தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக நகர்ப்புறங்களில் வீட்டுக்கழிவு சேகரிப்பில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கார்பன் உமிழ்வு, காற்று மற்றும் ஒலி மாசுபாடைக் குறைத்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எதிர்காலத்திற்கு வழி வகுத்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூரில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட மின்சார ஆட்டோக்கள் …
Read More »உலகளாவிய நல்வாழ்வு நடவடிக்கைகளில் யோகாவை முன்னிலைப்படுத்துகிறது இந்தியா: ஆயுஷ் துறைச் செயலாளர்
சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் 2025 ஜூன் 17, அன்று உலகளாவிய திட்டமான யோகா பந்தனின் தொடக்க நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. சர்வதேச யோகா தினம் 2025-ன் கீழ் 10 குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளில் ஒன்றான இந்த முயற்சி, யோகா துறையில் நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது. ‘யோகா பந்தன்’ உலகெங்கிலும் உள்ள உலகளாவிய யோகா தூதர்களை ஒன்றிணைத்து, கலாச்சார பரிமாற்றம், கல்வி உரையாடல் மற்றும் யோகா மூலம் …
Read More »புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்களிடையே குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் உரை
சனாதனப் பெருமை வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (17.06.2025) மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், இந்தியாவின் கல்வி வரலாற்றில் தக்ஷஷிலா, நாளந்தா, மிதிலா, வல்லபி என பல சிறந்த கற்றல் மையங்கள் இருந்ததாகக் கூறினார். இந்த நிறுவனங்கள், நமது பாரதத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாக அவர் கூறினார். நாளந்தாவில் 1300 …
Read More »தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர்
“ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்ற வடிவங்களில் நமக்கு அதிக மனித வளங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. நமக்கு அதிக நோயறிதல் மையங்கள், மருந்துகளுக்கான விற்பனை நிலையங்கள், அதிக ஆராய்ச்சி தேவை. பொது மற்றும் தனியார் துறைகளில் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உருவாக வேண்டும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி ஜிப்மரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் போது, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாட்டின் ஆரோக்கியம், வளர்ச்சிக்கு …
Read More »லோதலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் மறுஆய்வுக் கூட்டத்திற்கு டாக்டர் மிஸ்ரா தலைமை தாங்கினார்
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, குஜராத்தில் உள்ள தோலேரா மற்றும் லோதலில் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக இன்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். இந்தத் திட்டங்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்படும், கட்டுமானத்தில் உள்ள அகமதாபாத்-தோலேரா பசுமைவழி விரைவுச் சாலையை டாக்டர் மிஸ்ரா பார்வையிட்டார். அகமதாபாத் – தோலேரா இடையேயான …
Read More »சைப்ரஸ் குடியரசின் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சைப்ரஸ் குடியரசின் அதிபர் திரு நிகோஸ் கிறிஸ்டோடுலிடிஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிபர் மாளிகைக்கு வந்தடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபர் திரு கிறிஸ்டோடுலிடிஸ் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார். முன்னதாக நேற்று பரஸ்பரம், இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு, சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சைப்ரஸ் நாடுகள் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு …
Read More »இந்தியாவுக்கும் சைப்ரஸ் குடியரசுக்கும் இடையேயான விரிவான கூட்டாண்மையை செயல்படுத்துவது குறித்த கூட்டுப் பிரகடனம்
1. ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் மற்றும் நீடித்த கூட்டாண்மை சைப்ரஸ் குடியரசு அதிபர் திரு. நிகோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், சைப்ரசில் 2025 ஜூன் 15 முதல் 16 வரை பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அன்புடன் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸுக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது இந்தியப் பிரதமர் மோடியின் பயணம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான, நீடித்த நட்பை மீண்டும் …
Read More »இந்தியா-சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் பிரதமரும் சைப்ரஸ் அதிபரும் கலந்துரையாடினர்
பிரதமர் திரு நரேந்திர மோடியும் சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸும் லிமாசோலில் சைப்ரஸ் – இந்தியா நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் வட்ட மேசை நிகழ்ச்சியில் கலந்துரையாடினர். வங்கிகள், நிதி நிறுவனங்கள், உற்பத்தி, பாதுகாப்பு, சரக்குப் போக்குவரத்து, கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப சேவைகள், சுற்றுலா போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான பொருளாதார மாற்றம் …
Read More »தந்தையர் தின சிறப்பு நிகழ்ச்சி: சிஹ்சி மருந்தகம் சென்னைவாசிகளுக்கான இரண்டாவது இலவச மருத்துவ முகாமுடன் ‘மக்களுக்கு முன்னுரிமை சுகாதாரம்’ என்ற திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது.
சென்னை, ஜூன் 15. சென்னையின் முன்னணி – சிஹ்சி மருந்தகம், தந்தையர் தினத்தை நினைவுகூரும் வகையில் ஜூன் 15 ஞாயிற்றுக்கிழமை அதன் வளசரவாக்கம் கிளையில் இலவச மருத்துவ முகமை வெற்றிகரமாக நடத்தியது. முகாம் செயல்பட்ட நான்கு மணி நேரத்திற்குல் 200 க்கும் மேற்பட்டோர், பல முதியவர்கள் மற்றும் மகளிர் முகாமில் கலந்து கொண்டதால், இந்த முகாம் மகத்தான வரவேற்பை பெற்றது. பங்கேற்பாளர்களுக்கு, முழுமையான ஒரு பரிசோதனைக்குப் பிறகு, அவர்களின் உடல்நிலை குறித்து …
Read More »சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இன்று, நான் சைப்ரஸ் குடியரசு, கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குகிறேன். சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்கிறேன். சைப்ரஸ், மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியாவுக்கு நெருங்கிய, முக்கியமான நட்பு …
Read More »
Matribhumi Samachar Tamil