Sunday, February 15 2026 | 07:37:26 AM
Breaking News

பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் “அனைவருக்கும் வீடு” என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. முக்கிய சிறப்பம்சங்கள்: *பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. …

Read More »

கட்டடம், இதர கட்டுமான தொழிலாளர்கள் நலன் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழு கூட்டம்: தொழிலாளர் நலத்துறைச் செயலாளர் தலைமையில் நடைபெற்றது

கட்டடம், பிற கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (BoCW) நலத்திட்டங்கள் தொடர்பான 16-வது கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா தலைமையில் நேற்று (13 ஜனவரி 2025) நேரடியாகவும் காணொலி முறையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை தலைமை இயக்குநர், அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர் / முதன்மைச் செயலாளர்கள் / தொழிலாளர் நல …

Read More »

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடைகள் தொடர்பான முக்கிய முன்முயற்சிகள்: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நேற்று (2025 ஜனவரி 13 -திங்கட்கிழமை) ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பால், கால்நடை துறையில் தொடர்ச்சியான பயனுள்ள முக்கிய முன்முயற்சிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், கால்நடை உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பிராந்தியத்தில் முக்கியமான ஊட்டச்சத்து சவால்களை எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. …

Read More »

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி, 11 மொழிகளில் மகா கும்பேமேளா தொடர்பான தகவல், சேவைகளை வழங்குகிறது

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26, 2025 வரை  பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பன்மொழி அணுகலுக்காக பாஷினியை (Bhashini) ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப ஆதரவை வழங்கியுள்ளது. ‘டிஜிட்டல் லாஸ்ட் அண்ட் ஃபவுண்ட் சொல்யூஷன்’ என்ற அம்சத்தின் மூலம் உலகின் மிகப்பெரிய ஆன்மீக கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பாஷினியின் மொழிபெயர்ப்பு சூழல் அமைப்பு உதவுகிறது பன்மொழி ஆதரவு: சொந்த மொழிகளில் குரலைப் பயன்படுத்தி இழந்த பொருட்கள் தொடர்பாக பதிவு …

Read More »

150 ஆண்டுகள் உயர் தனிச் சிறப்பைக் கொண்டாடும் இந்திய வானிலை ஆய்வு மையம்

புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி),தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 150 ஆண்டுகளைக் கொண்டாடி ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 1875-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த ஐஎம்டி, முக்கியமான வானிலை, பருவநிலை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பேரிடர் மேலாண்மை, விவசாயம், விமானப் போக்குவரத்து, பொது பாதுகாப்பு ஆகியவற்றில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தேசிய வானிலை சேவை என்ற வகையில், வானிலை ஆய்வு, நில அதிர்வு அதனுடன் தொடர்புடைய …

Read More »

9-வது முன்னாள் படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன – ஜம்முவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்பு

ஒன்பதாவது முன்னாள் படை வீரர்கள் தினம் இன்று (2025 ஜனவரி 14) நாடு முழுவதும் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஜம்மு, மும்பை, புது தில்லி, புனே, நாக்பூர், விசாகப்பட்டினம், பெங்களூரு, பரேலி, ஜெய்ப்பூர், சிலிகுரி உள்ளிட்ட பல இடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களின் தன்னலமற்ற கடமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. ஜம்முவில் உள்ள அக்னூரில் உள்ள தாண்டா பீரங்கிப் படையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,000 …

Read More »

மகா கும்பமேளா 2025-ல் மகர சங்கராந்தி

குளிர்காலத்தின் முடிவையும் வெப்பமான நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கும் பண்டிகையான மகர சங்கராந்தியின் விடியல் நெருங்கியபோது, பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கத்தின் கரைகள் தெய்வீக மகிமையின் காட்சியாக மாறியது. மகா கும்பமேளா 2025-ன் முதல் அமிர்த ஸ்னானம் (புனித நீராடல்) மகர சங்கராந்தியில் தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் புனித சங்கமத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்களை புனிதர்களையும் அது ஈர்த்தது. அவர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர். முதல் அமிர்தக் குளியலின் போது 3.5 கோடிக்கும் அதிகமான …

Read More »

மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தேசிய மஞ்சள் வாரியத்தை தொடங்கி வைத்தார் – நிஜாமாபாத்தில் தேசிய மஞ்சள் வாரியம் நிறுவப்பட்டுள்ளது

தேசிய மஞ்சள் வாரியத்தை மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் இன்று புதுதில்லியில் தொடங்கி வைத்தார். திரு பியூஷ் கோயல் அதன் முதல் தலைவராக திரு பல்லே கங்கா ரெட்டி நியமிக்கப்படுவதாக அறிவித்தார். வாரியத்தின் தலைமையகம் நிஜாமாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மஞ்சள் வாரியத்தின் தொடக்கம் நாடு முழுவதும் பல்வேறு பண்டிகைக் கொண்டாட்டங்களின் புனித நாளில் அமைந்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் தேசிய மஞ்சள் வாரியத்தின் …

Read More »

இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக ஆளுகையின் 10 அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன: சென்னையில், மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில், 10 அடிப்படைக் கோட்பாடுகள் இந்த தசாப்தத்தில் முன் எப்போதும் இல்லாத மாற்றத்தின் தூணாக இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். தீர்க்கமான தலைமை, மூல காரண பகுப்பாய்வு, விளைவு சார்ந்த நடவடிக்கை, சட்டத்தைப் பின்பற்றுதல் மற்றும் வெளிப்படைத்தன்மை, காலக்கெடுவுக்குள் செயல்படுத்துதல், பிரச்சினைகளுக்கு முன்னுரிமை, பொறுப்புக்கூறல் மற்றும் கண்காணிப்பு, தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது, புதுமையான நிதி மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் கூட்டாண்மை ஆகியவை அடிப்படைக் கோட்பாடுகளில் …

Read More »

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று (14.01.2024) நடைபெற்ற இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆண்டுகள் ஆனது இத்துறையின் பயணத்தை மட்டுமல்ல என்றும் இந்தியாவின் நவீன அறிவியல், தொழில்நுட்பத்தின் பெருமைமிக்க பயணத்தையும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக …

Read More »