Thursday, March 26 2026 | 07:18:15 AM
Breaking News

உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் 2025 இல் உலகளாவிய பேரிடர் மீள்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது

உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் (GPDRR) 2025-ஐ முன்னிட்டு ஜெனீவாவில் இன்று நடைபெற்ற ஜி20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழு வட்டமேசை மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா பங்கேற்றார். கலந்துரையாடல்களின் போது, ​​வளர்ச்சித் தேவைகளுடன் பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை முன்னேற்றுவதில் ஜி20-இன் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களுக்கு எதிராக …

Read More »

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அரசு முறை இத்தாலி பயணத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கியுள்ளார்

இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் …

Read More »

புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலிய துணைப் பிரதமருடன் இருதரப்பு பேச்சு நடத்தினர்

புதுதில்லியில் 2025 ஜூன் 04 அன்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான திரு ரிச்சர்ட் மார்லஸுடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்பு பேச்சு நடத்தினார். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை இரண்டு அமைச்சர்களும் கடுமையாகக் கண்டித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்புக்காக தாக்குதல் தொடுக்கும் இந்தியாவின் உரிமையை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் …

Read More »

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்தப்படவுள்ளது

சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 01, 00:00 மணியாக இருக்கும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனிப்பொழிவுப் பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகியவற்றுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரம்பு தேதி 2026 அக்டோபர் 01, 00:00 மணியாக இருக்கும். மேற்குறிப்பிட்ட தேதிகளுடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் நோக்கம் …

Read More »

வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும் – திரு சிவராஜ் சிங் சௌகான்

மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் புனே அருகே நாராயண்கோன் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK) விவசாயிகளுடன் இன்று (03.06.2025) கலந்துரையாடினார். முன்னதாக, மத்திய அமைச்சர் நாராயண்கோன் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, தக்காளி சந்தை, உள்ளூர் பண்ணை வயல்கள், குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சௌகான், வேளாண் விஞ்ஞானிகள் வயல்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்த அவர், விவசாயத் துறையில் வளர்ச்சியும், விவசாயிகளின் செழிப்பும் இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். …

Read More »

வடகிழக்குப்பகுதியில் முதலாவது மண்டல வளாகத்தை நிறுவுகிறது இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம்

உள்ளடக்கிய தேசிய வளர்ச்சியில் பிராந்திய திறன் மேம்பாட்டிற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), வடகிழக்குப்பகுதியில் முதல் முறையாக மேகாலயாவின் நியூ ஷில்லாங் டவுன்ஷிப்பில் பிராந்திய வளாகத்தை நிறுவ உள்ளது. இதற்காக  ஐந்து ஏக்கர் நிலத்தை முறையாக கையகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி வடகிழக்குப் பகுதியில் ஐஐசிஏ-வின் நிர்வாகத்தையும் அதன் வளர்ச்சியையும் வலுப்படுத்தும். நில கையகப்படுத்துதல் தொடர்பான விழாவிற்கு மேகாலயா அரசின் தலைமைச் செயலாளர் திரு டொனால்ட் பிலிப்ஸ் வஹ்லாங் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தீப்தி கவுர் முகர்ஜி ஆகியோர் …

Read More »

மூன்று லட்சம் பேருடன் என்சிசி விரிவாக்கம் செய்யப்படும் – மத்திய இணையமைச்சர் திரு சஞ்சய் சேத்

போபாலில் இன்று  (ஜூன் 03, 2025) நடைபெற்ற தேசிய மாணவர் படையின் (NCC- என்சிசி) சிறப்பு கூட்டு மாநில பிரதிநிதிகள், கூடுதல்/துணைத் தலைமை இயக்குநர்கள் மாநாட்டை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் மூன்று லட்சம் பேருடன் என்சிசி-யை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பல மாநிலங்கள் இதற்கு ஏற்கெனவே தங்கள் ஒப்புதலை வழங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். தேவையான பயிற்சி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தேசத்தை சிறப்பாகக் கட்டமைப்பதிலும் இளைஞர் மேம்பாட்டிலும் என்சிசி எனப்படும் தேசிய மாணவர் படை முக்கியப் பங்கு வகிப்பதாவும் அவர் கூறினார். முன்னாள் ராணுவ …

Read More »

டாக்டர் மன்சுக் மாண்டவியா ‘நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025-ஐ தொடங்கி வைத்து சைக்கிள் ஓட்டுதல் குறித்த சிறப்புப் புத்தகங்களை வெளியிட்டார்

மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் நகர்ப்புறம் குறித்த கலந்துரையாடல் 2025 மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நிலையான நகர்ப்புற எதிர்காலத்தை உருவாக்க இளையோர்கள், நிபுணர்கள் மற்றும் தலைவர்களை ஒன்றிணைப்பதை மூன்று நாள் மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. அப்போது பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, சைக்கிள் ஓட்டுதல் என்பது உடற்பயிற்சியின் சிறந்த வடிவம் என்றும் அது நம்மை ஆரோக்கியமாக்குவது …

Read More »

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் புதிய சீர்திருத்தம்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் முக்கிய சீர்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க அல்லது நீக்க விண்ணப்பதாரர்கள் திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக “இணைப்பு J” எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த முயற்சி விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்துவதையும் தாமதங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “இணைப்பு J” என்பது எளிமைப்படுத்தப்பட்ட பிரமாணப் பத்திரமாகும், இதில் விண்ணப்பதாரர்கள் தங்கள் திருமண நிலையை …

Read More »

தங்கம் எதிர்கால விலை 3,573 ரூபாயும், வெள்ளி எதிர்கால விலை 3,928 ரூபாயும் சரிவு: கச்சா எண்ணெய் எதிர்கால விலை 408 ரூபாய் குறைவு

நேச்சுரல் கேஸ் எதிர்கால விலையில் 27.10 ரூபாய் உயர்வு: பருத்தி-கேண்டி எதிர்கால விலையில் 1,760 ரூபாய் சரிவு: மெந்தா எண்ணெயில் 6.50 ரூபாய் மந்தம்: உலோகங்களின் எதிர்கால விலைகளில் எல்லாம் சரிவு: பொருட்கள் எதிர்காலத்தில் 188,600 கோடி ரூபாய் மற்றும் பொருட்கள் ஆப்ஷன்களில் 1,402,398 கோடி ரூபாய் புழக்கம் பதிவு: தங்கம்-வெள்ளி எதிர்காலங்களில் 147,636 கோடி ரூபாய் வர்த்தகம்: புல்லியன் இன்டெக்ஸ் புல்டெக்ஸ் எதிர்காலம் 21,323 புள்ளிகள் நிலையில் மும்பை: …

Read More »