குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 6.30 கோடிக்கும் அதிகமான நிறுவனங்களுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிடும் ஆற்றல் வாய்ந்த துறையாக உருவெடுத்துள்ளது. தொழில்முனைவோரை ஊக்குவித்து, குறைந்த மூலதன செலவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக. மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து, கதர், கிராமம், கயிறுத் தொழில்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்கிறது. இந்த …
Read More »2024-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறையின் செயல்பாடுகள்
பணப் பரிமாற்ற ஒப்பந்தம் – சார்க் நாடுகளுக்கான புதிய கட்டமைப்பு: 2024-ம் ஆண்டில், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை (DEA) நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, உலகளாவிய பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கான செயல்பாடுகளை மேற்கொண்டது. சார்க் அமைப்பில் உள்ள நாடுகளுக்கிடையில் புதிய பணப்பரிமாற்ற வசதிக்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பில் 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய ரூபாயின் சில்லரை பரிவர்த்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இது அமெரிக்க டாலர் / யூரோ பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்புடன் இணைந்து செயல்படும். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய ரூபாயின் உலகளாவிய பரிமாற்றத்தை ஊக்குவிக்கும். இந்தியா- உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளுக்கிடையிலான நிதி சார் ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையிலும், பொருாளதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், இந்தியா- உஸ்பெகிஸ்தான் நாடுகளிடையே நிதி சார் ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பு, நிதி சார் சிக்கல்களுக்கான தீர்வுகள் ஆகியவற்றுக்கு இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இந்தியா-குவைத் நாடுகளிடையே முதலீட்டு பணிக்குழு உருவாக்கம் இவ்விரு நாடுகளுக்கிடையேயான நிதி பரிவர்த்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய முதலீட்டாளர் நல நிறுவனம், மாநிலங்களுக்கிடையே நிதி சார் ஒத்துழைப்பையும், பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கிறது. மேலும், அந்நிய நேரடி முதலீடு தொடர்பான விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் அதன் செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டு, தடையற்ற பொருளாதார மேலாண்மை நடவடிக்கைகளை உறுதிசெய்கிறது. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான புதிய பண பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம் 2024-27 இந்தியா-உஸ்பெகிஸ்தான், இந்தியா-குவைத் நாடுகளிடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் நிலையான பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு பாதுகாப்பு தொடர்பான நெறிமுறைகளில் முன்னேற்றம் 2024-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சியில் புதுமையான முயற்சிகளுக்கு உத்வேகம் அளித்தன. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மூலம் இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது.
Read More »பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்ப்பதற்கான கூட்டம் நிதிச்சேவைகள் துறை செயலாளர் எம்.நாகராஜு தலைமையில் நடைபெற்றது
நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களால் தீர்வு காணப்பட்ட 20 பொதுமக்கள் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்து புகார் அளித்தவர்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2024-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நடைபெற்ற பிரகதி கூட்டத்தில் பிரதமர் அளித்த உத்தரவுகளை நிதிச்சேவைகள் …
Read More »தொழில்துறையின் நிலைத்தன்மை, மேம்பாட்டில் புகையிலை வாரியம் கவனம் செலுத்துகிறது; 2023-24-ம் நிதியாண்டில் ஏற்றுமதி 12,005 கோடி ரூபாயை எட்டியது
புகையிலை சார்ந்த கைத்தொழிலின் நிலைத்தன்மையையும், வளர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையிலான உத்திசார் நடவடிக்கைகளை புகையிலை வாரியம் மேற்கொண்டுள்ளது. உள்நாட்டுத் தேவைகளையும் ஏற்றுமதி தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் வகையில், பயிர் செய்வதை திட்டமிடுதல், உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் இதில் அடங்கும். இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு தரமான புகையிலையை வழங்க ஏதுவாக அதனை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளுக்கு இந்த வாரியம் உதவி செய்கிறது. புகையிலை சார்ந்த கைத்தொழிலின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக “புகையிலை …
Read More »மூடுபனியை எதிர்கொள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர் ஆலோசனைகளை நடத்தியது
மூடுபனி காலத்திற்கான தயார்நிலையை உறுதி செய்வதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக விமான நிறுவனங்கள், விமான நிலைய ஆபரேட்டர்கள், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம், சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம், இந்திய விமான நிலைய ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத் துறை, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளை நடத்தியது. மூடுபனி தொடர்பான சவால்களை சுமூகமாக எதிர்கொள்ள பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடையே தடையற்ற ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அமைச்சகம் எடுத்துரைத்தது. …
Read More »எஃகு அமைச்சகம் 2024-ம் ஆண்டில் செயல்பாடுகள்
தொழில்துறையின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கி முன்னேறவும் எஃகு தொழில்துறைக்கு உதவுவதற்காக ரூ.15,000 கோடி மதிப்பில் ‘பசுமை எஃகு இயக்கத்தை’ எஃகு அமைச்சகம் உருவாக்கி வருகிறது. பசுமை எஃகுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான ஊக்கத்தொகை மற்றும் அரசு நிறுவனங்கள் கட்டாயமாக பசுமை எஃகு வாங்க வேண்டும் ஆகியவை இந்த இயக்கத்தில் அடங்கும். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி …
Read More »பணிபுரிவதற்கு சிறந்த இடமாக செயில் நிறுவனத்திற்கு இரண்டாவது முறையாகவும் சான்றளிக்கப்பட்டுள்ளது
இந்திய எஃகு நிறுவனம் லிமிடெட்டுக்கு 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான காலத்திற்கு பணிபுரிவதற்கு ஏற்ற சிறந்த இடத்திற்கான சான்றிதழைப் பெற்றுள்ளது. இந்த சான்றிதழ் இந்தியாவில் உள்ள பணிபுரிவதற்கு சிறந்த இடம் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய எஃகு நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ள இரண்டாவது சான்றிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலகட்டத்திற்கு இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக …
Read More »இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்தாகி வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமும் வர்த்தக ஒப்பந்தமும் (இந்தியா-ஆஸ்திரேலியா ECTA) இரண்டு ஆண்டு குறிப்பிடத்தக்க வெற்றியை நிறைவு செய்துள்ளது, பரஸ்பர வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இரு பொருளாதாரங்களின் பரஸ்பர திறனையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தியா-ஆஸ்திரேலிய இசிடிஏ வர்த்தக உறவுகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. இரு நாடுகளிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், வணிகங்கள், வேலைவாய்ப்புகளுக்கு புதிய வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில் அவர்களின் பொருளாதார ஒத்துழைப்பின் அடித்தளத்தை இது வலுப்படுத்துகிறது. …
Read More »ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 97-வது ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது
எஃகு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆர்என்ஐஎல்-ன் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட் (EIL) பொதுத் துறை நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM) -2024 டிசம்பர் 28 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் உள்ள நிர்வாகக் கட்டிடத்திலிருந்து இன்று நடைபெற்ற கூட்டத்திற்கு ஆர்ஐஎன்எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு அஜித் குமார் சக்சேனா தலைமை வகித்தார். நாட்டின் பல்வேறு …
Read More »குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பு: 2023-24
கொவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்கு பின்னர் இயல்பு நிலைமை திரும்பியுள்ள நிலையில், குடும்ப நுகர்வு செலவினங்கள் குறித்து கணக்கெடுப்புகளை நடத்த மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் முதல் கணக்கெடுப்பு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது கணக்கெடுப்பு 2023 ஆகஸ்ட் மாதம் முதல் …
Read More »
Matribhumi Samachar Tamil