இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளித்தலையும் நிர்வாகப் பயணத்தில் முக்கிய மைல் கல்லை குறிக்கும் வகையிலும் நாளை (2025, ஜனவரி 18) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கும் நிகழ்வுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகிக்கின்றார். சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு …
Read More »அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் 7-வது தேசிய அளவிலான வழிகாட்டும் குழு கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
அடல் நிலத்தடி நீர் திட்டத்தை அமல்படுத்த தேசிய அளவிலான வழிகாட்டும் குழுவின் ஏழாவது கூட்டம் புதுதில்லியில் மத்திய அரசின் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் தலைமையில் நடைபெற்றது. ஐந்தாவது ஆண்டாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்தத் திட்டத்தின் நல்விளைவுகளை மற்ற பகுதிகளில் மேம்படுத்துவதற்கான நேரம் வந்துள்ளது என்றும் கூடுதல் செயலாளர் மற்றும் அடல் நிலத்தடி நீர் திட்டத்தின் தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் எடுத்துரைத்தார். கடந்த …
Read More »ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் சொத்து உரிமையாளர்களுக்கு 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை பிரதமர் ஜனவரி 18 அன்று வழங்குகிறார்
ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 65 லட்சத்துக்கும் அதிகமான சொத்து அட்டைகளை 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 230 மாவட்டங்களைச் சேர்ந்த 50,000-க்கும் அதிகமான கிராமங்களில் உள்ள சொத்து உரிமையாளர்களுக்கு ஜனவரி 18 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் வழங்குகிறார். அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ …
Read More »சென்னை உள்ளிட்ட ஏழு விமான நிலையங்களில் விரைவு குடியேற்றப் பதிவு சேவைகளுக்கான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அகமதாபாதில் நாளை தொடங்கி வைக்கிறார்
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சரான திரு அமித் ஷா, 2025 ஜனவரி 16-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சின், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களில் ‘விரைவு குடியேற்றப் பதிவு சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். உள்துறை அமைச்சர் ஏற்கனவே 2024 ஜூன் 22-ம் தேதி புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையத்திலிருந்து இந்தத் திட்டத்தை …
Read More »77-வது ராணுவ தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் சிறந்த தொழில் நிபுணத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்பிற்கு முப்படைகளின் தளபதி பாராட்டு தெரிவித்துள்ளார்
77-வது ராணுவ தினமான ஜனவரி 15, 2025 அன்று, முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், இந்திய ராணுவத்தின் அனைத்து படைகளுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தை வரையறுக்கும் தளராத அர்ப்பணிப்பு, தைரியம், குன்றாத மனப்பான்மை மற்றும் தொழில்நிபுணத்துவத்தின் கொண்டாட்டம் ஆகியன இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையின் அடித்தளமாகும் என்று அவர் விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் மரபானது சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறன்,இறையாண்மையை நிலைநிறுத்தல் …
Read More »ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே. ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டைப் …
Read More »கட்டடம், இதர கட்டுமான தொழிலாளர்கள் நலன் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழு கூட்டம்: தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது
கட்டடம், பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (BoCW) நலத்திட்டங்கள் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நேற்று (13 ஜனவரி 2025) நேரடியாகவும் காணொலி முறையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர்கள் / தொழிலாளர் நல …
Read More »மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி, 11 மொழிகளில் மகா கும்பேமேளா தொடர்பான தகவல், சேவைகளை வழங்குகிறது
மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பன்மொழி அணுகலுக்காக பாஷினியை (Bhashini) ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது. ‘டிஜிட்டல் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சொல்யூஷன்’ என்ற அம்சத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பாஷினியின் மொழிபெயர்ப்பு சூழல் அமைப்பு உதவுகிறது பன்மொழி ஆதரவு: சொந்த மொழிகளில் குரலைப் பயன்படுத்தி இழந்த பொருட்கள் தொடர்பாக பதிவு …
Read More »இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக ஆளுகையின் 10 அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன: சென்னையில், மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில், 10 அடிப்படைக் கோட்பாடுகள் இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். தீர்க்கமான தலைமை, மூல காரண பகுப்பாய்வு, விளைவு சார்ந்த நடவடிக்கை, சட்டத்தைப் பின்பற்றுதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, காலக்கெடுவுக்குள் செயல்படுத்துதல், பிரச்சினைகளுக்கு முன்னுரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, புதுமையான நிதி மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் கூட்டாண்மை ஆகியவை அடிப்படைக் கோட்பாடுகளில் …
Read More »உலகளாவிய எரிசக்தி உரையாடலை மறுவரையறை செய்ய இந்திய எரிசக்தி வாரம் 2025
இந்திய எரிசக்தி வாரம் 2025-க்கு, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஆதரவின் கீழ், இந்திய பெட்ரோலிய தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது புதுதில்லி, யசோபூமி மாநாட்டு மையத்தில், 2025 பிப்ரவரி 11 முதல் 14 வரை நடைபெற உள்ளது. உலகளாவிய நிகழ்வான இந்திய எரிசக்தி வாரம் 2025, இந்த ஆண்டின் மிகவும் விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய உலகளாவிய எரிசக்தி நிகழ்வாக இருக்கும். 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியா எரிசக்தி …
Read More »
Matribhumi Samachar Tamil