शनिवार, फ़रवरी 28 2026 | 04:26:14 PM
Breaking News
Home / अन्य समाचार / டிஜிடல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 மைல்கற்களை எட்டியது – 1.30 கோடி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன

டிஜிடல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 மைல்கற்களை எட்டியது – 1.30 கோடி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன

Follow us on:

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழ்  பிரச்சாரம் 3.0 ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது.  டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழ் சமர்ப்பிப்புகளை எளிமைப்படுத்த தொடங்கப்பட்ட இந்த முயற்சி, குறிப்பாக அதிக வயதுள்ள முதிய ஓய்வூதியதாரர்களுக்கு, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பரவலான ஒத்துழைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அமைத்துள்ளது. அனைத்து அதிகாரிகள், ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் நலச் சங்கங்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள்,  ரயில்வே அமைச்சகம், அஞ்சல் துறை, தொலைத்தொடர்புத் துறை, இபிஎப்ஓ, தனித்துவ அடையாள ஆணையம், டிடிநியூஸ், வானொலி, பத்திரிகை தகவல் அலுவலகம் ஆகியவற்றுக்கு துறை நன்றி தெரிவித்துள்ளது.
முடிவுகள் மற்றும் முக்கிய சாதனைகள்
* டிஎல்சி பிரச்சாரம் 3.0 இந்தியாவில் ஓய்வூதியம் பெறுவோர் நலனை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மிகப்பெரிய பிரச்சாரமாகும், இது 1.30 கோடி டிஜிடல் ஆயுள் சான்றிதழ்களை உருவாக்கியது.
* 39 லட்சத்திற்கும் அதிகமான டிஎல்சிக்கள் , 30%க்கும் அதிகமானவை, முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. டிஎல்சி 2.0 பிரச்சாரத்தை விட 200 மடங்கு அதிகரிப்பு. இந்த அற்புதமான தொழில்நுட்பம் குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது.
* இந்த பிரச்சாரமானது ஒரு செறிவூட்டல் மாதிரியை அடைய பாடுபட்டது, இது நாடு முழுவதும் முழுமையான கவரேஜை இலக்காகக் கொண்டு, ஓய்வூதியம் பெறுபவர்கள்,  பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அளித்தனர். வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் தன்னார்வ நெட்வொர்க்குகளின் கூட்டு முயற்சிகள் பிரச்சாரத்தின் உலகளாவிய கவரேஜ் மாதிரியை ஆதரிக்கின்றன.
* பங்குதாரர்களிடையே விரிவான ஒத்துழைப்பு.  துறையின் அதிகாரிகள் பல பங்குதாரர்களுடன் பிரச்சாரத்தின் வெற்றிக்காக அயராது பாடுபட்டனர்.
* டிடி நியூஸ், அகில இந்திய வானொலி,  சன்சாட் டிவி மற்றும் அச்சு ஊடகமான பிடிஐI, பிஐபி ஆகியவை  இந்தப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டன. இந்தக் குறிப்பிடத்தக்க ஊடகங்கள்  விழிப்புணர்வு ஏற்படுத்தியது, நாடு முழுவதும் 122 மில்லியனுக்கும் அதிகமான மக்களை சென்றடைந்தது.
டிஜிட்டல் அதிகாரமளித்தலுக்கான பார்வை
டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையுடன் இணங்கி, மூத்த குடிமக்கள் வாழ்வதற்கான வசதியை மேம்படுத்தும்  பிரதமரின் முயற்சிகளை இந்தப் பிரச்சாரம் உள்ளடக்கியது. நவம்பர் 24, 2024 அன்று தனது மனதின் குரல் நிகழ்ச்சியில், வயதான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு தொழில்நுட்பம் மூலம் அதிகாரம் அளிக்கும் முயற்சியின் திறனைப் பாராட்டினார், மேலும் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே டிஎல்சிக்களை  சமர்ப்பிக்க முடியும். நவம்பர் 26, 2024 அன்று தமது அரசியலமைப்பு சட்ட தின உரையின் போது, இந்த மாற்றம் மூத்த குடிமக்களுக்கான சிரமத்தை எவ்வாறு நீக்கியது என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார்.
டிஎல்சி பிரச்சாரம் 3.0 நவம்பர் 6, 2024 அன்று புது தில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங்கால்  தொடங்கப்பட்டது.
டிஎல்சி  பிரச்சாரம் 3.0 , 19 வங்கிகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பாதுகாப்பு கணக்குகளின் தலைமை கட்டுப்பாட்டாளர்  மற்றும் பிற முக்கிய துறைகளின் பங்களிப்புகள் உட்பட பல பங்குதாரர் அணுகுமுறையை உள்ளடக்கியது. நாடு முழுவதும் 800+ நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் 1845 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1100 க்கும் மேற்பட்ட நோடல் அதிகாரிகள் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்தனர்.
மாநிலங்களுக்கு இடையே டிஎல்சி விநியோகம்
* மகாராஷ்டிரா: வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் 20 லட்சம் டிஎல்சிக்களை  அடைந்துள்ளது.
* தமிழ்நாடு: புதுமையான அவுட்ரீச் உத்திகள் மூலம் 13 லட்சம் டிஎல்சிகளை உருவாக்கியது.
* உத்தரப் பிரதேசம்: 11 லட்சம் டிஎல்சிகள் செயலாக்கப்பட்டது, தொலைதூரப் பகுதிகளிலும் அணுகலை உறுதி செய்கிறது.
* மேற்கு வங்கம்: 10 லட்சம் டிஎல்சி சமர்ப்பிப்புகள்.
முக்கிய அமைச்சகங்கள்/துறைகள் மூலம் சிறப்பான பங்களிப்புகள்
* சென்ட்ரல் சிவில்: 6 லட்சம் டிஎல்சிகள், முக அங்கீகாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தியது.
* பாதுகாப்பு: 25 லட்சம் டிஎல்சிக்கள்  செயலாக்கப்பட்டு, ஓய்வுபெற்ற ஆயுதப் படை வீரர்களுக்குப் பணிபுரிகின்றன.
* ரயில்வே: ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஆதரவாக 4 லட்சம் டிஎல்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

India Post GDS Recruitment 2026 Notification Banner

बिना परीक्षा सरकारी नौकरी पाने का आखिरी मौका: इंडिया पोस्ट GDS भर्ती 2026 का नोटिफिकेशन आउट, यहाँ देखें पूरी डिटेल्स

नई दिल्ली. भारतीय डाक विभाग India Post ने साल 2026 की अब तक की सबसे …