Monday, February 02 2026 | 04:18:08 PM
Breaking News

மருந்தியல், ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் 2024-ம் ஆண்டின் செயல்பாடுகள்

இந்த ஆண்டில் ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்து உற்பத்தித் துறையின் முக்கிய சாதனைகள்  பின்வருமாறு  பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் என்பது அத்துறையின் முன்னோடித் திட்டமாகும். இதன் மூலம் தரமான மருந்துகள், மலிவு விலையில் மக்கள்மருந்தக மையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த திட்டம் நாட்டின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. 30.11.2024 நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 14,320 மக்கள் மருந்தகங்கள் …

Read More »

சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம் – பனை எண்ணெய் திட்டத்தின் கீழ் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், தேசிய சமையல் எண்ணெய்கள் இயக்கம் -பனை எண்ணெய் (NMEO-OP) திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியுள்ளார். சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவது, இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது போன்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் இந்த சமையல் எண்ணெய்களுக்கான இயக்கம் செயல்படுகிறது. உள்நாட்டு சமையல் எண்ணெய் …

Read More »

கிராமப்புற, பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக-பொருளாதார மாற்றத்திற்கு முக்கியமானதாகும்: மக்களவைத் தலைவர்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது  சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமையும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.  தூய்மையான குடிநீர், துப்புரவு, கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய கைவினைப் பொருட்கள்,  ஆன்லைன் வர்த்தகங்கள், உள்ளூர் உற்பத்தி …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு ரயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்தோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பல்வேறு ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு பல திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை ரயில்வேயின் ராயகடா ரயில்வே பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், தெலங்கானாவில் சார்லபள்ளி புதிய முனைய ரெயில் நிலையத்தையும் தொடங்கி வைத்தார். ஸ்ரீ குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து …

Read More »

ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் பிரதமர் பயணம்

ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்க ளில்  2025 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நீடித்த வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஜனவரி 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ஜனவரி 9 அன்று காலை …

Read More »

பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டணியில், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, தூய்மையான எரிசக்தி, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பீடு செய்தனர். குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக 2024 செப்டம்பரில் அமெரிக்கா சென்றது உட்பட அதிபர் …

Read More »

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா போர்பந்தரில் சைக்கிள் பேரணி மேற்கொண்டார்

மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர், டாக்டர் மன்சுக் மாண்டவியா, இன்று குஜராத்தின் போர்பந்தரில் உள்ள உப்லேடா தொகுதியில், சைக்கிள் ஓட்டுதல் நிகழ்விற்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்க, ‘ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள்’ முன்முயற்சியை வழிநடத்தினார்.  150-க்கும் மேற்பட்டோர் டாக்டர் மாண்டவியாவுடன் முனிசிபல் ஆர்ட்ஸ் & காமர்ஸ் கல்லூரியில் இருந்து உப்லேட்டாவில் உள்ள தாலுகா பள்ளி கிரிக்கெட் மைதானம் வரை 5 …

Read More »

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மேற்கு வங்க மாநிலம் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தைத் திறந்து வைத்தார்

ஃபுலியா இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கழகத்தின் புதிய நிரந்தர வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் திறந்து வைத்தார். இந்நிறுவனத்தின் புதிய வளாகம் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5.38 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த வளாகத்தில் ரூ. 75.95 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், நவீன  சோதனைக் கூடங்கள் அடங்கிய நவீன உள்கட்டமைப்பு உள்ளது. புதிய வளாகம் ஒரு முன்மாதிரியான …

Read More »

மத்திய எஃகு மற்றும் கனரகத் தொழில்துறை அமைச்சர் பி.எல்.ஐ திட்டம் 1.1 ஐ அறிமுகப்படுத்தி, விண்ணப்ப சாளரத்தை நாளை திறக்கிறார்

மத்திய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, 6 ஜனவரி 2025 அன்று புது தில்லியின் மௌலானா ஆசாத் சாலையில் உள்ள விஞ்ஞான் பவனில் எஃகுத் தொழிலுக்கான ‘பிஎல்ஐ திட்டம் 1.1’ ஐ அறிமுகப்படுத்தி விண்ணப்பங்களை வரவேற்கிறார். உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) என்ற கருத்து 2020- ம் ஆண்டின் உலகளாவிய முழு அடைப்பின் போது உருவாக்கப்பட்டது. இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. …

Read More »

டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள்

அறிமுகம் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு வரைவு விதிகள் மக்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்கும்  உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விதிகள் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (DPDP சட்டம்), டிஜிட்டல் தனிநபர் தரவைப் பாதுகாப்பதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப செயல்பட முயல்கின்றன. எளிமை மற்றும் தெளிவுடன் வடிவமைக்கப்பட்ட, வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் மக்களை மேம்படுத்தும் வகையில் விதிகள் …

Read More »