தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐகளை) தரம் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதலை தேசிய அளவில் ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஒடிசா அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வித்துறை ஒத்துழைப்புடன் நேற்று புவனேஸ்வரில் ஐடிஐ தரநில உயர்த்தலுக்கான தேசியத்திட்டம் குறித்த ஆலோசனைப் பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கில் ஐடிஐ தரநிலை உயர்த்தலுக்கான தேசியத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, கட்டமைப்பு, செயல்படுத்தலுக்கான சட்டகவரைவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தொழிற்சாலை, …
Read More »யானைகள் பாதுகாப்பிற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது – மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்
உலக யானைகள் தினம் 2025 கொண்டாட்டங்களை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு, தொலை உணர்வு மற்றும் புவிசார் வரைபடம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பாரம்பரிய …
Read More »உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
சுகாதாரம் என்பது ஒரு மாநிலத் திட்டமாகும். இருப்பினும், தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. இந்த திட்டம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவை மற்றும் முன்மொழிவின்படி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான …
Read More »அவசர உலகில் அதிகரிக்கும் உடல் பருமனை நிர்வகிக்க அரசு நடவடிக்கை
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 24% பெண்களும் 23% ஆண்களும் அதிக எடை கொண்டவர்களாக அல்லது பருமனாக உள்ளனர். ஆரோக்கியமற்ற உணவு முறைகள், அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உடல் பருமன் அதிகரித்து வருவதற்கு முக்கிய பங்களிப்பாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, போதுமான உடல் செயல்பாடு இல்லாதது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இந்த வளர்ந்து வரும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை …
Read More »உள்ளூர் உற்பத்திக்கு குரல் கொடுக்கும் இயக்கத்தின் வாயிலாக கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி
ஜவுளி அமைச்சகம், அதன் சமூக ஊடகக் கையாளுதல்கள் மூலம் மற்றும் ஹரியானாவின் ஹிசார் உட்பட நாடு முழுவதும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம், கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளின் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது மற்றும் இந்த துறைகளின் பெருமையை எடுத்துரைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 27 கண்காட்சிகள் மற்றும் ஒரு …
Read More »மகளிர் சுய உதவிக் குழு
தீனதயாள் அந்த்யோதயா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY–NRLM) கீழ், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, அரசு பல அடுக்கு கண்காணிப்பு மற்றும் மறுஆய்வு பொறிமுறையை நிறுவியுள்ளது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHGs) சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு கூறுகளை செயல்படுத்துவதில் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன: *மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) உடனான வழக்கமான மதிப்பாய்வுகள் …
Read More »தேர்தல் நடைமுறைகளை சீரமைத்தல்: பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்
நாட்டில் உள்ள தேசிய/மாநில அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 195-ன் பிரிவு 29ஏ-வின் விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன தற்போது, 6 தேசியக் கட்சிகள், 67 மாநிலக் கட்சிகள், 2854 பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் …
Read More »பீகார் சிறப்பு தீவிர திருத்தம் 2025; தினசரி செய்திக் குறிப்பு (1 ஆகஸ்ட் மாலை 3மணி முதல் 9 ஆகஸ்ட் காலை 9 மணி வரை)
அ. வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான சேர்க்கை மற்றும் நீக்கம் பற்றிய கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்கள் அட்டவணையில் சேர்க்க வேண்டியவை வரிசை எண் தேசிய கட்சிகள் வாக்குச்சாவடி முகவர்கள் பெறப்பட்டவை 7 நாட்களுக்குப் பின்பு தீர்வு 1. ஆம் ஆத்மி கட்சி 1 0 0 2. பகுஜன் சமாஜ் கட்சி 74 0 0 3. பாரதிய ஜனதா கட்சி 53,338 0 0 4. இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) 899 0 0 5. இந்திய தேசிய காங்கிரஸ் 17,549 0 0 6. தேசிய மக்கள் கட்சி 7 0 0 மாநில கட்சிகள் …
Read More »சஞ்சார் சாத்தி மொபைல் செயலி 21 பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது – 6 மாதங்களில் 50 லட்சம் பேர் பதிவிறக்கம்
தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் சாத்தி செயலி, தொலைத்தொடர்பு பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்த மொபைல் செயலி ஆறு மாதங்களுக்குள் 50 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் பரந்த மொழியியல், பிராந்திய பன்முகத்தன்மைகளை அங்கீகரித்து, ஆங்கிலம், இந்தி மற்றும் 21 பிராந்திய மொழிகளில் இந்த செயலியின் பயன்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மோசடி அழைப்புகளையும், ஏமாற்றுத் தகவல் அடங்கிய செய்திகளைப் பற்றி புகாரளிப்பது இதன் மூலம் எளிதாகி உள்ளது. 5.35 லட்சத்திற்கும் அதிகமான தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளை மீட்கவும், மக்களின் புகார்களின் அடிப்படையில் 1 கோடிக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மொபைல் இணைப்புகளைத் துண்டிக்கவும், சக்ஷு அம்சத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட 29 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை செயலிழக்கச் செய்யவும் இந்த சஞ்சார் சாத்தி வழிவகுத்துள்ளது. சஞ்சார் சாத்தி தளத்தை 16.7 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளனர். இது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் தளத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தொலைத்தொடர்புத் துறை, நிதி மோசடி அபாயம் குறித்த தகவல் வழங்கும் நடவடிக்கையையும் செயல்படுத்தியுள்ளது. இது நிதி மோசடி அபாயத்துடனான அவற்றின் தொடர்பின் அடிப்படையில் மொபைல் எண்களை மதிப்பிட்டு வகைப்படுத்துகிறது. இந்தக் கருவி வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், யுபிஐ சேவை வழங்குநர்கள் போன்றோர், நுகர்வோரைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உதவுகிறது. 2023 மே 16, 2023 அன்று தொடங்கப்பட்ட இணையதளத்தின் வெற்றியை அடுத்து 2025 ஜனவரி 17 அன்று சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) மொபைல் செயலியை அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொலைத்தொடர்பு பாதுகாப்பு சேவைகளை நேரடியாகவும் வசதியாகவும் அணுக அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் இந்த செயலி, பயனர்கள் தங்கள் தொலைத்தொடர்பு அடையாளத்தைப் பாதுகாக்கவும், மோசடிகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கிறது. …
Read More »பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது 90% அதிரடியான வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த மைல்கல்லை அடைவதில் பாதுகாப்பு உற்பத்தித் துறை மற்றும் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களான பாதுகாப்பு …
Read More »
Matribhumi Samachar Tamil