புதுதில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது: “புதுதில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். …
Read More »பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், பாரத் டெக்ஸ் 2025-க்கு அனைவரையும் வரவேற்றார், இன்று பாரத் டெக்ஸின் 2-வது பதிப்பை பாரத் மண்டபம் காண்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி நமது பாரம்பரியம், வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வாய்ப்புகள் குறித்த ஒரு பார்வையை அளிக்கிறது …
Read More »புதிய வடிவில் நடைபெற்ற காவலர் மாற்ற விழாவை குடியரசுத்தலைவர் பார்வையிட்டார்
குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இன்று (பிப்ரவரி 16, 2025) காலை புதிய வடிவத்தில் நடைபெற்ற காவலர் மாற்ற விழாவின் தொடக்க நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டார். அடுத்த சனிக்கிழமை முதல் அதாவது பிப்ரவரி 22, 2025 முதல் இந்த விழாவை பார்வையாளர்கள் காண அனுமதிக்கப்படுவார்கள், அப்போது, குடியரசுத்தலைவர் மாளிகையின் பின்னணியில் ஒரு இயக்க ஆற்றல் மிகுந்த காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை பொது மக்கள் காணலாம். குடியரசுத்தலைவரின் …
Read More »தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 16, 2025) புதுதில்லியில் தேசிய பழங்குடியினர் திருவிழாவான ‘ஆதி மஹோத்சவ’ விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், பழங்குடியின பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்த ஆதி மகோத்சவம் ஒரு முக்கிய நிகழ்வு என்று கூறினார். இதுபோன்ற விழாக்கள் பழங்குடி சமூகத்தின் தொழில்முனைவோர், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு சந்தையுடன் இணைவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பழங்குடியின சமுதாயத்தின் கைவினைப் …
Read More »மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் 3-வது காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடங்கி வைத்தனர்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் காசித் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாவது பதிப்பை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கி வைத்தனர். 3-வது காசி தமிழ்ச் சங்கம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவுக்கு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு …
Read More »குஜராத் மற்றும் ராஜஸ்தானின் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆய்வு
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மெகா உள்கட்டமைப்பு திட்டங்களை பாதிக்கும் முக்கிய பிரச்சினைகளை மறுஆய்வு செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்திற்கு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு அமர்தீப் பாட்டியா தலைமை தாங்கினார். மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் திட்ட ஆதரவாளர்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், திட்டக் கண்காணிப்புக் குழு, மேம்பட்ட அமைச்சகங்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு மூலம் பிரச்சினை தீர்வை …
Read More »நிலக்கரி வயல் பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்த ரூ 170 கோடி மதிப்புள்ள சிஎஸ்ஆர் திட்டங்களுக்கு ஒப்புதல்
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல் இந்தியாவின் சத்தீஸ்கரை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் , 24-25 நிதியாண்டில் பல்வேறு பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கு ரூ 170 கோடியை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சிகள் நிலக்கரி வயல் பகுதிகளில் சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு உள்கட்டமைப்பை கணிசமாக அதிகரிக்கும். இந்த ஒதுக்கீடு 24-25 நிதியாண்டிற்கான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் …
Read More »பிப்ரவரி 16 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பிரதமர் பங்கேற்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 16 ஆம் தேதி மாலை சுமார் 4 மணிக்கு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025-ல் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் அவர் உரையாற்றுகிறார். பிப்ரவரி 14 முதல் 17 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஒரு மெகா உலகளாவிய நிகழ்வான பாரத் டெக்ஸ் 2025 தனித்துவமானது. ஏனெனில் இது மூலப்பொருட்கள் முதல் முடிக்கப்பட்ட பொருட்கள் வரை முழு ஜவுளி …
Read More »போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருகின்றன – இந்தப் பணிகள் மேலும் வீரியத்துடன் தொடரும்: பிரதமர்
கோக்ராஜரில் 2025 பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். போடோ சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும், போடோ மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மத்தியிலும் அசாமிலும் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் அயராது உழைத்து வருவதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்தப் பணிகள் இன்னும் வீரியத்துடன் தொடரும் இன்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். கோக்ரஜாரில் …
Read More »புதிய காஷ்மீரில் ரூ. 65,000 கோடி முதலீட்டு திட்டங்கள் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
ஜம்மு காஷ்மீரில் 2024 மக்களவைத் தேர்தலில் 35 ஆண்டுகளில் இல்லாத அதிக வாக்குப்பதிவு நடந்துள்ளதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் வலுவடைந்துள்ளது குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். இப்பகுதி இனி மோதலின் இடமாக இல்லாமல் நம்பிக்கையின் இடமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் …
Read More »
Matribhumi Samachar Tamil