மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (என்சிடிசி) 91-வது பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கூட்டுறவுத் துறை மூலம் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார். கூட்டுறவு இயக்கத்தின் மூலம் நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவர அரசு உறுதிபூண்டுள்ளது என்று அவர் கூறினார். கூட்டுறவின் மூலம் நாட்டை தற்சார்புடையதாக மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாகவும், இந்த திசையில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் திரு அமித் ஷா கூறினார். தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் வெற்றி, ஊரகப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அதன் திறனில் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். இரண்டாம் கட்ட வெண்மைப் புரட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் பால் கூட்டுறவு அமைப்புகளை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களை உருவாக்க தேசிய பால்வள வாரியமும் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகமும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்த முன்முயற்சி, வெண்மைப் புரட்சியை முன்னோக்கி நகர்த்துவது மட்டுமல்லாமல், பழங்குடி சமூகங்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும் என்று அவர் கூறினார். கூட்டுறவு சங்கங்களை ஒருங்கிணைப்பதில் தேசிய கூட்டுறவு தரவுத்தளத்தின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார். தொடக்க வேளாண் கடன் சங்கங்களை (பிஏசிஎஸ்) வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வதில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகமும், கூட்டுறவு அமைச்சகமும் முக்கியப் பங்காற்றும் என்று அமைச்சர் கூறினார். தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து கூட்டுறவு பயிற்சித் திட்டத்தை கூட்டுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டங்களுடன் மாநில, மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு உதவுவதும், பிஏசிஎஸ்-ஸை வலுப்படுத்துவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும் என அவர் தெரிவித்தார். கூட்டுறவு பயிற்சித் திட்டம் பங்கேற்பாளர்களுக்கு விலைமதிப்பற்ற நேரடி அனுபவத்தைப் பெற உதவும் என அவர் கூறினார். நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்த கூட்டுறவு பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு அமித் ஷா, கூட்டுறவுகளுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார்.
Read More »வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக வர்த்தக செயலாளர் நார்வே பயணம்
வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால், மூத்த அதிகாரிகளுடன் 2024 நவம்பர் 22 அன்று நார்வே நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக, பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (டிஇபிஏ TEPA) நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கமான இஎஃப்டிஏ-வில் (EFTA) உள்ள நாடுகளுக்கு இந்தியச் சந்தையை விரிவுபடுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டதாக இந்தப் பயணம் அமைந்தது. டிஇபிஏ (TEPA) மார்ச் 2024-ல் கையெழுத்திடப்பட்டது. டிஇபிஏ என்பது நான்கு வளர்ந்த நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்ட ஒரு நவீன வர்த்தக ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்கு ஊக்கமளிப்பதுடன், இளம் திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும். நார்வேயிடமிருந்து 114 துறைகளுக்கான உறுதிமொழிகளை இந்தியா பெற்றுள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைகள், வணிக சேவைகள், தனிப்பட்ட, கலாச்சார, விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், பிற கல்வி சேவைகள், ஒலி-ஒளி சேவைகள் போன்ற நமது முக்கிய துறைகளில் ஏற்றுமதியை டிஇபிஏ ஊக்குவிக்கும். உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு, உற்பத்தி, இயந்திரங்கள், மருந்துகள், ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல், போக்குவரத்து, வங்கி, நிதி சேவைகள், காப்பீடு போன்ற துறைகளில் உள்நாட்டு மயமாக்கலை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியாஆகியவற்றுக்கு டிஇபிஏ உத்வேகம் அளிக்கும். இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் இளம் ஆர்வமுள்ள தொழிலாளர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை டிஇபிஏ துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோர்வே வர்த்தக சம்மேளனம், கப்பல் கட்டுவோர் சங்கம், உள்ளிட்டவற்றின் வர்த்தக பிரதிநிதிகள், பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றன. குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் தொழில், நுகர்வோர் பொருட்கள், பசுமை ஹைட்ரஜன், ஜவுளி, கடல் உணவு, சுரங்கம், தகவல் தொழில்நுட்பம், பரஸ்பர ஆர்வமுள்ள பிற துறைகள் தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது. அடுத்த 3-4 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்திலிருந்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் போது நார்வே தொழில்துறைக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் இருப்பதாக வர்த்தகச் செயலாளர் எடுத்துரைத்தார்.
Read More »ஆசியான்-இந்தியா வர்த்தக ஒப்பந்த கூட்டுக் குழுவின் 6-வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது
6-வது ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தக் கூட்டுக் குழு மற்றும் மறுஆய்வு குறித்த விவாதங்களுக்கான தொடர்புடைய கூட்டங்கள் நவம்பர் 15 முதல் 22 வரை புது தில்லி வணிஜ்ய பவனில் நடைபெற்றன. 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டுக் குழு கூட்டத்திற்கு இந்திய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், மலேசிய நாட்டின் முதலீடு, வர்த்தகம், தொழில் அமைச்சகத்தின் திருமதி. மஸ்துரா அஹ்மத் முஸ்தபா கியோர் தலைமை தாங்கினர். புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய அனைத்து 10 ஆசியான் நாடுகளின் முன்னணி மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். சந்தை அணுகல், தோற்ற விதிகள், தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப விதிமுறைகள், சுங்க நடைமுறைகள், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வர்த்தக தீர்வுகள் மற்றும் சட்ட மற்றும் நிறுவன விதிகள் தொடர்பான அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கூட்டுக் குழுவின் கீழ் 8 துணைக் குழுக்கள் உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது 8 துணைக்குழுக்களும் கூடின. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, 21வது ஆசியான்-இந்தியா பொருளாதார அமைச்சர்கள் கூட்டம் செப்டம்பர் 2024 மற்றும் 21வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, 2024 அக்டோபரில் லாவோசின் வியண்டியானில் நடைபெற்றது. இந்த இரண்டு கூட்டங்களிலும் பொருளாதார அமைச்சர்கள் மற்றும் பிரதமர்கள்/தலைவர்கள் கூட்டுக் குழு பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவும், 2025 -ல் மறுஆய்வு முடிவடையும் நோக்கில் செயல்படவும் வலியுறுத்தியுள்ளனர். கட்டண பேச்சுவார்த்தைகளை தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆசியான் பிரதிநிதிகளின் புது தில்லி விஜயம் மற்றும் அவர்களின் இருப்பு ஆகியவை தாய்லாந்து மற்றும் இந்தோனேசிய குழுக்களுடன் இருதரப்பு வர்த்தக பிரச்சனைகள் பற்றிய விவாதத்திற்காக இருதரப்பு சந்திப்புகளை கூட்டுவதன் மூலம் பயன்படுத்தப்பட்டது. இந்திய மற்றும் ஆசியான் தலைமைப் பேச்சுவார்த்தையாளர்கள் விவாதத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகளில் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்காக ஒரு தனி சந்திப்பையும் நடத்தினர். ஆசியான் ஒரு குழுவாக இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளது. இந்தியாவின் உலகளாவிய வர்த்தகத்தில் சுமார் 11% பங்கு இதில் உள்ளது. 2023-24ல் இருதரப்பு வர்த்தகம் 121 பில்லியன் டாலராக இருந்தது. 2024 ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் 73 பில்லியன் டாலரை எட்டியது. கூட்டுக்குழு கூட்டத்தின் மறுஆய்வு, ஆசியான் பிராந்தியத்துடனான வர்த்தகத்தை நிலையான முறையில் மேம்படுத்துவதில் ஒரு படியாக இருக்கும். கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 2025 -ல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தடைபெறும்.
Read More »அபேடா, எம்பிஇடிஏ ஆகியவற்றுடன் இணைந்து இந்திய கடல் உணவு நிகழ்வு – பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகம் நடத்தியது
பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகம் நவம்பர் 20 அன்று இந்திய கடல் உணவு நிகழ்வின் இரண்டாவது பதிப்பை நடத்தியது. இது புது தில்லியின் வேளாண் – பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேனா (APEDA), கொச்சியில் உள்ள கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான எம்பிஇடிஏ (MPEDA) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்தியாவின் மிகச்சிறந்த சமையல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வு வணிகப் பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகள், கடல் உணவு இறக்குமதியாளர்கள், அரசு வர்த்தக நிறுவனங்கள், தூதரக பிரதிநிதிகள் உட்பட 120-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். பெல்ஜியம், லக்சம்பர்க், ஐரோப்பிய யூனியனுக்கான இந்திய தூதர் திரு சௌரப் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கலாச்சார, வர்த்தக உறவுகளை வளர்ப்பதில் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறை செயலாளர் திரு சுனில் பர்த்வால், இந்தியாவின் துடிப்பான வர்த்தக சூழலையும் ஐரோப்பிய யூனியனுடன் அதன் வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் பற்றி எடுத்துரைத்தார். இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி இரட்டிப்பாகி, 7.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பையும், 17.81 லட்சம் மெட்ரிக் டன் அளவையும் எட்டியுள்ளது. வெனாமி இறால்களின் ஏற்றுமதி நான்கு மடங்காக அதிகரித்து, உயர்தர கடல் உணவு தயாரிப்பாக உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 500 நிறுவனங்களுடன், இந்தியாவின் கடல் உணவு பதப்படுத்தும் திறன் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
Read More »ஆரோக்கியம் மிக முக்கியமானது; அது தனிநபர், சமூக உற்பத்தித்திறனுடன் நேரடியாக தொடர்புடையது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
ஒரு தனிநபரின் ஆரோக்கியம், தனிநபரின் உற்பத்தித்திறனுடனும் சமூகத்தின் ஒட்டுமொத்த திறனுடனும் நேரடி தொடர்பு உடையது என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியம் என்பது தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக நலத்திற்கும் அவசியம் என்பதால் ஆரோக்கியம் மிக முக்கியமானது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 64-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், மருத்துவ வல்லுநர்கள் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறார்கள் என்றார். மேலும் மனிதகுலத்தில் ஆறில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் பாரதத்தில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். சுகாதாரம் என்பது ஒரு தெய்வீக பங்களிப்பு எனவும் அது ஒரு சேவை என்றும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்பு என்பது வர்த்தகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ஆரோக்கியமான சமுதாயத்தின் அவசியத்தை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாம் அதிவேக பொருளாதார எழுச்சியையும், வியக்கத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பெற்று வருகிறோம் என்றார். ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் ஒன்றாக இருந்த பாரதம், இப்போது ஐந்து பெரிய உலகளாவிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது எனவும் இது விரைவில் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த லட்சியத்தை நிறைவேற்ற நமது தனிநபர் வருமானத்தை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். மக்கள் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் இருந்தால் மட்டுமே இதை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு ஆதரவளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்திய திரு ஜக்தீப் தன்கர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை நாம் வலுவாக ஆதரிக்க வேண்டும் என்றார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உயர்ந்தவை என்ற கட்டுக்கதையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார். நமது புனித நூல்களில் நல்ல ஆரோக்கியம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக் காட்டிய திரு ஜக்தீப் தன்கர், நமது வேதங்கள், நமது புராணங்கள், நமது உபநிடதங்கள் ஞானத்தின் தங்கச் சுரங்கம் என்றார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் ஷிவ் சரின், மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் சுதிர் கோகலே, ஜோத்பூர் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ஜி.டி.பூரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »केंद्रीय मंत्री शिवराज सिंह चौहान यांच्या हस्ते ‘नयी चेतना 3.0 – पहल बदलाव की’ या लिंगाधारित हिंसेविरुद्ध सुरु केलेल्या राष्ट्रीय अभियानाची 25 नोव्हेंबर 2024 रोजी नवी दिल्ली येथे होणार सुरुवात
केंद्रीय ग्रामविकास, कृषी व शेतकरी कल्याण मंत्री शिवराज सिंह चौहान यांच्या हस्ते ‘नयी चेतना– पहल बदलाव की’ या अभियानाच्या तिसऱ्या वर्षीच्या कार्यक्रमाची म्हणजेच लिंगाधारित हिंसेविरुद्ध सुरु केलेल्या राष्ट्रीय अभियानाची 25 नोव्हेंबर 2024 रोजी नवी दिल्ली येथील संसद मार्गावरील, आकाशवाणीच्या रंग भवन सभागृहात सुरुवात होणार आहे. केंद्रीय महिला आणि बालविकास मंत्री अन्नपूर्णा देवी देखील या लिंगाधारित हिंसेचे …
Read More »“मला माझ्या चित्रपटाद्वारे माझ्या राष्ट्राची अस्सलपणाची होत असलेली हानी दाखवायची होती:” ‘द स्लगार्ड क्लॅन’ चे दिग्दर्शक रास्टिस्लाव बोरोस यांचे मनोगत
वाढत्या भांडवलशाही आणि उपभोगवादामुळे स्लोव्हाकिया हे एक युवा राष्ट्र आपला अस्सलपणा गमावत आहे, याविषयीची खंत ‘द स्लगार्ड क्लॅन’ या चित्रपटाचे दिग्दर्शक रास्टिस्लाव बोरोस यांनी आज व्यक्त केली. भारताच्या 55 व्या आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवात – इफ्फीमध्ये त्यांनी प्रसार माध्यमातील प्रतिनिधींशी संवाद साधला. यावेळी ते म्हणाले, “मला माझ्या राष्ट्राचा आत्मा दाखवायचा होता. …
Read More »यार्ड 80 (एलएसएएम 12) चे वितरण
दिनांक 22 नोव्हेंबर 2024 रोजी मुंबईत नौदल गोदीत एलएसएएम 12 (यार्ड 80) या सहाव्या क्षेपणास्त्र आणि दारुगोळा वाहक (एमसीए) बार्जचा समावेश समारंभ पार पडला. पश्चिमी नौदल कमांड मुख्यालयातील कमांड रेफिट अधिकारी सीएमडीई अभिरूप मजुमदार यांच्या अध्यक्षतेखाली हा समारंभ पार पडला. दिनांक 19 फेब्रुवारी 2024 रोजी विशाखापट्टणम् येथील सिकॉन इंजिनियरिंग प्रोजेक्ट्स या जहाजबांधणी एमएसएमई कंपनीशी आठ एमसीए बार्जच्या बांधणीचा करार करण्यात आला. …
Read More »व्यापार व आर्थिक भागीदारी कराराच्या (टीईपीए) अंमलबजावणीसाठी केंद्रीय वाणिज्य सचिवांची नॉर्वे भेट
केंद्रीय वाणिज्य व उद्योग मंत्रालयातील वाणिज्य विभाग सचिव सुनील बर्थवाल यांच्यासह विभागाच्या अनेक ज्येष्ठ अधिकाऱ्यांनी काल, 22 नोव्हेंबर 2024 रोजी नॉर्वेला भेट दिली. व्यापार व आर्थिक भागीदारी करारातील (टीईपीए) उद्दिष्ट्ये पूर्ण करण्यासाठी प्रयत्न करणे, तसेच भारतातून वस्तू व सेवांच्या निर्यातीसाठी ईएफटीए देशांमधील मोठी बाजारपेठ खुली करून 100 अब्ज डॉलर्सच्या गुंतवणुकीची …
Read More »आसियान-भारत वस्तू व्यापार कराराबाबतच्या संयुक्त समितीची सहावी बैठक नवी दिल्ली येथे संपन्न
नवी दिल्ली येथील वाणिज्य भवनात आसियान-भारत वस्तू व्यापार कराराबाबतच्या संयुक्त समितीची (एआयटीआयजीए) सहावी बैठक तसेच इतर संबंधित बैठका नुकत्याच पार पडल्या. दिनांक 15 ते 22 नोव्हेंबर 2024 या कालावधीत संपन्न झालेल्या या बैठकांमध्ये एआयटीआयजीएचा आढावा घेण्यासाठी चर्चा झाली. केंद्रीय वाणिज्य विभागाचे अतिरिक्त सचिव राजेश अग्रवाल व मलेशियाच्या गुंतवणूक मंत्रालयातील व्यापार …
Read More »