Tuesday, May 26 2026 | 07:52:18 AM
Breaking News

Business

‘ஸ்பார்ஷ்’ டிஜிட்டல் தளத்தில் 31.69 லட்சம் பாதுகாப்புத் துறை ஓய்வூதியதாரர்கள் இணைப்பு

பாதுகாப்புத் துறை ஓய்வூதிய நிர்வாகத்திற்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தளமான ‘ஸ்பார்ஷ்’ , நவம்பர் 2025 நிலவரப்படி 31.69 லட்சம் ஓய்வூதியதாரர்களை இணைத்துள்ளது. இது 45,000-க்கும் மேற்பட்ட முகவர் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட பழைய அமைப்பை மாற்றி, ஒரு ஒருங்கிணைந்த, வெளிப்படையான டிஜிட்டல் அமைப்பை உருவாக்கியுள்ளது. சாதனைகள்: பழைய அமைப்பிலிருந்து மாற்றப்பட்ட 6.43 லட்சம் முரண்பாடு வழக்குகளில், 94.3% (6.07 லட்சம்) தீர்க்கப்பட்டுள்ளன. குறைகள் தீர்வு: ஆன்லைன் மூலம் குறைகளைக் களைய முடியும் …

Read More »

போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது – வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம்

வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளத. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததாக போலியான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான உரிமைகோரல்களை முன்கூட்டியே கண்டறிந்து, …

Read More »

சிறு நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீடித்த வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வித்திடும்: தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் அறிக்கை

இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முக்கிய உந்து சக்தியாக சிறு நிறுவனங்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் பங்களிப்பு அவசியம் என்று தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுமத்தின் ஆய்வறிக்கையை அதன் துணைத்தலைவர் திரு மனீஷ் அகர்வால், இம்மாதம் 11-ம் தேதி வெளியிட்டார். தொழிலாளர்களின் திறமையையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்வதன் மூலம் தொழில் நிறுவனங்களில் உள்ள தடைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று அந்த ஆய்வறிக்கை …

Read More »

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த அளவிற்கு சணல் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. 2024-25 – ம் ஆண்டு உணவுதானிய பருவத்திற்கு 100%  உணவு தானியங்களுக்கு சணல் பொருட்கள் மூலம் சிப்பம் கட்டவும், சணல் பைகளில் 20% சர்க்கரையை சிப்பமாக கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிப்பம் கட்டுவதற்கான …

Read More »

பால் உற்பத்தியாளர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு

கால்நடை மற்றும் பால்வளத் துறை, பால் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதில் மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு உதவிடும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கால்நடை பராமரிப்பிற்கான  உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகிய இரண்டு முக்கிய உள்கட்டமைப்பு  வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுவதற்கான உள்கட்டமைப்பு  வசதிகளை உருவாக்குதல், வலுப்படுத்துதல், தரமான பால் தரம் குறித்த பரிசோதனைகளுக்கான உபகரணங்களை நிறுவுதல், பெரிய அளவிலான …

Read More »

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிடுகிறது

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக எழும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், தேவை ஏற்படும் நிலையில், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் தன்மையை மதிப்பிடுவதற்கும், ஏப்ரல் 28, 2025 அன்று தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அமைத்த எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பரிந்துரைகளை இந்த …

Read More »

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகள் குறித்த மறுஆய்வு தொடர்பான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை தெரிவிப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது

தொலைத்தொடர்புத்துறையில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறை விதிகள் குறித்த இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மறுஆய்வு தகவல்கள் அடங்கிய ஆவணத்தை கடந்த மாதம் (நவம்பர் 2025) 10-ம் தேதி ட்ராய் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளை  இம்மாதம் (டிசம்பர் 2025) 8-ம் தேதிக்குள்ளும் அது தொடர்பான விமர்சனங்களை இம்மாதம் (டிசம்பர் 2025) 22-ம் தேதிக்குள்ளும் எழுத்து மூலம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொழில்துறை சங்கங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தப்பட்ட …

Read More »

நிதியுதவியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல்தான் அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக புத்தொழில் நிறுவனங்கள் திகழும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பஞ்ச்குலாவில் இன்று (07.12.2025) இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் தொழில்முனைவோர், மாணவர்கள் ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர், நிதியுதவி மட்டும் அல்லாமல், அத்துடன் சிறந்த வழிகாட்டுதலே அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களைச் சிறப்பாக வடிவமைக்கும் என்று கூறினார். நாட்டில் அறிவியல் கல்விக்கான வாய்ப்புகள் பெருகி இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், சிறிய நகரங்களில் சாதாரண பின்னணிகளைச் சேர்ந்தவர்களும் சிறந்த தொழில்முனைவோராகும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  வெறும் கொள்கை உருவாக்கம் என்ற நிலையோடு அல்லாமல், புதிய முயற்சிகளை சந்தைகளுடன் இணைக்கும் சூழலை அரசு உருவாக்குகிறது என்றும் அவர் தெரிவித்தார். நமது புத்தொழில் நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிட வேண்டுமானால், ஆராய்ச்சியிலும் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தி, துணிச்சலாக புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அறிவியல் முன்னேற்றங்கள் இந்தியாவில் மக்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை அமைச்சர் எடுத்துரைத்தார். இந்திய சர்வதேச அறிவியல் விழா போன்ற நிகழ்வுகள், கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஆகியோரை ஒரு பொதுவான தளத்தில் இணைப்பதாக திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

Read More »

ரத்தான விமானங்களின் கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற ஏற்பாடு – இண்டிகோ நிறுவன நெருக்கடியைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை

விமானம் ரத்து காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பயணச்சீட்டு கட்டணத்தையும் தாமதமின்றி திருப்பி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட அல்லது தடை ஏற்பட்ட அனைத்து விமானங்களுக்கான கட்டணத் தொகையை பயணிகளுக்கு திருப்பி வழங்கும் நடைமுறையை நாளை (டிசம்பர் 7, 2025) இரவு 8:00 மணிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்றும் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  கட்டணத்தை திருப்பி வழங்கும் நடைமுறையில் ஏதேனும் தாமதம் அல்லது …

Read More »

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார அடித்தளம் வலுவாக உள்ளது: பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் உள்ள போதிலும் இந்தியாவின் பொருளாதார நிலை வலுவாக உள்ளது என பிரதமருக்கான முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தெரிவித்துள்ளார். தன்பாதில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (சுரங்கம்) நடைபெற்ற நூற்றாண்டு நிறுவன வார விழாவை இன்று தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்டுவதில் ஐஐடி தன்பாத் முக்கியப் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 100 …

Read More »