Sunday, February 08 2026 | 04:25:20 PM
Breaking News

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்ப்பு முகாம் சென்னையில் 24.01.2025 அன்று நடைபெற உள்ளது

அஞ்சல் ஓய்வூதியதாரர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் சென்னை மத்தியக் கோட்டம் தியாகராயநகர் அலுவலகத்தில் 24.01.2025 அன்று காலை 11 மணிக்கு முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. பின்வரும் அஞ்சல் அலுவலகங்களின் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் புகார்கள் ஏதேனும் இருப்பின் தபால் மூலமாகவும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும்  8939646404 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும் 20.01.2025-க்குள் அனுப்பலாம். தியாகராய நகர், தலைமை தபால் அலுவலகம்- 600 017, தியாகராய நகர் வடக்கு தபால் அலுவலகம்- 600 017. …

Read More »

வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025 புதுதில்லியில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது

மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இளைஞர் நலத்துறை 2025 ஜனவரி 10 முதல் 12 வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு புதுமையான தீர்வுகளை வழங்க இளைஞர்களுக்கு ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று …

Read More »

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி உதய்பூரில் நாளை தொடங்குகிறது

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ராஜஸ்தானின் உதய்பூர் நகரில் 2025 ஜனவரி 10 முதல் 12 வரை சிந்தனை அரங்கம்  நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த மூன்று நாள் நிகழ்வு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்து, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நலனில் சவால்களை ஏற்படுத்தும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், சவால்களைச் சமாளிக்க சிறந்த தீர்வுகளை வெளிக்கொணரவும் உதவும். இந்த நிகழ்ச்சியில் …

Read More »

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் : 2024-ம்ஆண்டு செயல்பாடுகள்

பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது.  2014-ல் 91,287 கிமீ ஆக இருந்த நெடுஞ்சாலை தற்போது 146,195 கிமீ ஆக அதிகரித்துள்ளது. தேசிய அதிவேக வழித்தடங்கள் 2014-ல் 93 கிலோமீட்டராக இருந்தது தற்போது 2,474 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் …

Read More »

தகவல் அறியும் உரிமை தளம் சீராக செயல்படுகிறது

தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) போர்ட்டலின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கவலைகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கவனமாக ஆராய்ந்து, புதிய ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு பின்னர் இந்த அமைப்பு பயனுள்ள வகையில் செயல்படுவதாக இத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேம்பட்ட பாதுகாப்பு நெறிமுறை உட்பட போர்ட்டலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் சிறப்பாக செயல்படுவதும் பயன்படுத்த எளிதாக இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சில பயனர்கள் புகார் செய்திருந்த …

Read More »

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி பரிசளிப்பு விழா நாளை நடைபெறவுள்ளது

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கான 34-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டி, 2023-24-ன் பரிசு வழங்கும் விழா நாளை (2025 ஜனவரி 10 வெள்ளிக்கிழமை)  புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில் உள்ள ஜிஎம்சி பாலயோகி அரங்கத்தில் நடைபெறும். நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு விழாவிற்கு தலைமை தாங்கி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பரிசுகள் வழங்குகின்றார்.  34வது தேசிய இளையோர் நாடாளுமன்ற …

Read More »

அகில இந்திய வானொலியின் சிறப்பு ‘கும்பவாணி’ அலைவரிசை, ‘கும்ப மங்கல்’ த்வனியை நாளை பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்

மகா கும்பமேளா 2025-க்கு என்று சிறப்பு ஏற்பாடாக அகில இந்திய வானொலியின் சிறப்பு கும்பவாணி அலைவரிசையை (எஃப்எம் 103.5 மெகாஹெர்ட்ஸ்) பிரயாக்ராஜில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன்  காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியின் போது, கும்ப மங்கள் த்வனியையும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இந்த …

Read More »

புதுதில்லியில் உள்ள காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

புதுதில்லியில் உள்ள காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தில்  நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்.  மத்திய உள்துறை செயலாளர், காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகத்தின் தலைமை இயக்குநர், உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியகத்தின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். புதிய குற்றவியல் சட்டங்களை  அமல்படுத்துவதில் காவல் துறை ஆராய்ச்சி, மேம்பாட்டு பணியகம்  மேற்கொண்ட முயற்சிகள் …

Read More »

நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக இன்று பொறுப்பேற்றார்

தற்போதைய நிதித்துறை செயலாளர் திரு துஹின் காந்த பாண்டே, நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையின் செயலாளராக இன்று பொறுப்பேற்றார். அமைச்சரவையின் நியமனக் குழு புதன்கிழமை திரு பாண்டேவை நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலாளராக நியமித்தது. திரு பாண்டே தொடர்ந்து நிதித்துறை செயலாளராகவும் தொடர்வார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, ஒடிசா கேடரின் 1987 தொகுதி இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) அதிகாரியான திரு பாண்டே, 24.10.2019 முதல் முதலீடு மற்றும் பொது …

Read More »

தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் சாதனை அளவிலான பங்கேற்பு

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை கற்றலாகவும், கொண்டாட்டமாகவும்  மாற்றும் நாடு தழுவிய இயக்கமாக பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்னோடி திட்டமான தேர்வு குறித்த கலந்துரையாடல்  நிகழ்ச்சி தொடர்ந்து பிரபலமடைந்து  வருகிறது. தேர்வு குறித்த கலந்துரையாடலின் 8-வது பகுதியில் பங்கேற்க உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 2.79 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாகும். இந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பதிவு என்பது ஒரு …

Read More »