இந்திரா காந்தி தேசிய கலை மையம் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்டது. இந்திய கலை, கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவை தொடர்பான பணிகளை இந்த மையம் மேற்கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்திரா காந்தி தேசிய கலை மையத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 2019-20: 46.40 கோடி 2020-21: 40.00 கோடி 2021-22: 53.30 கோடி 2022-23: 55.05 கோடி 2023-24: 109.10 கோடி விடுவிக்கப்பட்ட இந்த தொகை, கலாச்சார தகவல் ஆய்வகம், ஊடக …
Read More »எதிர்கால உலகை இந்தியாவின் அறிவுத்திறன் வழிநடத்தவுள்ளது : ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம்
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முன்னோடி நிறுவனமான சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கழகத்தின் (என்.ஐ.டி.டி.டி.ஆர்) வைர விழாவைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 15, 2024 அன்று இந்நிறுவனம் 61-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. ஏ.ஐ.சி.டி.இ தலைவர் பேராசிரியர் டாக்டர். டீ.ஜி. சீதாராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஏ.ஐ.சி.டி.இ தலைவர், இந்தியாவின் பண்டைய ஞானத்திற்கும் நவீன தொழில்நுட்ப …
Read More »குவாலியரில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் திறந்து வைத்தார்
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள விக்டோரியா மார்க்கெட் கட்டிடத்தில் அதிநவீன இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்தின் (ஜிஎஸ்ஐ) புவி அறிவியல் அருங்காட்சியகத்தை குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் இன்று ரிப்பன் வெட்டி கல்வெட்டைத் திறந்து வைத்தார். பாரம்பரியத்தின் பிரம்மாண்டத்தை நவீன கண்டுபிடிப்புகளின் அற்புதங்களுடன் தடையின்றி கலக்கும் ஒரு குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்தை இந்த நிகழ்வு குறித்தது. இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்திய தொலைத்தொடர்பு மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் திரு நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொண்டனர். குவாலியர் புவி அறிவியல் அருங்காட்சியகம் பூமியின் கதையின் அதிசயங்களுக்கான நுழைவாயிலாக செயல்படுகிறது – அறிவியலும் கலையும் ஆர்வத்தைத் தூண்டும் அறிவின் சரணாலயம். இது இரண்டு காட்சியகங்களைக் கொண்டுள்ளது. இது நமது கிரகத்தின் மர்மங்கள் மற்றும் காலப்போக்கில் வாழ்க்கையின் பயணத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.
Read More »விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு 14 டிசம்பர் 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்றது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக (ஆர்ஓ) இருந்தார். பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு , அவர் பட்டங்களை வழங்கினார். 178 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 204 வீரர்கள் இன்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், …
Read More »திருச்சி என்ஐடியில் 14-வது கட்டமைப்பு பொறியியல் மாநாடு வரும் 12 முதல் 14 வரை நடைபெறுகிறது
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி-டி) கட்டுமானப் பொறியியல் துறை, வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை, 14வது கட்டமைப்பு பொறியியல் மாநாட்டுக்கு (எஸ்இசி-2024) ஏற்பாடு செய்துள்ளது. கட்டமைப்பு பொறியியல் மாநாடு என்பது அதிநவீன ஆராய்ச்சி, புதுமையான பொருட்கள், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு பொறியியலை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முதன்மையான சர்வதேச மாநாடு ஆகும். மேலும் நெகிழ்தன்மையுடன் கூடிய, நிலையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள கல்வியாளர்கள், தொழில்துறை …
Read More »நாடாளுமன்ற கேள்வி: பார்வையற்ற சிறுவர், சிறுமியரின் கல்வி
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலின் 9வது அட்டவணைப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணம் என்பது மாநில அரசின் பொறுப்பாகும். மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ மத்திய அரசு இயற்றியது. இது 19.04.2017 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் பிரிவு 16 & 17-ன் கீழ் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியும், பிரிவு 31-ன் கீழ் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் வழங்கப்படுகிறது. இருப்பினும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு …
Read More »புதுமையான முயற்சிகள் மற்றும் வளங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது: பிரதமர்
புதுமையான முயற்சிகள் மற்றும் வள ஆதாரங்களுடன் இளம் குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு தேசிய கல்விக் கொள்கை 2020 ஆதரவளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்துள்ள திரு மோடி கூறியிருப்பதாவது: “இளம் குழந்தைகளுக்கு ஆழ்ந்த கற்றல், படைப்பாற்றலை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சார வேர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு அவர்களின் தாய்மொழியில் …
Read More »உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்
குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது: முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் …
Read More »புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு 3டி ஸ்கேனிங், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களில் அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கு பயிற்சி திட்டம்
காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கான டிஎஸ்டி என்சிஎஸ்டிசி திட்டத்தின் கீழ் “3டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பங்களில் அறிவியல் விழிப்புணர்வு பயிலரங்கு பயிற்சி திட்டம்” என்ற தலைப்பில் ஒரு தொடர் பயிற்சி முறையை 2024 டிசம்பர் 09 முதல் 2025 மார்ச் மாதம் வரை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை 2024 டிசம்பர் 09 அன்று காரைக்கால் கல்வி அலுவலர் திருமதி.விஜயமோஹனா தொடங்கிவைத்தார். புதுச்சேரி என்ஐடி …
Read More »உலோகத் தகடு உருவாக்கம் 2024 மாநாட்டை ஐ.ஐ.டி ரோப்பார் வெற்றிகரமாக நடத்தியது
உலோகத் தகடு உருவாக்கம் 2024 மாநாட்டை ஐ.ஐ.டி ரோப்பார் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஐஐடி-கள், ஆட்டோஃபார்ம், எலக்ட்ரோநியூமேடிக்ஸ் & ஹைட்ராலிக்ஸ், ஆல்டேர், டாடா ஸ்டீல், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட், ஃபோர்டு இந்தியா, ஃபெல்ஸ் சிஸ்டம் ஜிஎம்பிஹெச், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்களின் நிபுணர்கள் உரையாற்றினர். இது உலோகத் தகடு உருவாக்க ஆய்வு சங்கத்தின் முக்கியமான மாநாடாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுக்கு …
Read More »
Matribhumi Samachar Tamil