Saturday, February 14 2026 | 04:21:07 PM
Breaking News

ராஜஸ்தானில் 435 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார்

ராஜஸ்தானில் ஜெலெஸ்ட்ரா இந்தியாவால் உருவாக்கப்பட்ட 435 மெகாவாட் கோர்பியா சூரிய மின்சக்தி திட்டத்தை  மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராஜஸ்தான் பாலைவன நிலப்பரப்பிலிருந்து உலகளாவிய தூய்மையான எரிசக்தி மையமாக மாறுவதை சுட்டிக் காட்டினார். “நாங்கள் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு மெகாவாட்டிலும், நாங்கள் மின்சாரத்தை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, நாங்கள் ஒரு புதிய இந்தியாவை உருவாக்குகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார், இந்தத் திட்டம் மாற்றத்தின் வேகத்தையும் அளவையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார். எட்டு மாதங்களுக்குள் வழங்கப்பட்ட கோர்பியா சூரிய மின்சக்தி திட்டம், 1250 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்திய சூரிய எரிசக்தி  கழகத்துடன் 25 ஆண்டு மின் கொள்முதல் ஒப்பந்தத்தால் ஆதரிக்கப்படுகிறது. இது ஆண்டுதோறும் 755 ஜிகாவாட்  சுத்தமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், தோராயமாக 1.28 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7.05 லட்சம் டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும். ராஜஸ்தானின் மின்சார திறனில் கிட்டத்தட்ட 70 …

Read More »

நாட்டில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியாவில் சுமார் 76,000 புத்தொழில் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும், அவற்றில் பெரும்பாலானவை  2-ம் நிலை, 3-ம் நிலை நகரங்களில் உள்ளன  என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். பீகார் அரசின் ஊரக வளர்ச்சித் துறை, தில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனத்துடன் இணைந்து பாட்னாவில் ஏற்பாடு செய்திருந்த “வளர்ச்சியடைந்த பீகார்: பெண்கள் பங்கேற்பின் மூலம் …

Read More »

வாரணாசியில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்ற கருப்பொருளில் ‘இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை’ மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று (19.07.2025) தொடங்கி வைத்தார். உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது இளைஞர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக அமைந்தது. பிரதமர் தமது செய்தியில், “இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு 2025 என்பது வலுவான, விழிப்புணர்வுடன் கூடிய, ஒழுக்கமான இளம் இந்திய தலைமுறையை உருவாக்க முயலும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். போதைப்பொருள் தனிப்பட்ட திறனைத் தடம் புரளச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்துகிறது. போதைப்பொருள்களுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில், சுய விழிப்புணர்வு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, போதைப் பழக்க அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவின் இளைஞர் சக்திக்கு ஒரு தெளிவான அழைப்பாகும். அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்த உச்சிமாநாடு ஒரு கூட்டு சங்கல்பம் என்று கூறினார். இந்த சங்கல்பத்தை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார். மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், இந்தியா தற்போது ஆழமான மாற்றத்திற்கான சகாப்தத்தை கடந்து வருவதாகவும், இதுபோன்ற திருப்புமுனைகளின் போது இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். கூட்டுக் குடும்ப அமைப்புகளின் சிதைவு காரணமாக, இன்று பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான தனிமை குறித்தும் திரு ஷெகாவத் கவலை தெரிவித்தார். கலாச்சார அம்சங்களை மீட்டெடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, போதைப் பொருள்களுக்கு எதிராக அரசின் சமரசமற்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

Read More »

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சார்பில் இரண்டு ஆய்வு மையங்கள் – துணைவேந்தர் திறந்து வைத்தார்

புதுச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் கீழ் இரண்டு முன்னோடி ஆராய்ச்சி மையங்களை பல்கலைக்கழக துணைவேந்தர் தொடங்கி வைத்தார். அகாமிக் ஆய்வுகள் மற்றும் பாறைக் கலை மற்றும் அறிவாற்றல் ஆய்வுகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்ந ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு வரலாற்றுத் துறையின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு புதிய ஆராய்ச்சி மையங்களை திறந்து வைத்தார். இவை ஒன்றாண்டு முதுகலை டிப்ளோமா பாடத்திட்டத்துடன் செயல்பட உள்ளன. …

Read More »

ஒடிசாவின் புவனேஸ்வரில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு நாள் முகாம்

தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஜூலை 21 – 22, 2025 அன்று ஒடிசாவின் புவனேஸ்வரில் இரண்டு நாள் முகாமை நடத்துகிறது. ஆணையத்தின் தலைவர், நீதிபதி திரு வி. ராமசுப்பிரமணியன், உறுப்பினர்கள், நீதிபதி (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, திருமதி. விஜய பாரதி சயானி மற்றும் திரு பிரியங்க் கனூங்கோ ஆகியோர் ஜூலை 21, 2025 அன்று கேசரி நகரில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் காலை 10.00 மணி …

Read More »

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை: மக்களவைத் தலைவர்

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கொள்கை உருவாக்கம் தேவை என்று மக்களவைத் தலைவர் திரு  ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். இதற்கான சமூகம் மற்றும் தேசத்தின் முழுமையான வளர்ச்சியில் சமூக அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். குருகிராமில் இன்று ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த “ஜிடெம் இளைஞர் மாநாடு 2025”-ல் …

Read More »

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் பங்கேற்பு; இளைஞர்களுக்கு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று நொய்டாவில் இந்தியாவின் சர்வதேச ஐக்கிய நாடுகள் இயக்கம் -2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், அமிர்த காலத்திற்கான ஐந்து உறுதிமொழிகளின்படி, 2047 ஆம் ஆண்டுக்குள்  வளர்ச்சியடைந்த  பாரதத்தை உருவாக்குவதற்கு இளைஞர்கள் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியா ஒரு பெரிய மாற்றத்தின் உச்சத்தில் நிற்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய திரு கோயல், 2022 …

Read More »

அன்வேஷா 2.0 – தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு கொண்டாட்டம்; விநாடி வினா போட்டி

அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னையில் 2025 ஜூலை 18 அன்று நடைபெற்றது.  தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராஜீவ லக்‌ஷ்மன் கரன்டிகார் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.    சென்னை நகரில் உள்ள கல்லூரிகள், …

Read More »

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.  இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். …

Read More »

சாலை கட்டமைப்பில் உலகின் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது; மத்திய இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா

உலகத்தரம் வாய்ந்த சாலை மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், உலகிலேயே சாலை கட்டமைப்பில் இரண்டாவது பெரிய நாடாக  இந்தியா திகழ்கிறது என்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சர் திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.  தில்லியில் இன்று நடந்த சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், திரு நிதின் …

Read More »