மத்திய அரசின் புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் 2025 ஜனவரி முதல் பின்வரும் ஆய்வுகள், கணக்கெடுப்புகளை நடத்துவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது:- *என்எஸ்எஸ் 80 வது சுற்று: சமூக நுகர்வு- சுகாதாரம் ஆய்வு (ஜனவரி முதல் டிசம்பர் 2025 வரை) *விரிவான தொலைத்தொடர்பு திறன் ஆய்வு(ஜனவரி முதல் மார்ச் 2025 வரை) *கல்வி (ஏப்ரல் முதல் ஜூன் 2025 வரை); *குறிப்பிட்ட கால …
Read More »டிஎன்டி சமூகங்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த கூட்டம் – மத்திய அமைச்சர் திரு வீரேந்திர குமார் தலைமை வகித்தார்
சீர்மரபு பிரிவினர், நாடோடி சமூகங்கள், பகுதி நாடோடி சமூகங்களின் (DNT – டிஎன்டி) நலன், மேம்பாடு குறித்து கவனம் செலுத்தும் முக்கிய கூட்டம் மத்திய சமூக நீதி – அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தலைமையில் புதுதில்லியில் இன்று (02.01.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே, சமூக நீதி – அதிகாரமளித்தல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். டிஎன்டி …
Read More »மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் பார்கின்சன் நோய்க்கு சிகிச்சைத் தீர்வாக அமையக் கூடும்
இருளுக்கான எதிர்வினையாக மூளை உற்பத்தி செய்யும் இருண்ட ஹார்மோன் என்று அழைக்கப்படும் மெலடோனின் ஹார்மோனின் நானோ-உருவாக்கம் மேம்பட்ட ஆக்ஸிஜனேற்ற, நரம்பு பாதுகாப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பார்கின்சன் நோய்க்கு (பிடி) சாத்தியமான சிகிச்சை தீர்வாக இருக்கலாம் என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். பார்கின்சன் நோய் (பிடி) என்பது மூளையில் டோபமைன் சுரக்கும் நியூரான்கள் இறப்பதால் ஏற்படும் பொதுவான நரம்பியல் கோளாறுகளில் ஒன்றாகும். மெலடோனின் ஹார்மோன் பார்கின்சன் நோய்க்கான எதிர் …
Read More »29 பிரிவுகளில் 9,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு இந்திய ரயில்வே ஆதரவளிக்கிறது
ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், 1928-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விளையாட்டை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. ஹாக்கி, தடகளம், டென்னிஸ் ஆகியவற்றை ஊக்குவிப்பதிலும் தற்போது நாட்டில் ஒட்டுமொத்தமாக விளையாட்டை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான நிறுவனமாக ரெயில்வே மாறியுள்ளது. தற்போது 29 விளையாட்டு பிரிவுகள் ரெயில்வேயில் உள்ளன. 18 தனிநபர் விளையாட்டுகள் மற்றும் 11 குழு விளையாட்டுகள் இவற்றில் அடங்கியுள்ளன. ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் 28 தேசிய …
Read More »ஒய்எஸ்ஆர் கடப்பாவில் ஆஸ்பைரேஷனல் மாவட்ட திட்டத்தின்கீழ் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தனது பயணத்தின் போது ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் வளர்ச்சி முன்னெடுப்புப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். 2018-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய முன்முயற்சியின் கீழ் ஒய்எஸ்ஆர் கடப்பா ஒரு …
Read More »மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ், தனது மூன்று நாள் பயணத்தின் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று ஒய்.எஸ்.ஆர் கடப்பாவில் முற்பகல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள் முன்னேற விரும்பும் மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கான உத்திகளை வழிநடத்துவதற்கும் அந்தந்த மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கேற்ப இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.2018-ல் தொடங்கப்பட்ட முன்னேற …
Read More »ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தத் திசையில்,மின்சார வாகனங்களுக்கான தேவை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் ஃபேம் இந்தியா (FAME India) திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக 2015 ஏப்ரல் 1 முதல் தொடங்கி 2 ஆண்டு காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் …
Read More »பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் இந்தியா தனது நான்காவது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பித்தது
பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில்(UNFCCC) இந்தியா தனது 4வது ஈராண்டு புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை 30 டிசம்பர் 2024 அன்று சமர்ப்பித்தது. இந்த 4 ஆவது அறிக்கையில் மூன்றாவது தேசிய தொடர்பியல் புதுப்பிக்கப்பட்டதுடன் 2020 -ம் ஆண்டிற்கான தேசிய பசுமைக்குடில் வாயு இலக்குகளில் அண்மைத் தகவல்கள் சேர்க்கப்பட்டும் உள்ளன. இந்தியாவின் தேசிய சூழ்நிலைகள், தணிவிப்பு நடவடிக்கைகள், தடைகள், இடைவெளிகள், தொடர்புடைய நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் வளர்ப்புக்கான தேவைகள் பற்றிய தகவல்களையும் இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சர் திரு பூபேந்தர் …
Read More »பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 67-வது நிறுவன தினத்தையொட்டி மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளை பாதுகாப்பு அமைச்சர் சந்தித்தார்
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (2025 ஜனவரி 02 ) புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமையகத்திற்குச் சென்று, 67-வது நிறுவன தினத்தைக் குறிக்கும் வகையில் அங்கிருந்த மூத்த விஞ்ஞானிகள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்தும் கலந்து கொண்டார். அப்போது பேசிய திரு ராஜ்நாத் சிங், ஆயுதப்படைகளை அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களுடன் ஆயத்தப்படுத்துவதன் மூலம் …
Read More »சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025
ஆன்மீக உற்சாகத்திற்கு இடையே,மகா கும்ப நகரில் உள்ள மத்திய மருத்துவமனை நம்பிக்கை மற்றும் உயிர்ச்சக்தியின் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது. மகா கும்பமேளா திருவிழா தொடங்குவதற்கு சற்று முன்பு ‘கங்கா’ என்று பெயரிடப்பட்ட பெண் குழந்தை பிறப்பது, புனித நதிகளின் தூய்மை மற்றும் சாரத்தை நினைவூட்டுவதாக உள்ளது.. ‘கும்பமேளா’ என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தது. , இந்தப் பிறப்புகள் வாழ்க்கை வட்டத்தையும் மகா கும்பமேளா பண்டிகையின் ஆசீர்வாதங்களையும் வெளிப்படுத்தும் அம்சங்களாக உள்ளன.. மகா கும்பமேளா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே …
Read More »
Matribhumi Samachar Tamil