Monday, December 22 2025 | 02:27:39 AM
Breaking News

Business

வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவை எடுத்துரைக்கும் வகையிலான கட்டுரை ஒன்றை பிரதமர் பகிர்ந்துள்ளார்

வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதாவின் நோக்கங்களை விரிவாக எடுத்துரைக்கும் வகையில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் எழுதிய ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மேம்பாட்டிற்கான திட்டமிடல் பணிகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல், நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்வாதார வசதிகளில் மாற்றங்கள் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை அந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு அளிப்பதிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அந்தக் கட்டுரை விளக்குகிறது. சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய அமைச்சர் எழுதிய கட்டுரைக்கு பதிலளித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது; “அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய இந்தக் கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு @ChouhanShivraj, வளர்ச்சியடைந்த இந்தியா ஜி ராம் ஜி மசோதா, வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மேம்படுத்துதல், உள்ளூர் திட்டமிடல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், தொழிலாளர் பாதுகாப்பு, பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவற்றை  சமநிலைப்படுத்துதல், திட்டங்களை ஒருங்கிணைத்தல், களப்பணியாளர்களின் திறனை வலுப்படுத்துதல் மற்றும் நிர்வாக நடைமுறைகளை நவீனமயமாக்குதல் போன்றவை மூலம் ஊரகப் பகுதிகளில், வாழ்வாதார வசதிகளில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்துவது என்பதை  நோக்கமாகக் கொண்டுள்ளது குறித்து விரிவாக விளக்கியுள்ளார். இந்த மசோதா சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதற்கு மாறாக, அதனைப் புதுப்பித்து மேம்படுத்துகிறது என்பதையும் அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.”

Read More »

பிரதமரின் ஓமன் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்

1) விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் – நெருங்கிய பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல். – வர்த்தகத் தடைகளைக் குறைத்து, ஒரு நிலையான கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரித்தல். – பொருளாதாரத்தின் அனைத்து முக்கியத் துறைகளிலும் வாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடுகளை அதிகரித்தல். 2) கடல்சார் பாரம்பரியம் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் – லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் …

Read More »

நாட்டின் எரிசக்தித் துறை வளர்ச்சியடைந்துள்ளது – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

துணிச்சல் மிக்க தொலைநோக்குப் பார்வை, நேர்மையான நோக்கம், அயராத செயல்பாடு, நாட்டின் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது இந்திய எரிசக்தித் துறையின் கடந்த 11 ஆண்டுகால பயணத்தின் ஆதாரமாக திகழ்கிறது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் இரும்பு மனிதர் என்று சர்தார் படேல்-ஐ நினைவில் …

Read More »

இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்

2014-ம் ஆண்டு முதல், இந்தியாவில் தொழில் புரிவதை எளிமையாக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் நம்பிக்கை சட்டம், 2023 மூலம் 42 மத்தியச் சட்டங்களில் உள்ள 183 விதிகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன . அத்துடன், 47,000 இணக்க விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனங்களைப் பதிவு செய்வதை விரைவுபடுத்த மத்தியப் பதிவு மையம்  நிறுவப்பட்டது. மேலும், ஸ்பைஸ்+ போன்ற ஒரே ஒருங்கிணைந்த படிவங்கள் மூலம் பான், ஜிஎஸ்டி மற்றும் வங்கிக் கணக்கு …

Read More »

‘ஸ்பார்ஷ்’ டிஜிட்டல் தளத்தில் 31.69 லட்சம் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்கள் இணைப்பு

பாதுகாப்புத் துறை ஓய்வூதிய நிர்வாகத்திற்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமான ‘ஸ்பார்ஷ்’ , நவம்பர் 2025 நிலவரப்படி 31.69 லட்சம் ஓய்வூதியதாரர்களை இணைத்துள்ளது. இது 45,000-க்கும் மேற்பட்ட முகவர் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட பழைய அமைப்பை மாற்றி, ஒரு ஒருங்கிணைந்த, வெளிப்படையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. சாதனைகள்: பழைய அமைப்பிலிருந்து மாற்றப்பட்ட 6.43 லட்சம் முரண்பாடு வழக்குகளில், 94.3% (6.07 லட்சம்) தீர்க்கப்பட்டுள்ளன. குறைகள் தீர்வு: ஆன்லைன் மூலம் குறைகளைக் களைய முடியும் …

Read More »

போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது – வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம்

வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளத. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாக போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான உரிமைகோரல்களை முன்கூட்டியே கண்டறிந்து, …

Read More »

சிறு நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீடித்த வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வித்திடும்: தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் அறிக்கை

இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முக்கிய உந்து சக்தியாக சிறு நிறுவனங்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுமத்தின் ஆய்வறிக்கையை அதன் துணைத்தலைவர் திரு மனீஷ் அகர்வால், இம்மாதம் 11-ம் தேதி வெளியிட்டார். தொழிலாளர்களின் திறமையையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்வதன் மூலம் தொழில் நிறுவனங்களில் உள்ள தடைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கை …

Read More »

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த அளவிற்கு சணல் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. 2024-25 – ம் ஆண்டு உணவுதானிய பருவத்திற்கு 100%  உணவு தானியங்களுக்கு சணல் பொருட்கள் மூலம் சிப்பம் கட்டவும், சணல் பைகளில் 20% சர்க்கரையை சிப்பமாக கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிப்பம் கட்டுவதற்கான …

Read More »

பால் உற்பத்தியாளர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு

கால்நடை மற்றும் பால்வளத் துறை, பால் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பிற்கான  உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகிய இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு  வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுவதற்கான உள்கட்டமைப்பு  வசதிகளை உருவாக்குதல், வலுப்படுத்துதல், தரமான பால் தரம் குறித்த பரிசோதனைகளுக்கான உபகரணங்களை நிறுவுதல், பெரிய அளவிலான …

Read More »

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிடுகிறது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக எழும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், தேவை ஏற்படும் நிலையில், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் தன்மையை மதிப்பிடுவதற்கும், ஏப்ரல் 28, 2025 அன்று தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அமைத்த எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பரிந்துரைகளை இந்த …

Read More »