பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக “இணைப்பு J” எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முயற்சி விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “இணைப்பு J” என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை …
Read More »தங்கம் எதிர்கால விலை 3,573 ரூபாயும், வெள்ளி எதிர்கால விலை 3,928 ரூபாயும் சரிவு: கச்சா எண்ணெய் எதிர்கால விலை 408 ரூபாய் குறைவு
நேச்சுரல் கேஸ் எதிர்கால விலையில் 27.10 ரூபாய் உயர்வு: பருத்தி-கேண்டி எதிர்கால விலையில் 1,760 ரூபாய் சரிவு: மெந்தா எண்ணெயில் 6.50 ரூபாய் மந்தம்: உலோகங்களின் எதிர்கால விலைகளில் எல்லாம் சரிவு: பொருட்கள் எதிர்காலத்தில் 188,600 கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் ஆப்ஷன்களில் 1,402,398 கோடி ரூபாய் புழக்கம் பதிவு: தங்கம்-வெள்ளி எதிர்காலங்களில் 147,636 கோடி ரூபாய் வர்த்தகம்: புல்லியன் இன்டெக்ஸ் புல்டெக்ஸ் எதிர்காலம் 21,323 புள்ளிகள் நிலையில் மும்பை: …
Read More »சண்டிகரில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், இபிஎஃப்ஓ அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவமனை ஆகியவற்றின் செயல்பாடுகளை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்
மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று (22.02.2025) சண்டிகர் சென்று, மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முக்கிய நிறுவனங்களை ஆய்வு செய்தார். தமது பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம், சண்டிகரில் உள்ள இஎஸ்ஐசி (ESIC) மாதிரி மருத்துவமனைக்கு ஆகியவற்றுக்புச் சென்று, அவற்றின் தற்போதைய பணிகளை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். தொழிலாளர் நல அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருக்கு …
Read More »மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, மகாராஷ்டிராவின் புனேவில் மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று (22.02.2025) நடைபெற்ற மேற்கு மண்டல கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிரா, குஜராத், கோவா முதலமைச்சர்கள், தாத்ரா – நகர் ஹவேலி, டாமன் – டையூ நிர்வாகிகள், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை செயலாளர், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகம், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர், மேற்கு மண்டல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சகங்கள், துறைகளின் …
Read More »மத்திய அமைச்சர் எஸ். பூபேந்தர் யாதவ் புதுதில்லியில் தலைமைத்துவ மாநாட்டில் தலைமைத்துவத்தின் முக்கிய மதிப்புகளை எடுத்துரைத்தார்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர், திரு பூபேந்தர் யாதவ், இன்று நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில், பயனுள்ள தலைமை, சுய ஒழுக்கம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் முக்கிய கூறுகளை மையமாகக் கொண்டு நுண்ணறிவுமிக்க உரையை நிகழ்த்தினார். யாதவ் தமது உரையில், தொடர்ச்சியான கற்றல், தனிப்பட்ட நடத்தை மற்றும் தத்துவ நுண்ணறிவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அதிக நன்மைக்காக அர்ப்பணித்த தலைவர்களை உருவாக்குவதில் வலியுறுத்தினார். திரு பூபேந்தர் யாதவ், இறுதி தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார். புகழ் மற்றும் …
Read More »இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியான தர்மா கார்டியனில் பங்கேற்க இந்திய ராணுவக் குழு ஜப்பான் புறப்பட்டது
தர்மா கார்டியன் எனப்படும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் இன்று (22.02.2025) ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயிற்சி 2025 பிப்ரவரி 24 முதல் மார்ச் 09 வரை ஜப்பானின் கிழக்கு புஜி பகுதியில் நடைபெறவுள்ளது. தர்மா கார்டியன் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஜப்பானிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் முந்தைய பதிப்பு ராஜஸ்தானில் 2024 …
Read More »பயிற்சி மையங்களிலிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதன் மூலம் கல்வித் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ 1.56 கோடி நிவாரணத்தை மத்திய அரசு வழங்குகிறது
மத்திய நுகர்வோர் விவகாரத் துறை , கல்வித் துறையில் 600க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களுக்காக ரூ 1.56 கோடியைத் திரும்பப் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ், இன்ஜினியரிங் படிப்பு மற்றும் பிற திட்டங்களுக்கான பயிற்சி மையங்களில் பதிவுசெய்யப்பட்ட இந்த மாணவர்களுக்கு, பயிற்சி நிறுவனங்களால் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றிய போதிலும், முன்னர் பணத்தைத் திரும்பப் பெறுவது மறுக்கப்பட்டது. தேசிய நுகர்வோர் உதவி எண் வழியாக மாணவர்கள் தாக்கல் செய்த குறைகளின் மூலம் இந்த நிவாரணம் சாத்தியமானது, இது …
Read More »எஸ்இசிஎல்-ன் டிப்கா மெகா திட்டத்தில் விரைவான நிலக்கரி ஏற்றுதல் முறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது
நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கோல் இந்தியாவின் துணை நிறுவனமான சவுத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இசிஎல்), ஃபர்ஸ்ட் மைல் கனெக்டிவிட்டி (எஃப்எம்சி) திட்டங்கள் மூலம் அதன் சுரங்கங்களிலிருந்து பாதுகாப்பான, நிலையான நிலக்கரி வெளியேற்றத்திற்கான முயற்சிகளை துரிதப்படுத்துகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, எஸ்இசிஎல்-ன், டிப்கா மெகா திட்டம், 21 பிப்ரவரி 2025 அன்று புதிதாக கட்டப்பட்ட ரேபிட் லோடிங் சிஸ்டம், சைலோஸ் 3, 4 ஆகியவற்றிலிருந்து முதல் நிலக்கரி ரேக்கை ஏற்றியதன் மூலம் வெற்றிகரமாக செயல்பாடுகளைத் தொடங்கியது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற …
Read More »பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் 19-வது தவணையை பீகார் மாநிலம் பாகல்பூரில் பிப்ரவரி 24 அன்று பிரதமர் வெளியிடுகிறார்
பிரதமரின் உழவர் நலத்திட்டத்தின் கீழ் வரவிருக்கும் 19 வது தவணை வெளியீடு குறித்து மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். பிரதமரின் உழவர் நலத்திட்டம், 2019 பிப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்டது. மத்திய அரசின் இத்திட்டத்தின் கீழ், , தகுதியுள்ள விவசாயி குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ரூ. 6,000/- வீதம் , இதுவரை, ரூ. 3.46 லட்சம் கோடி, 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் திரு சிவராஜ் …
Read More »பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார், அசாம் மாநிலங்களுக்குப் பிரதமர் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பீகார் அசாம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23 அன்று மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 24 அன்று காலை 10 மணியளவில், போபாலில் உலக முதலீட்டாளர்கள் உச்சிமாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, அவர் பீகாரின் பாகல்பூருக்குச் செல்கிறார். …
Read More »
Matribhumi Samachar Tamil