முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தில்லி கண்டோன்மெண்டில் உள்ள தேசிய மாணவர் படையினரின் குடியரசு தின முகாமை இன்று (2025 ஜனவரி 13-ம் தேதி) பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் எதிர்காலம் அதன் இளைஞர்களின் கைகளில் உள்ளது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வலியுறுத்தினார். நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் 27% உள்ளனர் என்றும் அவர் கூறினார். நாட்டின் எதிர்காலத்தை …
Read More »மகா கும்பமேளா: எல்லைகளைத் தாண்டிய கொண்டாட்டம்
மஹா கும்பமேளாவுக்கான பினாரின் பயணம் ஒரு கனவுடன் தொடங்கியது. துருக்கி நாட்டின் குடிமகளான அவர், இந்தியாவின் வளமான கலாச்சாரம் பற்றி ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். மஹா கும்பமேளா குறித்த நம்பிக்கை, பாரம்பரியம், மனிதநேயம் ஆகியவற்றின் சங்கமம் பற்றிய கதைகளை நீண்டகாலமாக அவர் கேட்டிருந்தார். 2025 ஜனவரியில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் புனித இடத்தில் நின்றபோது அவரது கனவு நனவாகியது. பினார், பாரம்பரிய இந்திய உடையை அணிந்து, கங்கையில் புனித நீராடினார். இது சனாதன தர்மத்தில் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்ட …
Read More »இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் நாளை (ஜனவரி 14) பிரதமர் பங்கேற்கிறார்
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (ஜனவரி 14) காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150-வது நிறுவன தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். நமது நாட்டை ‘வானிலை சூழலுக்கு தயாராகும் மற்றும் பருவநிலைக்கு உகந்த’ நாடாக மாற்றும் நோக்கத்துடன் ‘மிஷன் மௌசம்’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதிநவீன வானிலை கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்குதல், உயர் தெளிவுத்திறன் கொண்ட வளிமண்டல கணிப்புகள், அடுத்த தலைமுறை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர் செயல்திறன் கணினிகள் ஆகியவற்றை செயல்படுத்துவதன் …
Read More »பிரதமர் ஜனவரி 15 அன்று மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 15 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3:30 மணியளவில், நவி மும்பையின் கார்கரில் இஸ்கான் கோயிலை அவர் திறந்து வைக்கிறார். பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். “சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து …
Read More »தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஓம்ஃபட் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் முன்முயற்சி திட்டங்களை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 13, 2025) குடியரசுத்தலைவர் மாளிகையில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் வருவாய்க்கும் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். இந்தியாவில் பல்வேறு வகையான கால்நடை இனங்கள் உள்ளன. அந்த இனங்கள் அனைத்தும் நாட்டின் வளமான …
Read More »வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து 3,000 துடிப்பான இளம் தலைவர்களுடன் அவர் உரையாடலில் ஈடுபட்டார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இந்திய இளைஞர்களின் துடிப்பான சக்தி, பாரத் மண்டபத்திற்கு உயிர்ப்பையும் சக்தியையும் கொண்டு வந்திருப்பதை …
Read More »பெண்கள், குழந்தைகளுக்கான மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சிந்தனை முகாம்: மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி பங்கேற்பு
மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ராஜஸ்தானின் உதய்பூரில் 2025 ஜனவரி 10 முதல் 12 தேதி வரை சிந்தனை முகாம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. பெண்கள், குழந்தைகள் நலன், மேம்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளை இந்த நிகழ்வு ஒன்றிணைத்தது. ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் …
Read More »மகா கும்பமேளா 2025 ஐ உலகளாவிய சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான முக்கிய முயற்சிகளை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டது
இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், மகா கும்பமேளா 2025-ஐஆன்மிகக் கூட்டங்களுக்கு மட்டுமின்றி, உலகளாவிய சுற்றுலாவிற்கும் ஒரு முக்கிய நிகழ்வாக மாற்ற உள்ளது. இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்தில் அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மகா கும்பமேளா என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் ஒன்றில் நடைபெறும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மதம் …
Read More »உண்மையான பயணிகளுக்கு நியாயமான பயணச் சீட்டு கிடைப்பதை உறுதி செய்ய ரயில்வே உறுதிபூண்டுள்ளது – முறைகேடுகள் குறித்துப் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது ரயில்வே
ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவா கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதன் செய்வதன் மூலம், இந்த தீர்ப்பு இந்திய ரயில்வேயின் பயணச்சீட்டு செயல்முறையின் வெளிப்படைத்தன்மையைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என அவர் கூறினார். அனைத்து முறையான பயணிகளுக்கும் பயணச்சீட்டுகள் கிடைப்பதை …
Read More »
Matribhumi Samachar Tamil