ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், இன்று (21.12.2025) உலக தியான தினத்தைக் கொண்டாடியது. இதனையொட்டி, புகழ்பெற்ற அறிஞர்கள், யோகா பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற சிறப்பு தியான அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உலக அளவில் அதிகரித்து வரும் மன அழுத்தத்தை நீக்குவதில் பழங்கால யோக ஞானம், நவீன மருத்துவ அறிவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு குறித்து இந்த நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் காஷிநாத் சமகாந்தி, இன்றைய போட்டி நிறைந்த உலகில் தியானத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். கிட்டத்தட்ட 60 முதல் 70 சதவீத மன அழுத்தம் தொழில் சார்ந்ததாக உள்ளது என்று அவர் கூறினார். புது தில்லியில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனைச் சேர்ந்த சுவாமி முக்திமாயனந்தா பேசுகையில் நிலையான அமைதிக்காக தியானப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். கர்வம், பொறாமை, அளவுக்கு அதிகமான ஆசைகள் போன்றவற்றை வெற்றி கொள்ள, முறையான பயிற்சிகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார் . பல்வேறு தியான நுட்பங்களின் நடைமுறை செயல் விளக்கங்கள் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன. “ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான இந்தியா” என்ற தொலைநோக்கு பார்வையை மேம்படுத்துவதற்காக அன்றாட வாழ்வில் தியானத்தை இணைப்பதற்கான உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது. யோகா, தியான ஆர்வலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட சுமார் 700 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு தனிநபரும் உயர்ந்த உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு ஐநா பொதுச் சபை, டிசம்பர் 21-ம் தேதியை உலக தியான தினமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें : https://matribhumisamachar.com/2025/12/10/86283/ आप …
Read More »திறமையை வளர்ப்பதில் பல்கலைக்கழகங்களின் பங்கை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் விளக்கினார்
நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் இன்று உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், திறமையான மனங்களை ஊக்குவிப்பது, அவர்களின் திறன்களை வளர்ப்பது மற்றும் அவர்களின் திறனை அங்கீகரித்து மதிக்கும் ஒரு தளத்தை வழங்குவதை விட ஒரு பல்கலைக்கழகத்தால் பெரிய பங்களிப்பு எதுவும் அளிக்க முடியாது என்று கூறினார். கிட்டத்தட்ட 29,000 பட்டம் பெறும் மாணவர்களை வாழ்த்திய அமைச்சர், மாணவர்கள் மற்றும் விருது பெற்றவர்களின் சாதனைகள் விழாவின் உண்மையான கவனமாக அமைகிறது என்று கூறினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் பரந்த அளவிலான வாய்ப்புகளை திரு கோயல் எடுத்துரைத்தார். மாணவர்களில் பாதி பேர் இளம் பெண்கள் என்பதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார், மேலும் 450-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை மாணவர்கள் வைத்திருக்கும் பல்கலைக்கழகத்தின் வலுவான கண்டுபிடிப்பு கலாச்சாரத்தைப் பாராட்டினார். மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்த அமைச்சர், சமத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்புகள் போன்ற அரசியலமைப்பு மதிப்புகளை மீண்டும் வலியுறுத்தினார். கல்வி என்பது பின்தங்கிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கான அடித்தளமாகவே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் சமூகம் மற்றும் தேசத்திற்கான அவர்களின் கடமைகளை மாணவர்களுக்கு நினைவூட்டினார்.
Read More »நாடு முழுவதும் 100 கல்வி நிறுவனங்களில் 5ஜி ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5ஜி நெட்வொர்க்குகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, நாட்டின் 99.9 சதவீத மாவட்டங்களில் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, 5.08 லட்சம் 5ஜி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை துல்லியமான விவசாயம், தொலைதூரக் கல்வி மற்றும் தொலை மருத்துவசேவை போன்ற பயன்பாடுகளுக்கு வேகமான இணைய சேவைகளை வழங்குகின்றன. 5ஜி சேவைகளைப் பரப்புவதற்காக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் 5ஜி …
Read More »ஊட்டச்சத்து அடிப்படையிலான சுகாதாரமான தின்பண்டங்கள் மற்றும் உணவுக் கலவைகளை அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ளது
இந்தியாவின் சிறப்புமிக்க பாரம்பரிய மருத்துவமுறையை உலகறியச் செய்யும் வகையில் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஆரோக்கியமான இந்தியா, உன்னத இந்தியா என்ற கருப்பொருளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கு ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த அரங்கிற்கு வருகை தந்த பார்வையாளர்கள் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி மற்றும் சோவா ரிக்பா போன்ற பாரம்பரிய மருத்துவ …
Read More »குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (19.11.2025) புது தில்லியில் நடைபெற்ற டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் உரையாற்றிய அவர், குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சிறப்பாகத் திகழும் நிறுவனம் என டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தை பாராட்டினார். நவீன உள்கட்டமைப்பு, கல்வித் திறன் மேம்பாடு, பல்துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, புதுமைத்திறன் வளர்ப்பு, தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு போன்ற அம்சங்கள் மூலம் …
Read More »ஐஐடி மாணவர்கள் அதிக அளவில் புதுமைக் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று (17.08.2025) தில்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துக்கு (ஐஐடி) சென்றார். அங்கு அவர் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். உயர்கல்வித் துறை செயலாளர் டாக்டர் வினீத் ஜோஷி, தில்லி ஐஐடி இயக்குநர் பேராசிரியர் திரு ரங்கன் பானர்ஜி ஆகியோரும் மூத்த அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுதந்திர …
Read More »இல்லந்தோறும் மூவண்ணக்கொடி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுவைப் பல்கலைக்கழகம் 2025 ஆகஸ்ட் 13 அன்று தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி நிகழ்வை நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கையில் தேசியக் கொடி ஏந்தி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வலிமையை குறிக்கும் …
Read More »தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் நலன் அலுவலகம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து, “வளர்ச்சியடைந்த பாரத இளைஞர்கள் இணைப்பு” மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம் 2.0-இன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு முதலாவது மரக்கன்றை நட்டுத் தொடங்கிவைத்தார். மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி போன்ற …
Read More »புதுச்சேரி ஜிப்மரில் திறன் மேம்பாட்டு பிரிவு
புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் திறன் மேம்பாட்டு பிரிவினை நிறுவியுள்ளதன் மூலம் மத்திய அரசின் கர்மயோகி இயக்கத்தில் இணைந்துள்ளது. இந்த முயற்சி மத்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம், பணியாளர், பயிற்சித் துறை ஆகியவற்றின் நெறிமுறைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்மயோகி இயக்கம் அரசின் பொது சேவை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவதற்கான திறனை மேம்படுத்த வகை செய்கிறது. இதில் பயிற்சி பெறுவதன் மூலம் …
Read More »புதுவைப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் இனைந்து “கர்மயோகி திட்டம்” மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியது
இந்திய அரசின் திறன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் புதுவைப் பல்கலைக்கழகம் இணைந்து, ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 2, 2025 வரை, மூன்று நாள் முதன்மை பயிற்சியாளர் பயிலரங்கத்தை வெற்றிகரமாக நடத்தியது. இந்த பயிலரங்கு, “கர்மயோகி திட்டம்” என்ற தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய நெறிமுறைகளில் வேரூன்றிய, திறமையான மற்றும் பொறுப்பான பொது நிர்வாக சேவையை உருவாக்குதல் …
Read More »
Matribhumi Samachar Tamil