Saturday, August 01 2026 | 09:08:27 AM
Breaking News

Business

பிஎஸ்என்எல், ஏஐஎம்ஓ இணைந்து ஸ்மார்ட்ஃபோன் சேவையில் முதல் திறன் பயிற்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, அனைத்து இந்திய உற்பத்தியாளர்களின் அமைப்புடன்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இளைஞர்களை சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வலுவூட்டுவதற்கும், தொலைத்தொடர்பு தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகள் துறையில் தொழில் முனைவு மற்றும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சுமார் 20 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் சேவை பயிற்சி குறித்த 3 நாள் பயிற்சித் திட்டத்தின் தொடக்க விழாவை பிஎஸ்என்எல் …

Read More »

உலகளாவிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது

2023-ம் ஆண்டில், உலகின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியா 6 வது பெரிய நாடாக உள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடையின் பங்கு 2023-24 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 8.21% ஆக உள்ளது. உலக ஜவுளி மற்றும் ஆடை வர்த்தகத்தில் நமது நாட்டின் பங்கு 3.9 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் முக்கிய ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி இலக்கு நாடுகளாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. மொத்த ஜவுளி மற்றும் …

Read More »

எஃகு உற்பத்தியில் தரத்தை உறுதி செய்ய தரக்கட்டுப்பாடு ஆணை

நாட்டில் எஃகு உற்பத்தியின் தரத்தை உறுதி செய்ய மத்திய அரசு அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் நுகரப்படும் எஃகுக்கான தர நிலைகளை உருவாக்கவும், அவற்றை தரக் கட்டுப்பாட்டு உத்தரவில் (QCO) சேர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தரப்படுத்தல் என்பது எஃகு உற்பத்திக்கான சீரான நடைமுறைகள், சோதனை முறைகள், உற்பத்தி செயல்முறைகள் ஆகியவற்றை நிறுவுவதை உள்ளடக்கியதாகும். இது வெவ்வேறு உற்பத்தியாளர்களிடையே எஃகின் தரத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. அதற்கு எஃகு …

Read More »

இந்திய பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல்

2023 அக்டோபர் மாதம் முதல் 2024 செப்டம்பர் வரையிலான குறிப்பு காலத்தை உள்ளடக்கிய சட்டப்படி இணைக்கப்பெறாத தொழில் நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு முடிவுகளை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த விரிவான கணக்கெடுப்பு  வேளாண்மை சாராத இணைப்புக்கு உட்படாத தொழில் துறையின் பொருளாதார மற்றும் செயல்பாட்டு நடவடிக்கையை எடுத்துக் காட்டுகிறது. வேலைவாய்ப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார நிலப்பரப்பு ஆகியவற்றில் அதன் முக்கியமான பங்களிப்பை …

Read More »

ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 16.15 லட்சம் மின்சார வாகனங்களுக்கு ஊக்கத்தொகை

சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்து வசதிகளை குறைந்த செலவில் வழங்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தத் திசையில்,மின்சார வாகனங்களுக்கான தேவை அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் ஃபேம் இந்தியா (FAME India)  திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக  2015 ஏப்ரல் 1 முதல் தொடங்கி 2 ஆண்டு காலத்திற்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் …

Read More »

மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழு அமைப்பு

2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து  2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக  மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது: 1)    பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக்,  குழுத் தலைவர் 2)    கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும்  திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர் 3)    …

Read More »

டிசம்பர் மாதத்தில் தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களின் மாதாந்திர உற்பத்தி மற்றும் விநியோக சாதனை

நாட்டின் நிலக்கரி உற்பத்தி மற்றும் நிலக்கரி விநியோகத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை அறிவிப்பதில் நிலக்கரி அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. 2024 டிசம்பர் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் நிலக்கரி உற்பத்தியில் கணிசமான அதிகரிப்பு, தனிப்பட்ட மற்றும் வணிக சுரங்கங்களிலிருந்து விநியோகம் செய்யப்படுவதைக் காட்டுகின்றன, இது இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது. 2024 ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை மொத்த நிலக்கரி உற்பத்தி 131.05 மெட்ரிக் டன்னை எட்டியது. இது …

Read More »

எட்டு முக்கிய தொழில் பிரிவுகளில் நிலக்கரித் துறை நவம்பர் 2024-ல் 7.5% வளர்ச்சியை அடைந்தது

வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (ICI – அடிப்படை ஆண்டு 2011-12), எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை நவம்பர் 2023-ல் 185.7 புள்ளிகளுடன் இருந்தது. அதை ஒப்பிடுகையில் நவம்பர் 2024-ல், 199.6 புள்ளிகளுடன் 7.5% (தற்காலிக புள்ளி விவரம்)  குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 162.5 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது ஏப்ரல்-நவம்பர் 2024 காலகட்டத்தில் நிலக்கரி தொழில்துறை குறியீடு …

Read More »

சிறு வணிகங்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் ஓஎன்டிசி பங்களித்துள்ளது: பிரதமர்

சிறு தொழில்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், மின்னணு வர்த்தகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதிலும் டிஜிட்டல் வணிகத்துக்கான திறந்தநிலை வலைப்பின்னலின்(ஓ.என்.டி.சி.)  பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, வளர்ச்சி மற்றும் செழிப்பை முன்னெடுத்துச் செல்வதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றும் என்று குறிப்பிட்டார். சமூக ஊடகத்தில் பியூஷ் கோயல் எழுதிய பதிவுக்கு பதிலளித்த மோடி பின்வருமாறு கூறியுள்ளார். “ஓஎன்டிசி சிறு வணிகங்களை மேம்படுத்துவதற்கும் மின்னணு வணிகத்தில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும் பங்களித்துள்ளது, இதனால் வளர்ச்சி …

Read More »

ஜவுளி அமைச்சகம் : 2024 ஆம் ஆண்டில் செயல்பாடுகள்

முதல் தரத்திலான இந்திய பருத்திக்கு தனித்துவ  அடையாளத்தை வழங்குவதற்காக கஸ்தூரி காட்டன் இந்தியாவின் வர்த்தக முத்திரையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜவுளி, ஆடைத் தொழில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும், இந்தியாவின் வளமான பாரம்பரியம், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தொழில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 10 சதவீதமும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் …

Read More »