Tuesday, December 09 2025 | 01:26:59 AM
Breaking News

Tag Archives: Lok Sabha Speaker

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவை: மக்களவைத் தலைவர்

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் இந்திய இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் கொள்கை உருவாக்கம் தேவை என்று மக்களவைத் தலைவர் திரு  ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். இதற்கான சமூகம் மற்றும் தேசத்தின் முழுமையான வளர்ச்சியில் சமூக அமைப்புகளின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். குருகிராமில் இன்று ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த “ஜிடெம் இளைஞர் மாநாடு 2025”-ல் …

Read More »

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு தரமானது, அனைவரும் அணுகக்கூடியது மற்றும் செலவு குறைந்தது: மக்களவைத் தலைவர்

இந்தியாவின் சுகாதார கட்டமைப்பு தரமானது, அனைவராலும் அணுகக்கூடியது மற்றும் குறைந்த செலவில் கிடைக்கக்கூடியதாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா பாராட்டியுள்ளார். இன்று புதுதில்லியில் ஐபிஎஃப் மெடிகான் 2025 மாநாட்டை தொடங்கி வைத்து பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.  மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கலில் நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துரைத்த அவர், இந்தியா ஒவ்வொரு குடிமகனுக்கும் எட்டக்கூடியதாக இருப்பதை உறுதி செய்யும் அதே வேளையில், சுகாதாரத்தின் தரத்தை வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். சுகாதாரத் துறையில் உள்ள முன்முயற்சிகள் சுகாதார சேவைகளை மேலும் உள்ளடக்கியதாகவும் நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும் மாற்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சுகாதாரப் பரவல், டிஜிட்டல் சுகாதாரத் தொழில்நுட்பங்கள் மற்றும் மலிவு விலை சிகிச்சை ஆகியவற்றில்  ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் பாராட்டினார், இது ஒரு வலுவான மற்றும் சமமான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். புதுதில்லியில் புதுமையான மருத்துவர்கள் மன்றத்தின் 7-வது ஆண்டு சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் திரு பிர்லா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இன்று, வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் சுகாதார சவால்களை எதிர்கொண்டாலும், இந்திய மருத்துவர்கள் புதுமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் உலகளாவிய நற்பெயரை மேம்படுத்தி வருவதாக திரு பிர்லா  கூறினார். மருத்துவத் துறையில் அண்மை ஆராய்ச்சி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்க இந்த மன்றம் ஒரு முக்கிய தளமாக செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை, சிறந்த சுகாதார அமைப்பை உருவாக்கவும், மருத்துவத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இது ஆராய்கிறது. இந்திய மருத்துவர்களின் நற்பெயர் மற்றும் தரம் உலகளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். குறைந்த வளங்கள் இருந்தபோதிலும், மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகம் இந்தியா கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயை திறம்பட நிர்வகிக்கவும் வெற்றிகரமான சிகிச்சையை வழங்கவும் உதவியது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மைக்கு இது ஒரு உண்மையான சான்று என்று திரு பிர்லா சுட்டிக் காட்டினார். இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான மையமாக வளர்ந்து வருவதாகவும், நாட்டிற்குள் மருந்து உற்பத்தி, தடுப்பூசி உற்பத்தி மற்றும் உயிரிமருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றங்களைக் கண்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர்,  சர்வதேச அரங்கில் இந்தியா தன்னை ஒரு முக்கிய நாடாக  நிலைநிறுத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்றார்.  இந்தியாவின் திறமையான விஞ்ஞானிகள், உறுதியான ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்துதல் ஆகியவை உள்ளூர் மற்றும் உலகளாவிய தேவைகளுக்கு சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்துகின்றன என்று அவர் கூறினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை உலகளாவிய சுகாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை மேலும் வலுப்படுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், சுகாதாரத் துறையில் இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் திரு பிர்லா குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத் போன்ற முயற்சிகள் மூலம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் பின்தங்கியவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என அவர் கூறினார். மருத்துவத் துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இது காலத்தின் தேவை என்று கூறிய அவர்,  வளர்ந்து வரும் சுகாதார சவால்களை எதிர்கொள்ளவும் நோயாளி பராமரிப்பை மேம்படுத்தவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று  வலியுறுத்தினார். புதிய சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், நோய் தடுப்பை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கும் புதுமை கலாச்சாரத்தை வளர்ப்பதும், மருத்துவ ஆராய்ச்சியில் முதலீடு செய்வதும் அவசியம் என்று திரு பிர்லா குறிப்பிட்டார். இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக சமூகத்திற்கும் பயனளிக்கும் முன்னேற்றங்களை இயக்க நிறுவனங்கள், விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  இந்த மாநாடு வெறும் ஒரு நிகழ்வு மட்டுமல்ல – இது மனித சேவைக்கான உலகளாவிய தளம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். ஆராய்ச்சி, புதுமை மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு ஐபிஎஃப் பங்களிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இங்கு நடைபெறும்  விவாதங்கள் செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கருவிகள், ரோபாட்டிக்ஸ் மற்றும் பிற நவீன மருத்துவ தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கும் என்று கூறிய அவர், மனிதனை மையமாகக் கொண்ட, திறமையான சுகாதார அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நேபாளம், இலங்கை, மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

Read More »

ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பு, நிதி பொறுப்புடைமை மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆளுகையை மக்களவை தலைவர் வலியுறுத்தியுள்ளார்

மும்பையில் உள்ள மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அன்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தொடங்கி வைத்த நாடாளுமன்றம் மற்றும் மாநில, யூனியன் பிரதேச சட்டப் பேரவைகளின் மதிப்பீட்டுக் குழுக்களின் தலைவர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. இந்நிறைவு அமர்வில் உரையாற்றிய மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்த நிறுவன ஒருங்கிணைப்பை வளர்ப்பது, நிதி பொறுப்புடைமையை மேம்படுத்துவது மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆளுகையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். …

Read More »

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாக கொண்ட ஆளுகை மூலம் நிதி மேற்பார்வை செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மூலம், நிதிசார் கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச் செலவினங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், நிதிசார் ஒழுங்குமுறை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும், நிதிசார் கண்காணிப்பு வழிமுறைகள் பயனுள்ள வகையில் …

Read More »

ஹரியானாவின் 15வது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்

சண்டிகரில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில், ஹரியானாவின் 15-வது சட்டமன்றத்திற்குப் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா நாளை (2025 பிப்ரவரி 14) தொடங்கி வைக்கிறார். ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி; ஹரியானா சட்டப் பேரவைத் தலைவர் திரு ஹர்விந்தர் கல்யாண்; சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு பூபிந்தர் சிங் ஹூடா; மாநில அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற …

Read More »

வலிமையும் உத்வேகமும் பெற இளைஞர்கள் புத்தகங்களின் பக்கம் திரும்ப வேண்டும்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வலிமையும் உத்வேகமும் பெற புத்தகங்களை நோக்கி திரும்ப வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். புகழ்பெற்ற பத்திரிகையாளரும் ராஜஸ்தான் பத்திரிகாவின் தலைமை ஆசிரியருமான திரு குலாப் கோத்தாரி எழுதிய ‘ஸ்ட்ரீஃ தேஹ் சே ஏஜ்’, ‘மைண்ட் பாடி இன்டலெக்ட்’ ஆகிய இரண்டு புத்தகங்களை புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புத்தகங்கள் தனிப்பட்ட …

Read More »

மக்களவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட இடையூறு ஏற்படுத்தல், கண்ணியக் குறைவு, நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைவு ஆகியவை குறித்து மக்களவை சபாநாயகர் கவலை தெரிவித்தார்

மக்களவை நடவடிக்கைகளுக்கு திட்டமிட்டு இடையூறு விளைவிப்பது, அமர்வுகளின் எண்ணிக்கை குறைதல் ,நாடாளுமன்றத்திற்கான கண்ணியம் குறைந்து வருதல் ஆகியவல குறித்து மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கவலையும், வேதனையும் தெரிவித்தார். நாடாளுமன்றம் விவாதங்களுக்கானது என்றும், மக்கள் தங்களின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை உறுப்பினர்கள் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று கூறிய மக்களவைத் தலைவர், நாடாளுமன்ற அமர்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நாடாளுமன்றமானது அரசியலமைப்பு கடமையை நிறைவேற்றுவதில் பின்தங்கியுள்ளது என்று எச்சரித்தார். …

Read More »

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற வகையில் தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது: மக்களவைத் தலைவர்

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, பாரபட்சமற்ற வகையில் தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதை எடுத்துரைத்த அவர், இத்தகைய பங்கேற்பு நமது தேர்தல் நடைமுறையில் அனைவரையும் உள்ளடக்கியதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார். லண்டனில் இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாய்லுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது திரு பிர்லா, இந்தக் …

Read More »

கிராமப்புற, பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூக-பொருளாதார மாற்றத்திற்கு முக்கியமானதாகும்: மக்களவைத் தலைவர்

பெண்களுக்கு அதிகாரமளித்தல், குறிப்பாக கிராமப்புற, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது  சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக அமையும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.  தூய்மையான குடிநீர், துப்புரவு, கல்வி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் கிராமப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் பெண்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய கைவினைப் பொருட்கள்,  ஆன்லைன் வர்த்தகங்கள், உள்ளூர் உற்பத்தி …

Read More »

நாடாளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பாகும்: மக்களவைத் தலைவர்

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், ஒழுங்கையும்  காக்க வேண்டியது அனைத்து உறுப்பினர்களின் கூட்டுப் பொறுப்பு என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று குறிப்பிட்டுள்ளார். 18-வது மக்களவையின் (குளிர்கால கூட்டத்தொடர்) மூன்றாவது கூட்டத்தொடர் இன்று முடிவடைந்த நிலையில், நாடாளுமன்றத்தின் எந்த வாயிலிலும் தர்ணாக்கள் அல்லது ஆர்ப்பாட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என்று அவர் வலியுறுத்தினார். அத்தகைய விதிமுறைகள் மீறப்பட்டால், அதன் கண்ணியத்தையும் ஒழுங்கையும் பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை உண்டு என்று அவர் மேலும் கூறினார். அனைத்து உறுப்பினர்களும், அனைத்து …

Read More »