பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் நிர்வாக விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து …
Read More »ஏழு ஆண்டுகளில் ரூ.34,300 கோடி நிதி ஒதுக்கீட்டில் “முக்கிய கனிமங்களுக்கான தேசிய இயக்கத்திற்கு” மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 16,300 கோடி ரூபாய் செலவிலும் பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.18,000 கோடி முதலீட்டுடனும் “முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களுக்கான தேசிய இயக்கத்தை”த் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் ஒரு பகுதியாகவும், உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில்கள், தூய எரிசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவள தாதுக்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் அத்துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் …
Read More »பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை …
Read More »வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவுக்கு பிரதமர் வாழ்த்து
வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகள், பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு, உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று கூறினார். இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் தனியார் துறையின் வளர்ந்து வரும் பங்களிப்பை குறிப்பிட்ட பிரதமர், விண்வெளி ஆய்வில் நாடு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து சமூக ஊடக …
Read More »தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளக பயிற்சித் திட்டத்தை தொடங்கியுள்ளது
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு வார குறுகிய கால இணையவழி உள்ளகப்பயிற்சித் திட்டத்தை 2025 ஜனவரி 27 அன்று தொடங்கியது. மனித உரிமைகள், அது தொடர்பான சட்டங்கள் மற்றும் இந்தியாவில் அவற்றின் பயன்பாடு பற்றிய விரிவான புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு கல்வித் துறைகளைச் சேர்ந்த 80 இளங்கலை, முதுகலை மாணவர்கள் இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய தேசிய மனித …
Read More »தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது
தமிழ்நாட்டின் மத்திய பல்கலைக்கழகம் புவிசார் தகவல் குறித்த தேசிய பயிலரங்கை நடத்துகிறது. நேற்று (27.01.2025) தொடங்கிய இந்தப் பயிலரங்கு வரும் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க நிலை பயிற்சியாளர்களுக்கான இந்தப் பயிலரங்கு புவிப்பரப்பு தொழில்நுட்பங்களின் அடிப்படைகளை அறிமுகம் செய்தல், தொலை உணர்வு, புவிசார் வரைபட தகவல் முறை, உலகளாவிய நிலப்பகுதி வழிகாட்டுதல் செயற்கைக் கோள் நடைமுறைகள், ட்ரோன் மூலம் ஆய்வு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்தப் …
Read More »சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி
தமிழ்நாடு அஞ்சல் வட்டம், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்துடன் இணைந்து சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி “TANAPEX 2025” ஐ ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தின் சமுதாயக் கூடத்தில் நடத்துகிறது. “அணிவகுக்கும் அஞ்சல் தலைகள், அணைக்கும் நினைவலைகள்” என்பது இந்தக் கண்காட்சியின் கருப்பொருளாகும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என்.முருகானந்தம், 29-ம் தேதி, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி மாரியம்மா தாமஸ் முன்னிலையில், “டான்பெக்ஸ் 2025” அஞ்சல் தலை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியின் …
Read More »மதுரையில் வருமான வரி செலுத்துவோருக்கான மையம்
மதுரையில் வருமான வரி செலுத்துவோர் மையம் நிறுவப்படுவதை அறிவிப்பதில் வருமான வரித்துறை மகிழ்ச்சியடைகிறது. இது 2025 ஜனவரி 29 முதல் 31 வரை செயல்படும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோருக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகள், வளங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான துறையின் செயல்பாட்டில் ஒரு பகுதியாகும். வரி செலுத்துனர் மையத்தின் அம்சங்கள் வரி செலுத்துவோர் மையத்தில் இடம்பெறும் அரங்குகள் வரி செலுத்துவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: வரி தொடர்பான அத்தியாவசியத் தகவல்களின் ஆதாரமாக இவை செயல்படும். வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்புகளை திறம்பட வழிநடத்த துல்லியமான மற்றும் …
Read More »பாலகாட் சுரங்கத்தில் 76-வது குடியரசு தின விழா தேசபக்தியுடன் கொண்டாடப்பட்டது
ஒற்றுமை மற்றும் தேசபக்தி உணர்வுகளோடு மாங்கனீஸ் தாது (இந்தியா) லிமிடெட் அதன் பாலகாட் சுரங்கத்தில் நாட்டின் 76 வது குடியரசு தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. இந்நிறுவனத்தின் தலைவர் திரு அஜித் குமார் சக்சேனா தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன் கொண்டாட்டங்கள் தொடங்கின. அவருடன் நிதித்துறை இயக்குநர் திரு ராகேஷ் துமானே; திரு எம்.எம்.அப்துல்லா, இயக்குநர் (உற்பத்தி மற்றும் திட்டமிடல்); திருமதி ரஷ்மி சிங், இயக்குநர் (வர்த்தகம்), திருமதி சுஷ்மா …
Read More »இந்திய புள்ளியியல் நிறுவனத்தை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக மாற்ற நடவடிக்கை
தொலைநோக்கு பார்வை கொண்ட புள்ளியியல் நிபுணர் பேராசிரியர் பிரசாந்தா சந்திர மஹலானோபிஸ்-ஸால் 1931-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐஎஸ்ஐ), புள்ளிவிவர ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1959-ம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்ட இந்நிறுவனமானது புள்ளியியல் முறைகளை மேம்படுத்துவதிலும், பல்வேறு பிரிவுகளில் அவற்றின் பயன்பாடுகளிலும் முன்னோடியாக உள்ளது. ஐ.எஸ்.ஐ கவுன்சில் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் …
Read More »
Matribhumi Samachar Tamil