Sunday, April 19 2026 | 08:02:59 AM
Breaking News

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்குகிறார்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா, நாளை (ஜூன் 24, 2025 செவ்வாய்க்கிழமை) உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறும் மத்திய மண்டல கவுன்சிலின் 25-வது கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் உறுப்பு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளும் இந்தக் …

Read More »

இந்தியா வந்துள்ள சிலியின் கோடெல்கோ குழுவை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம் வரவேற்றது

சிலியின் அரசுக்குச் சொந்தமான தாமிரச் சுரங்க நிறுவனமான கோடெல்கோ-வின் (கார்ப்பரேசியன் நேஷனல் டெல் கோப்ரே)  பிரதிநிதிகளை இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்  இன்று அதிகாலை புதுதில்லியில் வரவேற்றது. சிலி காப்பர் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்துஸ்தான் காப்பர் நிறுவன அலகுகள் மற்றும் அலுவலகங்களுக்குச் சென்று பல்வேறு சுரங்க மற்றும் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பிடுவார்கள். இது போன்ற மதிப்பீடு இந்தியாவில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை ஆகும். …

Read More »

ஈரான் அதிபர் பிரதமரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினார்

பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (22.06.2025) ஈரான் அதிபர் திரு மசூத் பெஷஷ்கியானிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்து வரும் மோதல்கள் குறித்து பிரதமரிடம் ஈரான் அதிபர் பெஷஷ்கியான் விரிவாக விளக்கிக் கூறினார். இது தொடர்பாக அவரது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். சமீபத்திய பதற்றங்கள் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்தியா அமைதி மற்றும் …

Read More »

இந்திய கடற்படையானது தமல் கப்பலை பணியில் இணைக்க உள்ளது

இந்திய கடற்படை, அதன் சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, 2025 ஜூலை 01 அன்று ரஷ்யாவின் கலினின்கிராட்டில், ரஷ்யாவிடம் இருந்து பெற்று, அதை செயல்படுத்திப் பணியில் இணைக்க உள்ளது. இந்த விழாவில் மேற்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். “தமல்” என்று பெயரிடப்பட்ட இது, கடந்த இருபது …

Read More »

கென்யா, மடகாஸ்கர் நாடுகளுக்குப் பாதுகாப்பு இணையமைச்சர் நாளை முதல் 3 நாட்கள் பயணம்

பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தலைமையிலான இந்தியக் குழு நாளை முதல் (2025 ஜூன் 23) 26-ம் தேதி வரை 3 நாட்கள் கென்யா, மடகாஸ்கர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் கட்டமாக இந்தியா, கென்யா நாடுகளைச் சேர்ந்த வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் போர் நினைவுச்சின்னத்தை தைட்டா-டவேட்டா பகுதியில் கூட்டாகத் திறந்து வைப்பதற்காக நாளை (2025 ஜூன் 23)  பாதுகாப்பு இணையமைச்சர் கென்யாவுக்குச் செல்கிறார். …

Read More »

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய நூலின் இரண்டாம் தொகுதி – நாளை வெளியிடுகிறார் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

குடியரசுத் தலைவரின் உரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் இரண்டாம் பகுதியான விங்ஸ் டூ அவர் ஹோப்ஸ் –  (Wings to Our Hopes – Volume 2) என்ற நூலையும் அதன் இந்தி மொழி பதிப்பான ஆஷான் கி உடான் (Ashaon Ki Udaan – Khand 2) என்ற நூலையும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் நாளை (23.06.2025) வெளியிடுகிறார். இந்த நூல் குடியரசுத் தலைவர் …

Read More »

ஏப்ரல் 2025-ல் இபிஎஃப்ஓ 19.14 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது – 8.49 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) ஏப்ரல் 2025-க்கான தற்காலிக சம்பளப் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதன்படி மொத்தம் 19.14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மார்ச் 2025-ஐ விட 31.31% அதிகமாகும். ஆண்டு பகுப்பாய்வின்படி, ஏப்ரல் 2024 உடன் ஒப்பிடும்போது நிகர சேர்க்கை 1.17% அதிகரித்துள்ளது. இது இபிஎஃப்ஓ-வின் பயனுள்ள மக்கள் தொடர்பு முயற்சிகளாலும், அதிகரித்த வேலைவாய்ப்புகளாலும் ஏற்பட்டுள்ளது.  முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு: ஏப்ரல் 2025-ல் …

Read More »

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்ட யோகாவின் நேர்மறையான தாக்கம்: மக்களவைத் தலைவர்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மக்களவை செயலகம் மற்றும் மாநிலங்களவை செயலக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள்  யோகா நெறிமுறையில் பங்கேற்க கூடினர். கூட்டத்தில் உரையாற்றிய திரு பிர்லா, யோகா உடல், மனம் மற்றும் ஆன்மா இடையே நல்லிணக்கத்தை அடைவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும், தனிநபர்களின் …

Read More »

யோகா உலகம் முழுவதையும் ஒன்றிணைத்துள்ளது: பிரதமர்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின நிகழ்வில் உரையாற்றினார். சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கி யோகா அமர்வில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு சர்வதேச யோகா தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் கூட்டாக யோகா பயிற்சி செய்ய ஒன்றுகூடும் …

Read More »

பாரம்பரியத்தை சந்திக்கும் யோகா: தொல்லியல் நினைவுச்சின்னங்களில் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பிரமாண்டமான கொண்டாட்டத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின்  கீழ் உள்ள 81 பாரம்பரிய தளங்கள் சனிக்கிழமை ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட துடிப்பான யோகா அமர்வுகளை நடத்தின. பிரதமர் திரு நரேந்திர மோடி ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து 11வது சர்வதேச யோகா தினத்தை வழிநடத்தினார். யோகாவின் உள்ளடக்கிய தன்மையை வலியுறுத்தி, “எல்லைகள், பின்னணிகள், வயது அல்லது …

Read More »