப் போக்குவரத்து முனையத்தை திறந்து வைத்தார். மானேசரில் உள்ள மாருதி சுசுகியின் ஆலையில் உள்ள இந்த முனையம், வாகனப் போக்குவரத்தில் சரக்குப் போக்குவரத்துத் திறனை கணிசமாக மேம்படுத்தும். இந்த முனையம் மானேசரிலிருந்து 10 …

Read More »

50 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை உதவித்திட்டம்

தொழிலாளர் நல இயக்குநரகம் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின், குறிப்பாக பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் துறை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நேரடி தாக்கத்தை இத்திட்டங்கள் ஏற்படுத்துகின்றன. தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, சுகாதார சேவைகள், கல்விக்கான நிதி உதவி மற்றும் வீட்டுவசதி ஆதரவை வழங்குவதே இதன் முக்கிய இலக்காகும். இந்த நல்வாழ்வு திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று …

Read More »

வீட்டுக் கழிவு சேகரிப்பில் மின்சார வாகனங்கள் மூலம் நகர்ப்புறங்களில் 24,959 டன் கார்பன் வெளியேற்றம் குறைப்பு

தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக நகர்ப்புறங்களில் வீட்டுக்கழிவு சேகரிப்பில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கார்பன் உமிழ்வு, காற்று மற்றும் ஒலி மாசுபாடைக் குறைத்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எதிர்காலத்திற்கு வழி வகுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூரில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட மின்சார ஆட்டோக்கள் …

Read More »

உலகளாவிய நல்வாழ்வு நடவடிக்கைகளில் யோகாவை முன்னிலைப்படுத்துகிறது இந்தியா: ஆயுஷ் துறைச் செயலாளர்

சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் 2025 ஜூன் 17, அன்று உலகளாவிய திட்டமான யோகா பந்தனின் தொடக்க நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. சர்வதேச யோகா தினம் 2025-ன் கீழ் 10 குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த முயற்சி, யோகா துறையில் நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. ‘யோகா பந்தன்’ உலகெங்கிலும் உள்ள உலகளாவிய யோகா தூதர்களை ஒன்றிணைத்து, கலாச்சார பரிமாற்றம், கல்வி உரையாடல் மற்றும் யோகா மூலம் …

Read More »

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் உரை

சனாதனப் பெருமை வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (17.06.2025) மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், இந்தியாவின் கல்வி வரலாற்றில் தக்ஷஷிலா, நாளந்தா, மிதிலா, வல்லபி என பல சிறந்த கற்றல் மையங்கள் இருந்ததாகக் கூறினார். இந்த நிறுவனங்கள், நமது பாரதத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாக அவர் கூறினார். நாளந்தாவில் 1300 …

Read More »

தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர்

“ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்ற வடிவங்களில் நமக்கு அதிக மனித வளங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. நமக்கு அதிக நோயறிதல் மையங்கள், மருந்துகளுக்கான விற்பனை நிலையங்கள், அதிக ஆராய்ச்சி தேவை. பொது மற்றும் தனியார் துறைகளில் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உருவாக வேண்டும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி ஜிப்மரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் போது, ​​ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாட்டின் ஆரோக்கியம், வளர்ச்சிக்கு …

Read More »

லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மறுஆய்வுக் கூட்டத்திற்கு டாக்டர் மிஸ்ரா தலைமை தாங்கினார்

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, குஜராத்தில் உள்ள தோலேரா மற்றும் லோதலில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்தத் திட்டங்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும், கட்டுமானத்தில் உள்ள அகமதாபாத்-தோலேரா பசுமைவழி விரைவுச் சாலையை டாக்டர் மிஸ்ரா பார்வையிட்டார். அகமதாபாத் – தோலேரா இடையேயான …

Read More »

சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர்  திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு …

Read More »