मंगलवार, दिसंबर 30 2025 | 11:22:58 AM
Breaking News
Home / Tag Archives: vice president (page 2)

Tag Archives: vice president

‘குடும்ப ஆலோசனை’ என்பது இந்தியக் கலாச்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு: குடியரசு துணைத்தலைவர்

உஜ்ஜைனில் இன்று நடைபெற்ற 66-வது அகில இந்திய காளிதாஸ் விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், சமூகத்தில் ‘குடும்ப ஆலோசனை’ (குடும்பங்கள் மற்றும் குடும்ப மதிப்புகளை வலுப்படுத்துதல்) என்பதில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். குடும்ப ஆலோசனை நமது நாட்டின் தன்மையில் உள்ளடக்கியது என்றும் அது நமது கலாச்சாரத்தின் முக்கிய கொள்கை என்றும் அவர் கூறினார். நாம் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தாவிட்டால், வாழ்க்கை எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கும்? என்று அவர் கேள்வி எழுப்பினார். நமது சுற்றுப்புறத்தில் யார் இருக்கிறார்கள், நம் சமூகத்தில் யார் இருக்கிறார்கள், அவர்களின் இன்ப துன்பங்கள் என்ன, அவர்களுக்கு நாம் எவ்வாறு உதவ முடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது என்று அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் எந்திரதனத்துடன், நம் அன்புக்குரியவர்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு இருக்கும் இந்தக் காலத்தில், குடும்பம் பராமரித்தால் மட்டுமே நாடு செழிக்கும். நம்மை நாமே பராமரித்துக் கொண்டால் நாடு செழிக்கும். இதுதான் நமது கலாச்சாரத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று அவர் குறிப்பிட்டார். குடிமக்களின் கடமைகள் குறித்து  வலியுறுத்திய அவர், உரிமைகளை வலியுறுத்துவதன் மூலம் மட்டுமே எந்த சமூகமும் நாடும் செயல்பட முடியாது. நமது அரசியலமைப்பு நமக்கு உரிமைகளை வழங்குகிறது, ஆனால் நாம் அந்த உரிமைகளை நமது கடமைகளுடன் சமநிலைப்படுத்த வேண்டும் என்று அவர். கூறினார். குடிமக்களுக்கு பொறுப்புகள் உள்ளன என்றும் இந்த நாளில், அது குறித்து சிந்திக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். நாம் ஒரு மாபெரும் இந்தியாவின் குடிமக்கள் என்றும் இந்தியத்தன்மை என்பது நமது அடையாளம் என்றும் அவர் தெரிவித்தார். நமது கடமைகளை நிறைவேற்றுவதே சிறந்த வழி என்று அவர் கூறினார். இளைய தலைமுறையினரிடையே நற்பண்புகளை வளர்ப்பதற்கு குடிமைக் கடமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய குடியரசு துணைத்தலைவர், குழந்தைகள்தான் நமது எதிர்காலம் என்று கூறினார். அவர்களின் பண்புகளில் கவனம் செலுத்தி, நன்னெறி மீதான நம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இதுவே நமது முதன்மையான பொறுப்பாகும் என்று குறிப்பிட்டார். குழந்தைகள் மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, அதிகாரிகளாகவோ அல்லது தொழில்முனைவோர்களாகவோ மாற வேண்டும் என்று கற்பனை செய்து ஆசைப்படுவது மிகவும் நல்லது என்றாலும்   குழந்தைகள் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக இருப்பதன் மதிப்பைப் புரிந்துகொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்றும் நல்ல குடிமக்களாக வளர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Read More »

சகிப்புத்தன்மை என்பது சமூக நல்லிணக்கத்தின் பிரிக்க முடியாத அம்சம்: குடியரசு துணைத் தலைவர்

குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் , “சகிப்புத்தன்மை என்பது ஒரு நல்லொழுக்கம். இது நமது நாகரிகத்தின் நெறிமுறைகளில் ஆழமாகப் பதிந்துள்ளது. இது சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கத்தின் முன்மாதிரியாகும். இது சமூக நல்லிணக்கத்தின் பிரிக்க முடியாத அம்சமாகும்’’ என்று கூறியுள்ளார் . புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற மகாராஜா அக்ரசென் தொழில்நுட்பக் கல்விச் சங்கத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய திரு. தன்கர், “சமூக நல்லிணக்கம் இல்லாமல், மற்ற அனைத்தும் பொருத்தமற்றதாகிவிடும். வீட்டில் அமைதி இல்லையென்றால், எவ்வளவு செல்வம் இருந்தாலும், வீடு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் பலனில்லை. சமூக நல்லிணக்கம் நமது அணிகலன். இதை நாம் பல நூற்றாண்டுகளாக பார்த்து வருகிறோம்’’ என்று கூறினார். உங்கள் பெரியவர்கள், உங்கள் அண்டை வீட்டார், நீங்கள் வாழும் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆகியோருடன்  நீங்கள் சகிப்புத்தன்மையுடன் இருந்தால், அதை விட ஆனந்தம் இருக்கமுடியாது. சகிப்புத்தன்மையுடன் இருங்கள்; அது எப்போதும் பலனளிக்கும். 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் ஒரு பகுதியாக நாம் இருக்கிறோம் என்று அவர்  கூறினார். உரிமைகளுடன் ஒரு குடிமகனாக கடமைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை  அவர் வலியுறுத்தினார். நமது உரிமைகள் குறித்து மிகவும் கவனமாக இருக்கிறோம், ஆனால் ஒவ்வொரு உரிமையும் உங்கள் கடமையால் தகுதி பெறுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்கு அப்பாற்பட்டு தேசத்தின் நலன் இருப்பதைப் போலவே, உங்கள் ஒவ்வொரு உரிமையும், உங்கள் அடிப்படை உரிமையும் உங்கள் பொறுப்பால் மீறப்படுகிறது. உரிமைகளை விட கடமைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். மற்றவர்களின் கருத்தைக் கேட்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய குடியரசுத் துணைத் தலைவர், மாற்றுக் கருத்தைக் கேட்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, பேசும் நபரும் தங்கள் சொந்த கருத்தை வெளிப்படுத்துகிறார். அநேகமாக இளம் சிறுவர்களே, சிறுமிகளே, மற்ற கண்ணோட்டங்களும் செழுமையானதாகவும் சரியானதாகவும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள் என அவர் கூறினார். யாராவது தங்கள் கருத்தை வெளிப்படுத்தும்போது, அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒருபோதும் கட்டாயமில்லை – இல்லை, அது தேவையில்லை. ஆனால் அவர்களின் கருத்தைக் கேட்காமல், அதைப் பிரதிபலிக்காமல், அதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது – இது நமது நாகரிகத்தின் ஒரு பகுதி அல்ல. கருத்துக்கள் வேறுபடும், ஆனால் மாறுபட்ட கருத்துக்கள் ஆற்றலின் ஒரு வடிவமாகும், இது தனிநபர்களை சரிசெய்ய அனுமதிக்கிறது. வேறு எதுவும் இல்லாவிட்டாலும், அது நாணயத்தின் மறுபக்கத்தை உங்களுக்குக் காட்டுகிறது. எனவே, உங்கள் குரல் நாண்கள் உடனடியாக செயல்படுவதற்கு முன்பு தயவுசெய்து உங்கள் காதுகளை இரவல் கொடுங்கள் என்று  அவர் கேட்டுக் கொண்டார். புதிதாக தொடங்கப்பட்டுள்ள உள்ளகப் பயிற்சித் திட்டம் மற்றும் தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றைப் பாராட்டிய திரு தன்கர், “நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டு, மூன்று தசாப்தங்களாக தீவிர விவாதங்களுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை உருவானது.  அனுபவ கற்றல், விமர்சன சிந்தனை, ஆராய்ச்சிக்கான தொழில்துறை-கல்வி கூட்டாண்மையை செயல்படுத்துதல் மற்றும் கடந்த பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான உள்ளகப் பயிற்சிக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புதிய வழிமுறை ஆகியவை ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஒருங்கிணைப்பு, இளம் சிறுவர் மற்றும் சிறுமிகள், தொழில் முனைவோர் திறன்கள் மற்றும் கல்வி மட்டங்களில் வடிவமைப்பு சிந்தனை ஆகியவற்றை மாணவர்களுக்கு ஒரு சாத்தியமான தொழில் பாதையாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என அவர் தெரிவித்தார். அரசியல், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்தின் உந்து சக்தியாக இளைஞர்கள் உள்ளனர் என்று கூறிய திரு தன்கர், கடலிலும், நிலத்திலும், ஆகாயத்திலும், ஆகாயத்திலும் வியக்கத்தக்க வகையில் செயல்படும் பாரதத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். கடலில் நீலப் பொருளாதாரம் உள்ளது. இது விண்வெளி பொருளாதாரத்தைப் போலவே வாய்ப்புகளின் காட்சிகளை உங்களுக்கு வழங்குகிறது  என்றார். நீங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்கலாம், நமது  தொழில்முனைவு காரணமாக தவிர்க்கக்கூடிய இறக்குமதியைக் குறைப்போம். இது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும். கோடிக்கணக்கான அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்துவோம். நம் மக்களுக்கு இங்கு ஆயிரக்கணக்கில் வேலை கிடைக்கும்.  எனவே, பொருளாதாரம் பற்றி நீங்கள் நினைக்கும் போது, சுதேசி பற்றி சிந்திக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன். சுதேசி என்பதே நமது அடிப்படை தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.  எந்தவொரு நிறுவனத்திலும் உள்கட்டமைப்பை விட ஆசிரியர்களின் முக்கியத்துவம் அவசியமாகும். ஒரு நிறுவனம் என்பது உள்கட்டமைப்பை விட ஆசிரியர்களால் வரையறுக்கப்படுகிறது. உள்கட்டமைப்பு என்பது சமூகத்தின் தேவை, நிறுவனத்தின் தேவை ஆனால் ஆசிரியர்கள் அதன் வாசம் போன்றவர்கள் என்று அவர்கூறினார். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மகேஷ் வர்மா, மேட்ஸ் நிறுவனர் மற்றும் ஆலோசகர் டாக்டர் நந்த் கிஷோர் கார்க், மேட்ஸ் தலைவர் திரு வினீத் குமார் லோஹியா, மாணவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Read More »

संशोधन आणि नाविन्य हीच विकसित राष्ट्राचे ध्येय साध्य करण्याची गुरूकिल्ली : उपराष्ट्रपती

“संशोधन आणि नावीन्य हीच विकसित राष्ट्राचे ध्येय साध्य करण्याची गुरूकिल्ली आहे, असे प्रतिपादन उपराष्ट्रपती जगदीप धनखड यांनी केले. “संशोधन आणि नवोन्मेषाच्या क्षेत्रात आपण किती अव्वल आहोत, यावरून जागतिक समुदायासमोर आपले कौशल्य सिद्ध होते,” असेही ते म्हणाले. शैक्षणिक संस्थांनी “नवोन्मेष आणि संशोधनाची मूस” म्हणून आपल्या क्षमतेचा उपयोग करण्याचे तसेच कॉर्पोरेट संस्थांनी भरीव योगदानाद्वारे या …

Read More »

பாரதம் தற்போது காலனிய மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு, முந்தைய முக்கிய காலனிய சிந்தனைகளை புறந்தள்ளுகிறது – குடியரசு துணைத்தலைவர்

காலனிய மனப்பான்மையை பாரதம் விரைவாக தூக்கி எறிந்து வருகிறது என்றும் முந்தைய காலனிய சிந்தனைகள் மற்றும் சின்னங்களை தற்போது நாம் புறந்தள்ளி வருகிறோம் என்றும், இந்திய பொது நிர்வாகம் காலனிய மனப்பான்மையிலிருந்து விலகி, சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது விருப்பங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இந்திய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாகக் கழகப் பொதுக்குழுவின் 70-வது ஆண்டுக் கூட்டத்தில் …

Read More »

ಧರ್ಮವು ಭಾರತೀಯ ಸಂಸ್ಕೃತಿಯ ಅತ್ಯಂತ ಮೂಲಭೂತ ಪರಿಕಲ್ಪನೆಯಾಗಿದೆ: ಉಪರಾಷ್ಟ್ರಪತಿ

ಭಾರತದ ಉಪರಾಷ್ಟ್ರಪತಿ ಶ್ರೀ ಜಗದೀಪ್ ಧನಕರ್ ಅವರು ಇಂದು ಮಾತನಾಡಿ, ಧರ್ಮವು ಭಾರತೀಯ ಸಂಸ್ಕೃತಿಯ ಅತ್ಯಂತ ಮೂಲಭೂತ ಪರಿಕಲ್ಪನೆಯಾಗಿದೆ, ಇದು ಜೀವನದ ಎಲ್ಲಾ ಅಂಶಗಳನ್ನು ಮಾರ್ಗದರ್ಶನ ಮಾಡುತ್ತದೆ. ಧರ್ಮವು ದಾರಿ, ಮಾರ್ಗ ಮತ್ತು ಗಮ್ಯಸ್ಥಾನ ಮತ್ತು ಗುರಿ ಎರಡನ್ನೂ ಪ್ರತಿನಿಧಿಸುತ್ತದೆ, ಇದು ದೈವಿಕತೆ ಸೇರಿದಂತೆ ಅಸ್ತಿತ್ವದ ಎಲ್ಲಾ ಕ್ಷೇತ್ರಗಳಿಗೆ ಅನ್ವಯಿಸುತ್ತದೆ ಮತ್ತು ನೀತಿಯುತ ಜೀವನಕ್ಕೆ ಕಾಲ್ಪನಿಕ ಆದರ್ಶಕ್ಕಿಂತ ಪ್ರಾಯೋಗಿಕವಾಗಿ ಕಾರ್ಯನಿರ್ವಹಿಸುತ್ತದೆ ಎಂದು ಅವರು ಹೇಳಿದರು. “ಸನಾತನ ಎಂದರೆ ಸಹಾನುಭೂತಿ, ಪರಾನುಭೂತಿ, …

Read More »